Just In
- 29 min ago குரு பகவானால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன தெரியுமா?
- 1 hr ago மனித இரத்தத்தை விரும்பி சுவைக்கும் ஆபத்தான பாக்டீரியா: ஆய்வில் தெரியவந்துள்ள அதிர்ச்சியளிக்கும் செய்தி...!
- 2 hrs ago சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: ஏப்ரல் 25 முதல் அடுத்த 10 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கப் போகுது.
- 2 hrs ago வீட்டில் பல்லி இருப்பது நல்லதா? கெட்டதா? ஜோதிடம் சொல்வது என்ன?
Don't Miss
- Finance இறந்தவர் திரும்பி வந்த அதிசயம்.. பில்லியனரின் தில்லாங்கடி வேலை.. காதலியுடன் ரகசிய வாழ்க்கை..!
- News ஆட்களை செட் பண்ணி பணம் சப்ளை..ப்ளான் போட்டதே அவங்க தான்.! அண்ணாமலையா? படக்கென பேசிய வானதி சீனிவாசன்!
- Movies கடமையை செஞ்சிட்டேன்.. எங்களை செய்யாம இருங்க.. வாக்களித்த பின் பிரதீப் ஆண்டனி அதிரடி ட்வீட்
- Technology எகிறியது மவுசு.. ரூ.5000 டிஸ்கவுண்ட் உடன்.. மீண்டும் விற்பனைக்கு வந்த Motorola போன்.. என்ன மாடல்?
- Automobiles இந்திய நிறுவனம் தயாரிச்ச வண்டியா இது? முழுக்க முழுக்க மின்சாரத்தில் இயங்கும்! ஹல்க்கைவிட அதிக எடையை சுமக்கும்!
- Sports "மும்பை சூப்பர் கிங்ஸ்"னு பேரை மாத்திக்கலாம்.. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மும்பை ஆக்கிரமிப்பு
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
இறந்த மனித உடல்களில் இருந்து தயாரிக்கப்பட்ட வினோத கருவிகள்!
உடை, ஆபரணங்கள், கட்டிடம், வீடு உபயோக பொருட்கள் போன்றவற்றை எலும்புக் கூடுகள், பற்கள், மனித கூந்தல் பயன்படுத்தி உருவாக்கியுள்ளனர்...
விசித்திரங்கள் நிறைந்த நமது உலகில் கற்பனையில் அடங்காத விஷயங்கள் கூட நடந்தேறி வருகின்றன. இப்படிக் கூடவா செய்வார்கள்? ஏன் இப்படி? என ஆச்சரியத்தை அள்ளித் தெளிக்கும் வகையில் பல சம்பவங்கள் நடந்துள்ளன. அவற்றில் ஒரு வகை தான் இவை.
மனித உடல் பாகங்களை வைத்துக் கொண்டு உலகில் செய்த சில விசித்திர விஷயங்கள். உடை, ஆபரணங்கள், கட்டிடம், வீடு உபயோக பொருட்கள் போன்றவற்றை எலும்புக் கூடுகள், பற்கள், மனித கூந்தல் பயன்படுத்தி உருவாக்கியுள்ளனர்...
எலும்புக்கூடுகள் நிறைந்த சர்ச்!
"The Sedlec Ossuary" என்ற சர்ச் ஒட்டு மொத்த உலகையும் திரும்பி பார்க்க வைக்கும். காரணம் இந்த சர்ச் கட்டிடம் வெளிப்புறம் இருந்து பார்க்க சாதாரணமாக இருந்தாலும். உள்ளே சென்று பார்த்தால் விசித்திரமாக இருக்கும். நான்கு புற சுவர், பில்லர்கள், சீலிங் என எல்லா இடங்களிலும் எலும்புக் கூடுகள் அலங்காரம் தான் இருக்கிறது.
ஆபரணங்கள்!
சிலர் அவர்களது பால் பல்லை பத்திரமாக எடுத்து வைத்துக் கொள்வார்கள். ஆனால், இங்கே பாருங்கள்... பற்களை வைத்துக் கொண்டு கழுத்தில் போடும் சங்கிலி, மோதிரம், காதணி எல்லாம் செய்துள்ளனர்.
யாழ்!
தென் அமெரிக்காவில் 18ம் நூற்றாண்டில் இது மிகவும் சாதாரணம். எலும்புக் எலும்புகூடுகளினால் ஆன யாழ் இசை கருவிகளை போர் வீரர்கள் கையில் வைத்திருப்பார்களாம். மண்டை ஓட்டை பாதியாக அறுத்து அதில் இந்த கருவியை செய்துள்ளனர்.
கூந்தல் சூட்!
மனித முடிகளை கொண்டு The Apex Predator என்ற சூட் தயாரிக்கப்பட்டுள்ளது. பார்க்க அழகாக இருந்தாலும், இது மனித கூந்தலால் ஆனது எனப்படும் போது தான் கொஞ்சம் உதறுகிறது.
பாத்திரங்கள்!
கற்காலத்தில் இருந்த பழக்கம் தான். அப்போது எலும்பு கூடுகளை வைத்து தான் பாத்திரங்கள், போர் கருவிகள் செய்தனர். இதை நாம் ஆறாம் வகுப்பு சமூக அறிவியல் புத்தகத்தில் படித்துள்ளோம்.
ஆனால், 11ம் நூற்றாண்டில் வாழ்ந்த The Aztec இனத்தவர்கள் பெண்களின் எலும்புகளில் இருந்து கத்தி, ஸ்பூன் போன்றவற்றை தயாரித்துள்ளனர்.