Latest Updates
-
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை நோயை குணப்படுத்தும் 1,300 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் பற்றி தெரியுமா? -
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்.. -
1 வருடம் கழித்து மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 15 முதல் இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. -
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்...
கருட புராணத்தின் படி, மரணத்திற்கு பிறகு ஆன்மா 13 நாட்கள் பூமியில் சுற்றித் திரியுமாம் - ஏன் தெரியுமா?
ஆன்மா தொடர்பான பல கேள்விகளுக்கான பதில்கள் கருட புராணத்தில் சொல்லப்பட்டுள்ளன. இப்போது இறந்த பிறகு ஆன்மாவின் பயணம் குறித்த சில தகவல்களை விரிவாக காண்போம்.
இவ்வுலகில் பிறந்த அனைவருக்கும் மரணம் என்பது தவிர்க்க முடியாதது. ஆனால் மரணத்திற்குப் பிறகு ஒருவரின் ஆன்மா எங்கே செல்கிறது என்ற கேள்வி பலரது மனதிலும் எழுவதுண்டு. பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் இந்து தர்ம கீரையில் ஆத்மா ஒருபோதும் இறப்பதில்லை என்று கூறியுள்ளார். இவ்வுலகில் பிறந்தவன் இறப்பது உறுதி. அதேப் போல் இறந்தவன் மீண்டும் பிறப்பதும் உறுதி. வாழ்வில் நல்ல செயல்களை செயல்பவர்களால் மட்டுமே இந்த வாழ்க்கை மற்றும் இறப்பு சுழற்சியில் இருந்து வெளியேறி மறுமைக்கு செல்ல முடியும்.

ஆன்மா தொடர்பான பல கேள்விகளுக்கான பதில்கள் கருட புராணத்தில் சொல்லப்பட்டுள்ளன. இப்போது இறந்த பிறகு ஆன்மாவின் பயணம் குறித்த சில தகவல்களை விரிவாக காண்போம்.

இறந்த பிறகு ஆன்மா 13 நாட்கள் அன்பானவருடன் இருக்கும்
ஒருவர் இறந்த 24 மணிநேரத்திற்கு பிறகு, ஆன்மா 13 நாட்கள் அன்பானவர்களுடன் இருக்கும். 13 நாள் சடங்கு முடிந்த பின், ஆன்மா யமலோகத்திற்கு திரும்பும். அங்கே அந்த ஆன்மா தன் கர்மாவின் பலனை அனுபவிக்க வேண்டும். ஆன்மாவின் திசை கர்மாவின் படி தீர்மானிக்கப்படுகிறது. அதற்கு முன் 13 நாட்களுக்கு இறந்தவரின் உறவினர்கள் பல்வேறு சடங்குகளை செய்து, அவர்களின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்தனை செய்வார்கள்.

இறுதி ஊர்வலத்திற்கு பின் திரும்பி பார்க்கக்கூடாது
கருட புராணத்தின் படி, தகனம் செய்த பிறகு திரும்பி பார்க்கக் கூடாது. ஏனெனில் இறந்தவர்களின் ஆன்மா அப்பகுதியில் உறவினர்களைப் பார்த்து கூட வர ஆசைப்படும். அதனால் தான் தகனத்திற்குப் பிறகு ஒருவர் திரும்பிப் பார்க்கக்கூடாது என்று சொல்கிறார்கள். கருட புராணமானது, இறந்த பிறகு ஆன்மாவை எவ்வாறு கையாள்வது என்பதைப் பற்றியும் கூறுகிறது. ஆன்மா உடலை விட்டு வெளியேறியவுடன், 24 மணிநேரமும் அந்தணர்களுடன் இருக்கும். இதற்கிடையில், ஆன்மா விட்டுச்சென்ற உடல் ஐந்து கூறுகளை ஒன்றிணைக்க பயன்படுத்தப்படுகிறது.

13 நாட்களுக்குப் பிறகு ஆன்மாவுக்கான உணவு
உடலின் முக்கிய கூறுகளில் ஒன்று ஆற்றல். இருப்பினும், உடல் இணைப்பு காரணமாக, ஆன்மா உடலை விட்டு பிரிந்து யம லோகத்தின் பாதுகாவலர்களுடன் செல்ல 13 நாட்கள் ஆகும். இந்த 13 நாட்களில் இறந்தவருக்கு சடங்குகள் மூலம் பிண்டங்கள் வழங்கப்படுகிறது. இந்த பிண்டங்கள் ஆன்மாவின் பயணத்திற்கு உணவாக சேகரிக்கப்படுகிறது. இந்த பயணமானது ஆன்மாவிற்கு மிகவும் வேதனை அளிக்கக்கூடியதாக இருக்கும்.

ஆன்மாவின் பயணம்
இந்து மதத்தின் படி, ஆன்மாவிற்கான சடங்குகளுக்குப் பிறகு, அதாவது 13 நாட்களுக்குப் பிறகு ஆன்மா பல்வேறு இடங்களுக்கு செல்லத் தொடங்குகிறது. தொடர்ச்சியாக பிண்டத்தை வழங்கும் போது, அந்த ஆன்மா தனது பயணத்திற்கு உதவும் ஒரு புதிய உடலை உருவாக்கத் தொடங்கும். யம லோகத்தின் வாயில்காவலர்கள் இரக்கமற்றவர்கள் என்று கூறப்படுகிறது. எனவே காவலர்களின் சித்திரவதைகளைச் சமாளிக்க பிண்டமானது ஆன்மாவுக்கு உதவுகிறது.

ஆன்மா மற்றொரு உலகத்தை அடைய ஒரு ஆண்டு ஆகும்
இறந்த ஆன்மா ஒரு வருடம் வரை பயணம் செய்து கொண்டே இருக்கும். இதில் 40 அல்லது 45 அல்லது 47 நாட்களுக்குப் பிறகு, இறுதி பிண்டம் ஒரு வருடத்திற்கு பிறகு வழங்கப்படும். ஒரு வருடத்திற்கு பின் ஆன்மா தனது பயணத்தை முடித்து, கர்மங்களின் அடிப்படையில் சொர்க்கம் அல்லது நரகத்தை அடையும். இதில் நல்ல கர்மங்களை செய்தவர்கள் சொர்க்கத்திற்கும், கெட்டதை செய்தவர்கள் நரகத்திற்கும் செல்வார்கள்.

அகல் மிருத்யுவுக்கு 13 நாட்களுக்குப் பிறகு ஆன்மாவுக்கு என்ன நடக்கும்?
அகல் மிருத்யு அல்லது காலத்திற்கு முந்தைய மரணம் என்பது இந்து மதத்தின் பொதுவான கருத்துக்களில் ஒன்றாகும். அதாவது ஒருவர் தற்கொலை செய்து கொண்டாலோ அல்லது விபத்துக்களால் இறந்தாலோ, அந்த மரணம் அகல் மிருத்யு என்று கூறப்படுகிறது. பகவத் கீதையின் படி, ஒருவர் தற்கொலை செய்து கொண்டால், மரணத்திற்கு பின் அதிக துன்பங்களை அனுபவிப்பார். ஏனெனில் இம்மாதிரி செய்வது படைத்த பிரம்மனை அவமரியாதை செய்வது போலாகும். அகல் மிருத்யுவின் அடிப்படையில், உடல் இறந்தால் ஆன்மாவின் பயணம் நடைபெறாது. பூமியில் அந்த ஆன்மாவிற்கு விதிக்கப்பட்ட வாழ்நாள் முழுவதும் சுற்றித் திரிய வேண்டும்.



Click it and Unblock the Notifications











