Just In
- 2 hrs ago உங்க உடலில் இந்த பிரச்சினை இருந்தால் சர்க்கரை நோயால் உங்க கிட்னி டேமேஜ் ஆகிருச்சுனு அர்த்தமாம்...கவனமா இருங்க!
- 4 hrs ago குறட்டை விட்டு எல்லாரையும் டார்ச்சர் பண்றீங்களா? இந்த உணவுகளை சாப்பிடுவதை நிறுத்துங்க... சீக்கிரம் நின்னுடும்!
- 5 hrs ago இந்த ஆரோக்கியமான உணவுகளை பச்சையாக சாப்பிடுவது உங்கள் இரைப்பையை கடுமையாக பாதிக்கமாம்... ஜாக்கிரதை...!
- 6 hrs ago இஸ்ரேல்-ஈரான் பிரச்சினையால் மூன்றாம் உலகப்போர் வர வாய்ப்பிருக்கா? பாபா வங்காவின் அதிர்ச்சியளிக்கும் கணிப்பு..!
Don't Miss
- News மதுரவாயலில் ஆக்கிரமிப்பு கோவிலை இடித்த அதிகாரிகள்! சிலையை கட்டிப்பிடித்து கதறி அழுத பெண் பக்தர்கள்
- Technology பட்ஜெட்ல பக்குவமா வாங்கலாம்.. ரூ.15000 விலைக்குள்.. பெஸ்ட் கேமரா.. பெர்ஃபார்மென்ஸ் Mobile.. எந்த மாடல்கள்?
- Sports பும்ராவையே மிஞ்சிட்டாரு.. வெறும் 16 ரன்களுக்கு 5 விக்கெட்ஸ்.. கம்பேக்கில் அசத்திய சந்தீப் சர்மா!
- Automobiles ஒரு கிமீக்கு வெறும் ரூ3.3 தான் செலவு! 10 பேர் தாராளமா போகலாம்! டாடா மேஜிக் பை ஃப்யூயல் வந்தாச்சு!
- Movies Durai: தேசிய விருது இயக்குநர் துரை காலமானார்.. பசி படத்தால் கவனம் ஈர்த்தவர்!
- Finance ஓரே அறிவிப்பு, மொத்த முதலீட்டாளர்களுக்கும் ஹேப்பி..!! அம்பானி கொடுத்த டிவிடென்ட் சர்பரைஸ்..!
- Education மாணவர்களுக்கோர் ஓர் நற்செய்தி.. நான்கு ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு படித்தவர்கள் பிஎச்.டி.யில் சேர
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
தங்கள் மரண செய்தியை பதிவு செய்து வரும் சிரியர்கள், அச்சத்தில் உறையும் உலக மக்கள்!
போர் நிலை அதிகரித்து வருவதன் தொடர்ச்சியாக அழிவின் அருகாமையில் அச்சத்தின் பிடியில் சிக்கி தவிக்கும் சிரியர்கள். ட்விட்டரில் தங்கள் மரண செய்திகளை பதிவு செய்து வருகிறார்கள்.
பொன்னாசையும், மண்ணாசையும் எப்போது அதிகமானதோ அப்போது தான் அடிமை படுத்தும் எண்ணம் பிறந்தது, தான் அரசனாக வேண்டும் என்ற கர்வம் முளைத்தது. அதே நேரத்தில் தான் மனிதர்களின் மனதில் மனித நேயம் நோய்வாய்ப்பட்டும் போனது.
இன்று வளர்ச்சி கண்டு வரும் அறிவியல், தொழில்நுட்பம், மருத்துவம், கல்வி என ஒவ்வொன்றுக்கும் பின்னணியில் அதை சார்ந்து முதுகெலும்பாய் இயங்கி வரும் பெரும் வர்த்தகமும் இருக்கிறது.
தக்காளி, வெங்காயம் போல விலைக்கு ஏற்ற தரத்தில் தான் கல்வியும், மருத்துவமும் கிடைக்கிறது. முன்பு மிருகங்களிடம் இருந்து காத்துக்கொள்ள சண்டையிட்டோம். இன்று மனிதர்களை கொல்ல மிருகங்களாய் மாறி போரிட்டுக் கொண்டிருக்கிறோம்.
இரு நாடுகளுக்கு மத்தியில், இரு மனிதர்கள் மத்தியில் எழும் பகைமை பல ஆயிரக்கணக்கான அப்பாவி மக்களின் உயிரை பலிவாங்கிவிடுகிறது.
இதோ சிரியர்கள் ட்விட்டரில் பதிவு செய்து வரும், அவர்களது கடைசி மரண செய்தி....
|
என் பெயர் பானா!
என் பெயர் பானா. என் வயது 7. நான் கிழக்கு அலெப்போ பகுதியில் இருந்து பேசி வருகிறேன். வாழ்வா சாவா போராட்டத்தின் கடைசி தருணத்தில் இருக்கிறேன்.
|
அழுதுக் கொண்டிருக்கிறேன்!
என் அப்பாவிற்கு அடிப்பட்டுவிட்டது. நான் அழுதுக் கொண்டிருக்கிறேன்.
|
நன்றி!
எங்களுக்காக மனித நேயத்துடன் துணை இருந்த அனைவருக்கும் நன்றி. உங்களை மறக்கமாட்டோம்.
|
என் அழுகை கேட்கிறதா?
தன் கடைசி வீடியோ பதிவில். சிரியர்களுக்கு நேர்ந்து கொண்டிருக்கும் கொடுமையை பகிரங்கமாக பகிர்ந்துள்ளார் லினா ஷாமி என்பவர்.
|
ஈவிரக்கமற்ற செயல்!
குழந்தைகள் மருத்துவமனைகள் கூட அழிக்கப்பட்டு வருகின்றன. மக்கள் வீதிகளில் ஒதுங்க இடமின்றி உயிரை இழந்து வருகிறார்கள்.
|
தாக்குதல்!
தொடர் தாக்குதல் நடந்து வருகிறது. இதுவே எங்களது கடைசி செய்தியாக இருக்கலாம். என தாக்குதல் குறித்து பிலால் அப்துல்லா கரீம் என்பவர் பதிவு செய்துள்ள வீடியோ.
|
அங்கும், இங்கும் ஓடுகிறார்கள்!
எல்லா பக்கமும் குண்டுகள் வெடித்துக் கொண்டிருக்கின்றன. மக்கள் எல்லா பக்கமும் சிதறி ஓடிக் கொண்டிருக்கிறார்கள்.
|
எங்களிடம் எதுவும் இல்லை!
பசி, பட்டினியோடு இருக்கிறோம். எங்களிடம் எதுவும் இல்லை. எங்களை படுகொலை செய்துக் கொண்டிருக்கின்றனர் என்று முதியவர் கூறும் காணொளிப்பதிவு.