Latest Updates
-
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க..
ஆணுறுப்பை பெரிதாக்க அறுவை சிகிச்சை செய்து கொண்ட ஆண்... அதன்பின் நடந்த நம்ப முடியாத அசம்பாவிதம்...!
இத்தாலியின் டஸ்கனியைச் சேர்ந்த பெயரிடப்படாத நபர், ஆணுறுப்பை பெரிதாக்கும் செயல்முறைக்காக ஒரு காஸ்மெட்டிக் அறுவை சிகிச்சை நிபுணருக்கு 5,000 யூரோக்கள் ($5,400) செலுத்தியதாகக் கூறப்படுகிறது, ஆனால் ஒரு மாதத்திற்குப் பிறகு அவர் சில உடல் அசௌகரியத்தை அனுபவித்ததால் மருத்துவரிடம் புகாரளித்தார். இது ஒரு வலிமிகுந்த பயணத்தின் ஆரம்பம் மட்டுமே என்பதை அவர் அப்போது உணரவில்லை, இது நோயாளியின் ஆரம்ப அறுவை சிகிச்சையை சரிசெய்யும் முயற்சியில் மொத்தம் 12 அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டது.

இத்தாலிய செய்தி ஊடகங்களால் பெறப்பட்ட நீதிமன்ற ஆவணங்களின்படி, அந்த நபருக்கு இரண்டு லிபோஃபில்லிங் ஆப்ரேஷன்கள் செய்யப்பட்டிருந்தன, அதில் அவரது உடலின் பல்வேறு பகுதிகளிலிருந்து கொழுப்பு ஆணுறுப்பின் வடிவத்தை சரிசெய்ய அவரது ஆண்குறிக்கு மாற்றப்பட்டது. துரதிர்ஷ்டவசமாக, அவரின் பிறப்புறுப்பு எதிர்பார்த்த வடிவத்தையும் அளவையும் பெறாததால், அவர் விரும்பிய விளைவை வழங்கவில்லை.
இத்தாலிய செய்தித்தாள் லா ரிபப்ளிகாவின் புளோரண்டைன் பதிப்பு, அந்த நபர் தனது பிறப்புறுப்புகளில் ஏற்பட்ட சேதத்தை சரிசெய்ய பல நடைமுறைகளை மேற்கொண்டதாகக் கூறுகிறது, ஆனால் அவை நிலைமையை மேலும் மோசமாக்கியது. நீதிமன்ற ஆவணங்களில் மேற்கோள் காட்டப்பட்ட நிபுணர்களின் கூற்றுப்படி, இந்த ஆபரேஷனின் போது 1993 முதல் தடைசெய்யப்பட்ட சிலிகான் பயன்படுத்தப்பட்டது. 12 ஆப்ரேஷன்களுக்கு பிறகு அவரது ஆணுறுப்பை சிதைத்து, பாலியல் செயல்பாட்டில் ஈடுபட முடியாத அளவிற்கு சென்ற பிறகு, மீண்டும் ஒரு ஆப்ரேஷன் செய்ய மருத்துவர் பரிந்துரைத்துள்ளார். அதன்பிறகு அவர் மருத்துவர் மற்றும் மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்க முடிவு செய்தார்.
குற்றம் சாட்டப்பட்ட மருத்துவர், அறுவை சிகிச்சையின் முடிவில் நோயாளி முதலில் திருப்தி அடைந்ததாகவும், அதற்கு ஆதாரமாக வீடியோக்களைக் கூட அவருக்கு அனுப்பியதாகவும், அதற்கு முன்பே அவர் ஒப்புதல் படிவத்தில் கையெழுத்திட்டதாகவும் கூறி நீதிமன்றத்தில் வாதாடினார்.
இருப்பினும், பிஸ்டோயா நீதிமன்றம் அவரது கூற்றுக்களை நிராகரித்தது, நோயாளி "அவர் எதிர்கொள்ளும் உடல்ரீதியான ஆபத்துகளைப் பற்றி அறிந்திருக்கவில்லை" என்று தீர்ப்பளித்தது, மேலும் அறுவை சிகிச்சையின் அழகியல் முடிவில் அவரது திருப்தி முற்றிலும் பொருத்தமற்றது, ஏனெனில் " ஆப்ரேஷனின் வெற்றியை நிர்ணயிப்பது மருத்துவமனை மற்றும் மருத்துவரின் வேலை " என்று கூறியுள்ளது.
இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட இரண்டு கிளினிக்குகளும் தங்கள் வசதிகளை மருத்துவருக்கு "கடன்" வழங்கியதாகக் கூறி பொறுப்பைத் தவிர்க்க முயன்றனர், ஆனால் நீதிபதி அவர்கள் மருத்துவரின் பணியால் பயனடைந்தனர், எனவே மருத்துவரின் பொறுப்பையம் பகிர்ந்து கொள்ள வேண்டுமென்று தீர்ப்பளித்தார். இறுதியில், மருத்துவருக்கு 60 சதவீத இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டது, அதே நேரத்தில் கிளினிக்குகள் தலா 20 சதவீதத்தை செலுத்த வேண்டும் என்று தீர்ப்பளித்தது.
இழப்பீடு 153,000 யூரோக்களாக ($165,700) நிர்ணயிக்கப்பட்டது, ஆனால் நோயாளிக்கு சுமார் 110,000 யூரோக்கள் மட்டுமே வழங்கப்பட்டது, ஏனெனில் அவரது பிறப்புறுப்புகளுக்கு ஏற்பட்ட சேதத்தில் 30 சதவிகிதம் அவரது சொந்த தவறு என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது. வீட்டிலிருந்த போது அந்த மருத்துவர் பரிந்துரைத்த ஊசியை தனக்கு தானே போட்டுக்கொண்டதாக அவர் ஒப்புக்கொண்டார், இது குறைபாடு மற்றும் விறைப்புத்தன்மைக்கு பங்களித்தது என்று நீதிமன்றம் முடிவு செய்தது.



Click it and Unblock the Notifications












