விளையாட்டு ரூபாய் தாளை கொடுத்து நடிகையை ஏமாற்றிய பலே ஆட்டோக்காரர்!

குழந்தைகள் விளையாடும் பொம்மை விளையாட்டு தாளை கொடுத்து, ஆட்டோக்காரர் பெங்கால் நடிகையை ஏமாற்றிய சம்பவம், மும்பையில் நடந்துள்ளது.

உலகிலேயே தினுசுதினுசாக ஏமாற்றுவது நம்ம ஆட்கள் தான். சில சமயங்களில் கையும் களவுமாக பிடிப்பட்டும் விடுவார்கள். சமீபத்தில் இருவர் 250 ரூபாய் தாளை அச்சடித்து போலீஸ் கையில் சிக்கிறது பரபரப்பை ஏற்படுத்தியதை விட, வயிறு வலிக்க சிரிக்க வைத்தது என்று தான் சொல்ல வேண்டும்.

An Autowala Fooled Actress By Fake Money

ஒருசில மாதங்களுக்கு முன்னர், ஏ.டி.எம் மெஷின் என எண்ணி, பணம் செலுத்தும் மெஷினை ஒரு கும்பல் திருடியது. இதெல்லாம் பார்க்க கொஞ்சம் விளையாட்டாக தான் இருந்தது. குழந்தைகள் விளையாடும் விளையாட்டு பொம்மை தாளை வைத்து ஒரு ஆட்டோக்காரர் நடிகையையே ஏமாற்றியுள்ளார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பெங்கால் நடிகை!

பெங்கால் நடிகை!

மேகா சக்ரபூர்தி என்பவர் பிரபல பெங்கால் நடிகை. இவர் டிவி சீரியல்கள் மற்றும் திரைபடத்தில் நடித்தவர் ஆவார்.

மும்பையில் பயணம்!

மும்பையில் பயணம்!

நேற்று முன்தினம் இரவு பெங்கால் நடிகை மேகா சக்ரபூர்தி மும்பையில் ஒரு ஆட்டோவில் பயணம் செய்துள்ளார். பயணத்தின் முடிவில், கட்டண பணம் செலுத்திவிட்டு மீது பணத்தை வாங்கிவிட்டு தன் இருப்பிடத்திற்கு சென்றுவிட்டார்.

வீட்டில் அதிர்ச்சி!

வீட்டில் அதிர்ச்சி!

வீட்டுக்கு சென்று கையில் இருந்த பணத்தை செக் செய்த பொது தான் மேகா சக்ரபூர்திக்கு தெரிய வந்தது, ஆட்டோக்காரர் கொடுத்தது குழந்தைகள் விளையாடும் விளையாட்டு பணம் என்று.

ஃபேஸ்புக்கில் பதிவு!

ஃபேஸ்புக்கில் பதிவு!

இந்த நிகழ்வை தனது குறித்து நடிகை மேகா சக்ரபூர்தி தனது ஃபேஸ்புக்கில் செய்த பதிவு...

Image Source

இதென்ன புதுசா இருக்கு!

இதென்ன புதுசா இருக்கு!

கள்ளன்நோட்டு கலாச்சாரம் போய், இந்தியாவில் பொம்மை நோட்டு கலாச்சாரம் வந்துவ்விட்டதோ. ஒரு ஆட்டோக்காரர் பொம்மை பணம் கொடுத்து ஒருவரை ஏமாற்றியுள்ளது அதிர்ச்சி அளிக்கிறது.

பெரும்பாலும் இது ஒரே மாதிரி இருக்கிறது. இருட்டில் இதை உடனே கண்டறிவது சற்று கடினம் தான். மக்கள் தான் சூதானமாக இருக்க வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Story first published: Monday, October 17, 2016, 10:30 [IST]
Desktop Bottom Promotion