முகலாய பேரரசில் சக்திவாய்ந்த பெண்களாக இருந்தவர்கள் யார் தெரியுமா? அவர்கள் என்ன செய்தார்கள் தெரியுமா?

முகலாயப் பேரரசு இந்திய வரலாற்றில் தவிர்க்க முடியாத ஒரு முக்கியமான பேரரசாகும். முகலாயர்களின் தாக்கம் தற்போது வரை இந்தியாவில் நீடிக்கிறது, இன்னும் பல நூற்றாண்டுகள் கடந்தாலும் நீடிக்கும். முகலாயப் பேரரசு, அதன் கட்டிடக்கலை அற்புதங்கள் மற்றும் கலாச்சார முன்னேற்றங்களுக்காக கொண்டாடப்பட்டது.

முகலாய காலகட்டம் பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் ராஜ்ஜியமாகவும் இருந்தது. வரலாற்றின் போக்கில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்திய சக்திவாய்ந்த பெண்களுக்கான அரசாகவும் முகலாயப் பேரரசு விளங்கியது. முகலாய அரசில் சில பெண்கள் விதிவிலக்காகனவர்களாவும், சக்திவாய்ந்தவர்களாகவும் விளங்கினர்.

Most Powerful Women of the Mughal Empire in Tamil

ஆண்கள் ஆதிக்கம் செலுத்திய சமூகத்தில் சில பெண்கள் அதிகாரத்தின் நுணுக்கங்களை வழிநடத்தினர். அவர்களின் பங்களிப்புகள் அரசியல், கலைகள் மற்றும் சமூக சீர்திருத்தங்கள், பேரரசின் திசையை வடிவமைக்கும் மற்றும் அதன் கலாச்சார பாரம்பரியத்தில் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தும் திறனை வெளிப்படுத்தியது. இந்த பதிவில் முகலாய ராஜ்ஜியத்தில் சக்திவாய்ந்த பெண்களாக இருந்தவர்கள் யாரென்று தெரிந்து கொள்ளலாம்.

மகாராணி நூர் ஜஹான்

மகாராணி நூர் ஜஹான் பேரரசர் ஜஹாங்கீரின் மிகவும் செல்வாக்கு மிக்க மனைவியாக இருந்தார், மேலும் அவரது ஆட்சியின் பிற்பகுதியில் சிம்மாசனத்தை இயக்கும் சக்திவாய்ந்த பெண்ணாக அவர் விளங்கினார். அவர் பேரரசை திறம்பட இணைந்து ஆட்சி செய்ததால் அவரது அரசியல் புத்திசாலித்தனம் தெளிவாகத் தெரிந்தது, மேலும் அவர் பெயரில் நாணயங்கள் அச்சிடப்பட்ட ஒரே முகலாய பேரரசி நூர் ஜஹான்தான்.

நூர் ஜஹான் கலைகளின் புரவலராக இருந்தார், மேலும் அவரது செல்வாக்கு கட்டிடக்கலை வரை நீண்டது, அங்கு அவர் கல்லறைகளில் பளிங்கு பயன்பாட்டைப் புதுமைப்படுத்தினார்.

மரியம் உஸ் ஜமானி

ஜோதா பாய் என்ற பெயரால் அறியப்படும் மரியம் உஸ் ஜமானி, முகலாயப் பேரரசின் தலைமைப் பதவியில் இருந்ததுடன், பேரரசர் அக்பரின் பிரதான இந்து மனைவியாகவும் ஒரு முக்கிய நபராக இருந்தார். ராஜபுத்திர இளவரசியாகப் பிறந்த அவர், அரசியல் கூட்டணி காரணமாக அக்பரை மணந்து, முகலாயப் பேரரசின் அரியணையில் அமரந்த இந்து மகாராணி ஆனார்.

அக்பருடனான அவரது திருமணம், பேரரசின் மத மற்றும் சமூகக் கொள்கைகளில் குறிப்பிடத்தக்க மாற்றங்களுக்கு வழிவகுத்தது. மரியம் உஸ் ஜமானி தனது பேரழகு, கருணை, புத்திசாலித்தனம் மற்றும் நீதிமன்ற விஷயங்களில் செல்வாக்கு ஆகியவற்றால் அறியப்பட்டார்.

ரோஷனாரா பேகம்

பேரரசர் ஷாஜஹான் மற்றும் மும்தாஜஜின் மூன்றாவது மகளாகப் பிறந்த ரோஷனாரா பேகம் தனது குறிப்பிடத்தக்க அறிவுத்திறன் மற்றும் கவிதைத் திறமைக்காக கொண்டாடப்பட்டார். முகலாய வாரிசுப் போரில் அவர் முக்கியப் பங்காற்றினார், தன் சகோதரன் ஔரங்கசீப்பை ஆதரித்தார். அவர் அரியணை ஏறிய பிறகு, ரோஷனாரா பேரரசின் முதல் பெண்மணி அல்லது பாட்ஷா பேகம் மற்றும் சக்திவாய்ந்த அரசியல் பிரமுகர் ஆனார். தற்போது வடக்கு டெல்லியில் அமைந்துள்ள ரோஷனாரா பாக் என்ற நினைவுச் சின்னம் இவரின் பெயரில்தான் உருவாக்கப்பட்டது.

ருக்கையா பேகம்

ருக்கையா பேகம், முதல் மனைவியும், பேரரசர் அக்பரின் முக்கிய மனைவிகளுள் ஒருவருராக இருந்தார், பிறப்பால் அவர் முகலாய இளவரசி ஆவார். அவர் ஹுமாயூனின் இளைய சகோதரரான ஹிண்டால் மிர்சாவின் மகளாவர். ருக்கையா அக்பருக்கு இளம் வயதிலேயே நிச்சயிக்கப்பட்டு, பதினான்கு வயதில் அவரைத் திருமணம் செய்து கொண்டார், ஆனால் அவருக்கு இறுதிவரை குழந்தை பிறக்கவில்லை.

அவரது பிற்கால வாழ்க்கையில், அவர் தனது பேரன் குர்ராமை வளர்த்தார், பின்னாளில் அவர் பேரரசர் ஷாஜஹானாக மாறினார். அவர் சான்-இ-கலான் என்று அழைக்கப்பட்டார், இது சாம்ராஜ்யத்திற்குள் அவரது உயர் நிலையை பிரதிபலித்தது.

ஜெப்-உன்-நிசா

முகலாய அரசவையில் இலக்கிய கலங்கரை விளக்கமாக அறியப்பட்ட ஜெப்-உன்-நிசா ஒரு இளவரசி மட்டுமல்ல, இந்திய வரலாற்றில் புகழ் பெற்ற கவிஞரும் கூட. அவரது படைப்புகள், பெரும்பாலும் "மக்ஃபி" என்ற புனைப்பெயரில் எழுதப்பட்டன, அதன் அர்த்தம் 'மறைக்கப்பட்டவர்' என்பதாகும், அவரின் கவிதைகள் உணர்ச்சி ஆழம் மற்றும் அறிவுசார் செழுமைக்காக கொண்டாடப்பட்டது.

அவர் கலைகளை பாதுகாப்பவராக இருந்தார், கவிஞர்கள் மற்றும் அறிஞர்களை ஊக்குவித்தார், அதன் மூலம் ஒரு சிறந்த கலாச்சார சூழலை வளர்த்தார். அவருக்கு அரச அந்தஸ்து இருந்தபோதிலும், அவர் தனது தந்தையால் சிறையால் வைக்கப்படுவது உட்பட பல தனிப்பட்ட சவால்களை எதிர்கொண்டார்.

பில்கிஸ் மகானி

பில்கிஸ் மகானி என்பது அவரது தூய்மை மற்றும் பிரபுத்துவத்திற்காக மரணத்திற்குப் பின் சூட்டப்பட்ட பெயராகும், அவர் பேரரசர் ஜஹாங்கீரின் மதிப்பிற்குரிய மனைவி மற்றும் ஐந்தாவது முகலாய பேரரசரான ஷாஜகானின் தாயார் ஆவார். மனவதி பாய் என்ற இயற்பெயருடன் பிறந்த, அவர் மார்வாரைச் சேர்ந்த ராஜபுத்திர இளவரசி ஆவார், அவர் முகலாய அரசவையில் ஆழ்ந்த செல்வாக்கு பெற்றவராக விளங்கினார்.

ஜஹாங்கீருடனான அவரது திருமணம் முகலாயர்களுக்கும் ராஜபுத்திரர்களுக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்திய ஒரு குறிப்பிடத்தக்க அரசியல் கூட்டணியாகும். அவர் கருணை மற்றும் கண்ணியம் கொண்டவராக விளங்கினார், மேலும் அவரது மரணம் முகலாய அரசவையில் ராஜபுத்திர செல்வாக்கு சரிவைக் குறித்தது. ஜஹாங்கீர் அவளுக்கு பில்கிஸ் மக்கானி என்ற பட்டத்தை வழங்கி அவரது நினைவைப் போற்றினார், இதன் அர்த்தம் 'தூய உறைவிடத்தின் பெண்மணி' என்பதாகும்.

குல்பதன் பேகம்

'ஹுமாயுன்-நாமா'வின் ஆசிரியர் குல்பதன் பேகம், பெண்களின் பார்வையில் முகலாய அரசவையின் வாழ்க்கை மற்றும் காலங்கள் குறித்த தனித்துவமான கண்ணோட்டத்தை அவர் வழங்கினார். அவரது நினைவுக் குறிப்புகள் அவரது சகோதரர் ஹுமாயூனின் ஆட்சியின் தனிப்பட்ட மற்றும் அரசியல் நுணுக்கங்களைப் பற்றிய நுண்ணறிவுகளை வழங்கும் மதிப்புமிக்க வரலாற்று ஆவணமாகும். அவரது கதை ஒரு வரலாற்றுக் குறிப்பு மட்டுமல்ல, முகலாய வம்சத்தில் பெண்கள் ஆற்றிய செல்வாக்குமிக்க பங்கிற்கு ஒரு சான்றாகவும் உள்ளது.

Story first published: Wednesday, September 18, 2024, 14:54 [IST]
Desktop Bottom Promotion