Latest Updates
-
சூரியன்-ராகு உருவாக்கும் ஷடாஷ்டக யோகத்தால் சகல துன்பங்களையும் அனுபவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
கோலாப்பூரி முட்டை குருமா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சப்பாத்தி, பூரிக்கு டக்கரா இருக்கும் -
22 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் அதிசய முலாம்பழம் - இந்த பழத்தில் அப்படி என்ன ஸ்பெஷல் தெரியுமா? -
கர்நாடகா ஸ்டைல் சிக்கன் தொன்னை பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் அருமையா இருக்கும் -
பணக்காரர்களை விட இந்த குணம் உள்ளவர்கள்தான் சமூகத்திற்கு முக்கியமானவர்களாம் - சாணக்கிய தந்திரம் -
பூரி, சப்பாத்திக்கு ஏற்ற மட்டன் கிரேவி - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க! -
இன்றைய ராசிபலன் 19 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (19 July 2026-25 July 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது..! -
பரோட்டா கடை சிக்கன் சால்னா டேஸ்ட்டா இருப்பதன் ரகசியம் இதாங்க! -
ராகு-கேதுவின் பிடியில் இருந்து விடுபடும் 6 கிரகங்கள்: நாளை முதல் இந்த 3 ராசிக்கு பொற்காலமா இருக்கும்!
13 வயதிலேயே அணுகுண்டு வைத்திருக்கும் வட கொரியாவின் அரியணையில் அமரப்போகும் சிறுமி... என்னலாம் நடக்கபோகுதோ?
தற்போதைய சூழலில் உலகிலேயே மிகவும் மோசமான நாடு என்றால் அது வட கொரியாதான். அதற்கு காரணம் அதன் சர்வாதிகார அதிபர் கிம் ஜாங் உன். இங்கு மக்களுக்கு விதிக்கப்படும் கடுமையான விதிமுறைகளும், சிறிய தவறுகளுக்குக் கூட வழங்கப்படும் கடுமையான தண்டனைகளும் மக்கள் அங்கு வாழ்வதை மிகவும் கடினமானதாக மாற்றியுள்ளது. அதனால்தான் வட கொரியா 'பூலோக நரகம்' என்று அழைக்கப்படுகிறது.
வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் தனது மகள் கிம் ஜு ஏயை தனது அடுத்த வாரிசாகத் தேர்வு செய்யலாம் என்று தென் கொரிய சட்டமன்ற உறுப்பினர்கள் உளவு அமைப்பின் தகவல்களின் அடிப்படையில் வியாழக்கிழமை தெரிவித்தனர். கிம் ஜாங் உன் தனது 13 வயது சிறுமியை நாட்டின் நான்காவது தலைமுறைத் தலைவராக ஒருங்கிணைக்க நடவடிக்கை எடுத்து வருவதாக கூறப்படுகின்றன.

தென் கொரியாவின் தேசிய புலனாய்வு அமைப்பின் ரகசிய மாநாட்டிற்குப் பிறகு தென் கொரிய சட்டமன்ற உறுப்பினர் லீ சியோங்-க்யூன் செய்தியாளர்களிடம் கூறுகையில், "கடந்த காலத்தில், NIS கிம் ஜு ஏயை வாரிசாக அறிவிக்க முயற்சி செய்வதாக விவரித்தது, ஆனால் இன்றுஅவர் 'உள்நாட்டில் நியமிக்கப்பட்ட வாரிசாக நியமிக்கப்பட்ட நிலையில் இருந்தார்' என்று கூறப்படுகிறது.
புதன்கிழமை நடைபெற உள்ள ஆளும் தொழிலாளர் கட்சியின் கூட்டத்தில் கிம் ஜு ஏ கலந்துகொள்கிறாரா, அந்த நிகழ்வில் அவர் எவ்வாறு அழைக்கப்படுகிறார், அவருக்கு வழங்கப்படக்கூடிய ஏதேனும் பட்டங்கள் உட்பட NIS உன்னிப்பாகக் கண்காணிக்கும் என்று சர்வதேச செய்தி நிறுவனம் கூறுகிறது.
கிம் ஜூ ஏ யார்?
வெறும் 13 வயதுடைய கிம் ஜூ ஏ பற்றி அதிகம் தெரியவில்லை. ஏனெனில் வட கொரிய அதிபர் தனது குடும்பத்தினரைப் பற்றி மிகவும் ரகசியமாக வைத்திருக்கிறார். 2013 ஆம் ஆண்டு அமெரிக்க கூடைப்பந்து நட்சத்திரம் டென்னிஸ் ரோட்மேன் வட கொரியாவின் தலைநகர் பியோங்யாங்கிற்கு சென்றபோதுதான் முதல்முறை உலகம் அவரைப் பற்றி தெரிந்து கொண்டது. பின்னர் அவர் தி கார்டியனிடம், "நான் அவர்களின் குழந்தை ஜூ ஏயை தூக்கிக் கொண்டு கிம்மின் மனைவியுடனும் பேசினேன்" என்று கூறினார். அப்போதுதான் கிம் ஜாங் உன்-க்கு மகள் இருப்பதே தெரியவந்தது.
கிம் ஜாங் உன்னுக்கு மூன்று குழந்தைகள் இருப்பதாகவும், ஜூ ஏ அவர்களில் நடுவில் பிறந்தவர் என்றும் நிபுணர்கள் நம்புகின்றனர், ஆனால் எதுவும் உறுதிப்படுத்தப்படவில்லை. இந்த சிறுமி 2022 ஆம் ஆண்டு கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையின் சோதனை ஏவுதலின் போது முதன்முதலில் பொதுவெளியில் தோன்றினார். அதன் பிறகு பல நிகழ்வுகளில் அவரது தந்தையுடன் அவர் இருக்கும் புகைப்படம் வெளிவந்தது.
முதல் வெளிநாட்டு பயணம்
செப்டம்பரில், அவரது முதல் வெளிநாட்டுப் பயணம் என்று நம்பப்படும் வகையில், அவர் கிம் ஜாங் உன்னுடன் பெய்ஜிங்கிற்கு அவரது நகரும் மாளிகையான ரயிலில் பயணம் செய்து ஜி ஜின்பிங்கின் இராணுவ அணிவகுப்பில் கலந்து கொண்டார்.
இந்த சிறுமி பெரும்பாலும் தனது தலைமுடியை நீளமாக வைத்திருப்பதைக் காணலாம், இது வட கொரியாவில் பொதுமக்களுக்கு தடைசெய்யப்பட்டுள்ள ஒன்றாகும். கிம் ஜு ஏ தனது நாட்டில் பெரும்பாலான மக்கள் கற்பனை செய்து கூட பார்க்க முடியாத டிசைனர் ஆடைகளில் வலம் வருகிறார்.
கிம் ஜாங் உன் சகோதரி
வட கொரியாவில் உள்ள பாரம்பரிய பாலின வேறுபாடுகளை கருத்தில் கொண்டு, ஒரு பெண் வட கொரியாவை வழிநடத்த வேண்டும் என்ற கருத்தை நிபுணர்களும் கட்சித் தலைவர்களும் முன்னதாகவே நிராகரித்தனர். இருப்பினும், கிம் ஜாங் உன்னின் சகோதரி - கிம் யோ ஜாங் - பாரம்பரிய விதிகளுக்கு முற்றிலும் மாறுபட்டவர். அவர் தற்போது கொரிய தொழிலாளர் கட்சியின் மத்திய குழுவில் ஒரு மூத்த பதவியை வகிக்கிறார்.
வெளித்தோற்றத்திற்கு மிகவும் ஆரோக்கியமாக காட்சியளிக்கும் கிம் ஜாங் உன், தனது டீன் ஏஜ் மகளை தனது வாரிசாக நியமிப்பதற்கான காரணம் தெளிவாகத் தெரியவில்லை. 1948 இல் வட கொரியா பிரிக்கப்பட்டதிலிருந்து, அது கிம் குடும்பத்தின் ஆண் உறுப்பினர்களால் மட்டுமே ஆளப்பட்டு வருகிறது, நிறுவனர் கிம் இல்-சங்கில் தொடங்கி, அவரது மகன் கிம் ஜாங்-இல் மற்றும் பேரன் கிம் ஜாங் உன் ஆகியோர் ஆட்சி செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.



Click it and Unblock the Notifications