ராமாயணத்தில் வரும் கும்பகர்ணன் பற்றி தெரியுமா...?

By Ashok CR

ராவணனின் கொடிய சகோதரனான கும்பகர்ணனை எழுப்ப வேண்டிய கட்டாயத்தை ராமரும் லக்ஷ்மணரும் உணர்ந்தனர். கும்பா என்றால் பானை என பொருளாகும்; அதிலும் ஒருவித தண்ணீர் பானை. கர்ணா என்றால் கேட்பது என பொருளாகும். கும்பகர்ணன் என்பவன் ராட்சசன் போல் மிகப்பெரிய உடலுடன் தொடர்ச்சியாக 6 மாத காலத்திற்கு தூங்குவானாம்.

தூக்கம் களைந்து விழிக்கையில் கண்ணில் படும் அனைத்தையும் உண்ணுவானாம். கும்பகர்ணன் விழிக்கும் போது அவன் முன் யாருமே நிற்க முடியாது என ராமாயணத்தில் கூறப்பட்டுள்ளது. அவன் தூங்க ஆரம்பித்து 6 மாத காலம் முடிவதற்குள் பாதியிலேயே அவனை எழுப்பிய ராவணன் போரில் கலந்து கொள்ளும் படி பரிந்துரைத்துள்ளார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
போருக்கு தயாரான கும்பகர்ணன்

போருக்கு தயாரான கும்பகர்ணன்

கும்பகர்ணன் போருக்கு தயாராகி விட்டதை அறிந்த விபீசணன், "தேவனே, மற்றொரு மிகப்பெரிய ஆபத்து காத்திருக்கிறது. நீங்கள் இதுவரை பார்த்ததிலேயே மிகவும் ஆபத்தான அரக்கன் தான் இந்த கும்பகர்ணன். அதனால் நாம் மிக ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்" என ராமனிடம் கூறினார். ஆன்மீகத்தைப் பற்றி கேள்விப்படும் போது, ஆன்மீக ரீதியான வளர்ச்சியை மறந்து விட்டு, அதனை கொண்டு எப்படி தனக்கு தேவையான சக்திகளை வளர்க்கலாம் என்பதில் தான் குறியாக இருப்பானாம் கும்பகர்ணன்.

கும்பகர்ணனின் குணாதிசயங்கள்

கும்பகர்ணனின் குணாதிசயங்கள்

மிகுந்த உறுதியுடனும், இறைத்தன்மையுள்ள நம்பிக்கையுடனும் விபீசணன், "தேவனே, கும்பகர்ணனின் குணாதிசயங்கள் தான் இவை. அவனை 14 வருடங்களுக்கு இரவும் பகலும் தூங்காமல் இருந்து, 14 வருடங்களுக்கு எதுவுமே உண்ணாமல் இருந்த ஒருவனால் மட்டுமே அவனை கொல்ல முடியும்." என கூறினான். "அப்படிப்பட்ட நபரை நான் எங்கே போய் தேடுவது", என ராமர் குழம்பினார்.

லட்சுமணரின் கூற்று...

லட்சுமணரின் கூற்று...

"நான் தான் அது. கடந்த 14 வருடங்களாக நான் தூங்காமலும், உண்ணாமலும் இருந்து வந்துள்ளேன். நான் தான் அவனுக்கு சவால் இடப்போகிறவன்" என லக்ஷ்மணர் கூறினார். கும்பகர்ணன் உடனான இரண்டாம் நாள் போரின் போது தான் இந்த விஷயம் அவர்களுக்கு கூறப்பட்டது.

ராமர் லட்சுமணனின் திறமையை உணர்ந்த கும்பகர்ணன்

ராமர் லட்சுமணனின் திறமையை உணர்ந்த கும்பகர்ணன்

முதல் நாள் போரின் போது ராமரும் லக்ஷ்மணரும் சக்தி வாய்ந்தவர்கள் என்பதை கும்பகர்ணன் உணர்ந்தான். அவனும் எந்த விதத்தில் குறைந்து போனவன் இல்லை தான் என்றாலும் கூட, ராமரின் தகுதிக்கு அவனால் ஈடாக நிற்க முடியாது. அதனால் தான் வெறுமனே கேட்பதால் மட்டும் ஆன்மீகத்தை அடைய முடியாது என சமய நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பாக லக்ஷ்மணன் தான் அவனுக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கக்கூடும் என்பதையும் அவன் உணர்ந்தான்.

ராவணனிடம் கும்பகர்ணன் கூறியது

ராவணனிடம் கும்பகர்ணன் கூறியது

ஆகவே அவன் தன் சகோதரனான ராவணனிடம் சென்ற போது, ஐந்தாவது மாடியில் போரின் நிலைபாடுகளைப் பற்றி கேட்டு தெரிந்து கொண்டிருந்தான். ஐந்தாவது தளம் என்பது விசுதா சக்கரத்தை குறிக்கும். இது கேட்பது, மாயை ஆகியவற்றின் மையமாகும். தன் சகோதரனிடம் போரின் விவரங்களை விளக்கிய கும்பகர்ணன், "சகோதரனே, நமக்கு மிகப்பெரிய வெற்றி கிடைக்கப்போகிறது. ஆனால் நான் உங்களிடம் ஒன்றை கூற வேண்டும். ராமரும் லக்ஷ்மணனும் மிகப்பெரிய போர் வீரர்களாக உள்ளனர். அவர்களை போன்ற மானிட போர் வீரர்களை இதுவரை நான் கண்டதில்லை. அவர்கள் இருவரும் கடவுள்களின் அவதாரமாக இருப்பார்களோ என்ற சந்தேகம் எனக்கு உள்ளது" என கூறினான்.

கோபம் கொண்ட ராவணன்

கோபம் கொண்ட ராவணன்

இதனை கேட்டு மிகுந்த கோபம் கொண்ட ராவணன், "என் தம்பியிடம் இருந்து இத்தகைய பலவீனமான மற்றும் ஊக்கமற்ற வார்த்தைகளை கேட்க நான் தயாராக இல்லை. நீ ஒரு கோழையைப் போல் பேசுகிறாய். நீ ராவணனின் தம்பி என்பதை மறந்து விடாதே" என கூறினான்.

வருத்தத்துடன் கும்பகர்ணன் கூறியது

வருத்தத்துடன் கும்பகர்ணன் கூறியது

வருத்தமடைந்த கும்பகர்ணன், "அண்ணனே, நான் ஒரு போதும் பலவீனம் அடையவில்லை; கோழையும் ஆகவில்லை. ஆனால் ஒருவர் உண்மையை ஒத்துக் கொள்ள வேண்டும். நான் உங்கள் தம்பி. என்னால் உங்களுக்கு அறிவுரை கூற முடியாது. ஆனால் நான் நாளைக்கு சண்டையிட போகிறேன். நாம் வெற்றி பெற்றால் பரவாயில்லை. ஆனால் நான் இறந்து போனால், நீங்கள் சரணடைந்து இலங்கையை காப்பாற்றுமாறு கேட்டுக் கொள்கிறேன்." என கூறினான். மறுநாள் போரில் கும்பகர்ணன் கொல்லப்பட்டான்.

உருவக அர்த்தம்

உருவக அர்த்தம்

ஒருவன் தூங்கவும் உண்ணவும் மட்டுமே செய்கிறான், அரக்கனின் குணங்களைக் கொண்டுள்ளான்; மற்றவனோ தூங்காமலும் உண்ணாமலும் இருக்கிறான். ஒருவன் என்னவென்றால் 6 மாதங்களுக்கு ஒரு முறை தான் விழிக்கிறான்; ஆனால் மற்றவனோ 14 வருடங்களாக உண்ணாமலும் உறங்காமலும் இருந்து வந்துள்ளான். நம் பிராண வாயுவின் ஓட்டம் சந்திராயன ஓட்டத்தில் (நிலவின் அசைவு) அடங்கியுள்ளது. 14 என்பது உத்தரயானா மற்றும் தக்ஷினயானாவில் சதுர்தசியாகும். இது அமாவாசை அல்லது பௌர்ணமியின் கால சுழற்சியில் பதினான்கு மற்றும் முதல் நாளின் இடைப்பட்ட காலத்தில் ஏற்படும்.

இருளும் ஒளியும்

இருளும் ஒளியும்

அமாவாசை என்பது நிலவே இல்லாதது. பௌர்ணமி என்றால் முழு நிலவாகும். கும்பகர்ணனுக்கும் லக்ஷ்மணனுக்கும் உள்ள வேறுபாடு இந்த இருளும் ஒளியும் தான். வெளிச்சம் மற்றும் மாயை போன்ற ஒளியை கொண்டு இருளை நீக்கி விடலாம். ஆனால் மறுபுறம், இருளால் சிறிதளவு வெளிச்சத்தைக் கூட நீக்க முடியாது. எப்போதும் ஒளிக்கு தான் வெற்றி. ஆனால் அதற்கு பல தடைகளையும் பிரச்சனைகளையும் கடந்து வர வேண்டும். ஆன்மீகத்தைப் பயிற்சி செய்பவர்களுக்கு ஒரு நேர்மையான எச்சரிக்கை: பல எடைகளை கொண்ட கோட்பாடுகளை விட சிறிதளவு பயிற்சி எவ்வளவோ சிறந்தது. பயிற்சி எடுக்க எடுக்க தான் ஒரு மனிதன் சிறந்து விளங்குகிறான். ஆகவே ஆன்மீக சொற்பொழிவுகளை கொஞ்சமாவது கேளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Desktop Bottom Promotion