Latest Updates
-
ஆகஸ்ட் 13-ல் உருவாகும் லாப திருஷ்டி யோகத்தால் இந்த 3 ராசிக்காரர்கள் ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப் போறாங்களாம் -
ஆமை வடை ரெசிபி - இந்த மாதிரி வடை சுட்டு பாருங்க - மொறுமொறுனு சூப்பராக இருக்கும் -
இந்தியாவில் இயற்கையாக வைரம் கிடைக்கும் ஒரே மாநிலம் எது தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
திருநெல்வேலி ஸ்டைல் அரைச்சுவிட்ட சாம்பார் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
அடுத்தவர் மனைவியை திருடுவது இந்த நாட்டில் வேடிக்கையான விளையாட்டாம் - ஆனா இதுல ஒரு விவகாரமான கண்டிஷன் இருக்கு -
சில்லி கார்லிக் ப்ரைடு ரைஸ் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
காரைக்குடி கார சட்னி - 10 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
சனிபகவான் ரேவதி நட்சத்திரம் செல்வதால் அக்டோபர் மாதம் வரை இந்த 3 ராசிக்காரங்க ராஜாதான் - உங்க ராசி இதுல இருக்கா -
இன்றைய ராசிபலன் 05 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு தங்க மழை கொட்டப்போகுதாம் -
புதன் பெயர்ச்சியால் நாளை முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படப்போகுது..
சாணக்கியா கூற்றின்படி இந்த 4 மனிதர்களுக்கு நீங்கள் உதவியே செய்யக் கூடாது? யார் அவர்கள்?
சாணக்கியா சொல்லும் வாழ்க்கை நியதிபடி இந்த 4 வகையான மனிதர்களுக்கு நீங்கள் உதவியே செய்யக் கூடாது. அவர்கள் எத்தகையவர்கள் என பார்க்கலாம்.
இந்த கால அரசியல்வாதி போலில்லை. பழங்காலத்தில் சாஸ்திரம், அறிவியல், பொருளாதாரம் , தத்துவம் என சகல வித்தைகளிலும் ஞானம் பெற்றவர் சாணக்கியர். அர்த்த சாஸ்திரத்தை எழுதியவர். சந்திர குப்தனின் மகனாவார்.

சாணக்கியரின் அனுபவத்தாலும் நுண்ணிய கூர்திறனாலும் பலவிதங்களில் இவரது அறிவுரை எல்லா மேதைகளாலும் பின்பற்றப்பட்டது. இவருக்கு விஷ்னு குப்தா என்று இன்னொரு பெயரும் இருந்தது.
அவர் குறிப்பிடும் இந்த 4 வகை மனிதர்களுக்கு உதவி செய்வதால் நமக்குதான் பிரச்சனைகள் ஏற்படும். அவர் கூறுவது யாரென்று பார்க்கலாமா.

விசித்திர உலகம் :
உலகமே பல விசித்திரங்களை உள்ளடக்கியது. நல்ல நோக்கத்தோடு செய்யப்படும் விஷயங்கள் நேர்மறை வலிமை பெற்று உங்களை திடமாக்கும்.
தீயவைகளிடம் நாம் நெருங்கும்போது அவற்றின் எதிர்ம்றை நம்மை தாக்கும் என்பது விஞ்ஞானம், ஆன்மீகம் என இரண்டுமே கலந்த உண்மை

புன்னகை :
நம்மை சுற்றியிருப்பவர்கள் யார் என நீங்கள்தான் தீர்மானிக்க வேண்டும். ஒரு சிறு புன்னகையோ, துக்கமோ சுற்றியிருப்பவர்களை ஈர்த்துவிடும். ஆகவே சுற்றி எந்த மாதிரி மனிதர்களை நீங்கள் வைத்திருக்க வெண்டும் என்று முதலில் தீர்மானியுங்கள்.
சாணக்கியரின் கூற்றுப்படி நீங்கள் கீழ்கண்ட மனிதர்களுக்கு உதவியே செய்யக் கூடாது. பாவம் புண்ணியம் பார்த்து செய்தால் அவை உங்கள் வாழ்க்கையில் பரிதாபத்தையே தரும் என்று சொல்கிறார். அவர்கள் யார் என பார்க்கலாமா?

#1- பிரச்சனைகொண்ட மனிதன் :
சிலர் தொடர்ந்து பிரச்சனைகளை சந்தித்துக் கொண்டேயிருப்பார்கள். தீர ஆராய்ந்தால் அவர்களின் குணமே காரணமாகும். மோசமான குணம் கொண்டவர்கள் இப்படி பிரச்சனைகளை சிக்கிக் கொண்டேயிருப்பார்கள். அவர்களுக்கு உதவ முன்வந்தால் நீங்களும் பிரச்சனைகளில் சிக்கும் வாய்ப்புண்டு.

#2- உண்மையில்லாத மனிதன் :
சிலரிடம் உண்மையே இருக்காது. எப்போதும் போலித்தனமான வேஷம் கட்டிக் கொண்டு நல்லவர்களாக பேசுவார்கள். பொய் எப்போதும் பேசுவார்கள். அவர்களுக்கு உதவினால் உங்களை பிரச்சனையில் மாட்டிவிடுவார்கள் என்பது 100 சதவீதம் உண்மை.

#3- கவலை தோய்ந்தவர்கள் :
எப்போதும் ஏதாவது பறிகொடுத்தவர் போல் தனிமையகவும், கவலையாகவுமே சிலர் இருப்பார்கள். எப்போதும் எதிர்மறையாகவே பேசுவார்கள்.
இவர்களை சமாதனப்படுத்தினாலோ அல்லது உதவினாலோ அவர்களின் எதிர்மறை உங்களையும் தாக்கும் அபாயம் உண்டு.
இப்படிப்பட்டவர்கள் ஆண்கள் மீதோ அல்லது பெண்கள் மீதோ விருப்பம் கொண்டவர்களாக இருப்பார்கள். அதற்கு முழுக்க அவர்களின் சுய நலமே காரணமாகும்.

#4- முட்டாள்கள் :
முட்டாள்களுக்கு உதவ நீங்கள் வரிந்து கொண்டு நீங்கள் போனால் நீங்களும் முட்டாளாகிப் போவார்கள். அவர்களுக்கு புரிந்து கொள்ளவும் இயலாது. அவர்கள் உங்களுக்கு பிரச்சனைகளையும் உண்டாக்கிவிடுவார்கள். ஆகவே முட்டாள்களுக்கு உதவுவது ஆபத்தே.



Click it and Unblock the Notifications