Latest Updates
-
ராகி முருங்கைக்கீரை அடையும், வேர்க்கடலை தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
இன்றைய ராசிபலன் 22 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ராஜயோகம் கதவைத் தட்டப்போகுதாம் -
ஆகஸ்ட் 02 செவ்வாய் மிதுன ராசிக்கு செல்வதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சௌ சௌ வாங்குனா இந்த பொருளை சேர்த்து சட்னி அரைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும் -
குருபகவான் கடக ராசியில் அஸ்தமனமாவதால் துரதிர்ஷ்டத்தால் துரத்தப்படப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஈவ்னிங் டைம்ல ந்த செட்டிநாடு உருளைக்கிழங்கு அடையை செஞ்சு கொடுங்க - டேஸ்ட் தாறுமாறா இருக்கும் -
உலகில் எந்த நாட்டில் இன்டர்நெட் மிகவேகமாக உள்ளது தெரியுமா? இந்தியாவின் இன்டர்நெட் வேகம் என்ன தெரியுமா? -
ஆந்திரா பூண்டு மிளகு கார குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவையா, ஆரோக்கியமா இருக்கும் -
எலான் மஸ்க் அவருடைய பணத்தை பிரித்துக் கொடுத்தால் பூமியில் உள்ள ஒவ்வொருவருக்கும் எவ்வளவு கிடைக்கும் தெரியுமா? -
டிபன் சென்டர் டிபன் சாம்பார் ருசியா இருப்பதன் ரகசியம் இதாங்க.. அது என்னன்னு பாத்து ட்ரை பண்ணுங்க..
இந்த கோவில்களில் ஆண்களுக்கு அனுமதி கிடையாது.. ஏன் தெரியுமா?
இந்தியாவில் சில கோவில்களில் பெண்களுக்கு அனுமதி இல்லை என்று கேள்விப்பட்டிருப்பீர்கள்.. ஆனால் ஆண்களுக்கும் அனுமதி இல்லாத கோவில்களும் இங்கு உள்ளன. அது எந்தெந்த கோவில்கள்?அது எங்கு உள்ளது?ஏன் ஆண்களுக்கு அனுமதி இல்லை? என்பது குறித்து இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம் வாங்க...
1. ஆட்டுக்கல் கோயில்
கேரள மாநிலம் திருவனந்தபுரத்திற்கு அருகில் உள்ள கோயில் ஆட்டுக்கல் கோயில். வருடந்தோறும் நடைபெறும் திருவிழாக்கள் மற்றும் ஊர்வலங்களில் பெண்கள் மட்டுமே பங்கேற்பார்கள். இந்த கோவிலில் லட்சக்கணக்கான பெண்கள் பங்கேற்ற பொங்கல் விழா கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்தது. எந்தவொரு மதச் செயலுக்கும் பெண்கள் அதிக அளவில் கூடும் விழாவாக இந்தப் பண்டிகை கருதப்படுகிறது. இங்கு பெண்கள் தேவிக்கு வளையல் அணிவிப்பார்கள். இங்கு ஆண்டுதோறும் ஒரு வாரம் நாரி பூஜை நடைபெறும். பெண்கள் ஒருவாரம் விரதம் இருந்து அம்மனை வழிபடுவார்கள். அப்போது கோவிலில் பெண்கள் மட்டுமே இருக்க வேண்டும். ஆண்கள் இருக்கக்கூடாது.

2. சக்குளத்துகாவு கோவில்
கேரள மாநிலத்தில் ஆலப்புழாவில் இருந்து தென்கிழக்கே 30 கி.மீ தொலைவில் அமைந்துள்ள சக்குளத்துகாவு ஸ்ரீ பகவதி கோவில். இதில் துர்கா தேவி மூலவராக வணங்கப்படுகிறாள். கோயிலின் இருபுறமும் புகழ்பெற்ற நதிகளான பம்பா மற்றும் மணிமாலா ஆறுகள் ஓடுகின்றன. ஒவ்வொரு வருடமும் ஒரு வாரம் அம்மனுக்கு இங்கு பூஜை நடைபெறும். அப்போது கோவிலில் பெண்கள் மட்டுமே இருக்க வேண்டும். ஆண்கள் இருக்கக் கூடாது. பெண்கள் ஒரு வாரம் விரதம் இருந்து அம்மனை வழிபடுவது வழக்கம்.
3. சந்தோஷி மாதா கோவில்
சந்தோஷி மாதா கோவில் வட இந்தியாவில் பிரபலமான கோவில் ஆகும். சந்தோஷி மாதா கோவில் கன்னிப்பெண்களின் விரத முறைகளுக்கு புகழ் பெற்றதாக விளங்குகிறது. இந்த கோவிலில் வாரத்தின் 6 நாட்களில் ஆண்கள் அனுமதிக்கப்படுவார்கள். வெள்ளிக்கிழமை மட்டும் ஆண்களுக்கு இந்த கோவிலில் நுழைய அனுமதி மறுக்கப்படுகிறது. இந்த கோவிலுக்குள் ஆண்கள் அனுமதிக்கப்பட்டாலும், அவர்கள் மிகவும் கடுமையான விதிகளை பின்பற்ற வேண்டும். அதனால் ஆண்கள் யாரும் இங்கு செல்வதில்லை..
4. பிரம்மா கோவில்
இந்த பிரம்மா கோவிலில் ஆண்கள் நுழைக்கூடாது.. பிரம்மாவின் கோவில்கள் மிகவும் அரிது. ராஜஸ்தான் மாநிலம் புஷ்கரில் அப்படி ஒரு கோவில் உள்ளது. இந்தக் கோயிலில் ஆண்களுக்கு அனுமதி இல்லை. காரணம், பிரம்ம தேவன் பிரம்ம யாகம் செய்ய முடிவு செய்யும் போது, சரஸ்வதி தேவி அவர் பக்கத்தில் இல்லை. பிரம்மா காயத்ரி என்ற பெண்ணை மணந்து யாகத்தை முடிக்கிறார். தீரா திரும்பி வந்ததும் சரஸ்வதிக்கு விஷயம் தெரிய வந்து அவளை சபித்தாள். இந்த கோவிலில் ஆண்கள் நுழையக்கூடாது, அவ்வாறு சென்றால், திருமண பிரச்சனைகள் ஏற்படும் என்பது ஐதீகம். அதனால்தான் ஆண்கள் அங்கு செல்லத் துணிவதில்லை.
5. பகதி மாதா கோவில்
நாட்டில் உள்ள 51 சக்தி பீடங்களில் இதுவும் ஒன்று. கன்னியாகுமரியில் உள்ள முக்கியமான கோவில் இதுவாகும். முக்கிய தெய்வம் துர்கா தேவி. அம்மா பகவதி மாதா என்று அழைக்கப்படுகிறார். இந்தக் கோயிலில் ஆண்களுக்கு அனுமதி இல்லை.. கோயில் மூன்று கடல்களால் (வங்காள விரிகுடா, அரேபிய, இந்து) சூழப்பட்டுள்ளது. கோவில் வாசல் வரை பிரம்மச்சாரி அல்லது சன்யாசிகள் மட்டுமே நுழைய அனுமதிக்கப்படுகிறார்கள். திருமணமான ஆண்கள் வளாகத்திற்குள் நுழைய அனுமதிக்கப்படுவதில்லை. சிவபெருமானை திருமணம் செய்வதற்காக பார்வதி மாதா தவம் செய்த தலம் இது என்று கூறப்படுகிறது. அதனால் கன்னிப் பெண்கள் மட்டுமே அதிகமாக இங்கு வருகிறார்கள்..



Click it and Unblock the Notifications