Latest Updates
-
5 முட்டை இருந்தா பள்ளிப்பாளையம் முட்டை வறுவலை செஞ்சு பாருங்க - காரசாரமா வேற லெவலில் இருக்கும் -
மயில்கள் ஏன் மழை வரும்போது நடனமாடுகிறது தெரியுமா? காரணம் தெரிஞ்சா ஷாக் ஆகிருவீங்க -
சிக்கன் வாங்குனா இந்த மாதிரி தெலங்கானா ஸ்டைலில் மசாலா செஞ்சு பாருங்க - சாதம், டிபனுக்கு அட்டகாசமாக இருக்கும் -
குருபகவான்-செவ்வாய் அரிய சேர்க்கையால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
தென்னிந்தியாவின் சுல்தான் என்று அழைக்கப்பட்ட வலிமையான அரசர் யார் தெரியுமா? -
மட்டன் வாங்குனா.. இப்படி ஒருவாட்டி கிராமத்து ஸ்டைலில் செஞ்சு சாப்பிடுங்க.. தாறுமாறா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 21 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ரொம்ப சந்தோஷமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (21 June 2026-27 June 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கப்போகுது..! -
உங்க ஸ்கின் டைப் சொல்லுங்க.. அரிசி மாவு வெச்சு எப்படி ஃபேஸ் பேக் போடுறது-ன்னு சொல்றோம்.. -
சர்க்கரைவள்ளிக் கிழங்கு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இப்படி ஸ்நாக்ஸ் செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட..
ரயில் டிக்கெட்களின் விலை ஜூலை 1-ஆம் தேதி முதல் உயரப்போகிறது... எந்த டிக்கெட் எவ்வளவு உயரப்போகுது தெரியுமா?
இந்திய மக்களுக்கு அடுத்த பெரிய அதிர்ச்சியான செய்தி வரப்போகிறது. பல ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக பயணிகள் ரயில் கட்டணங்களை உயர்த்த இந்திய ரயில்வே திட்டமிட்டுள்ளது. இந்திய பொருளாதாரத்தின் பெரும்பகுதி ரயில்வே துறையை சார்ந்துள்ளது. தினம்தோறும் கோடிக்கணக்கான மக்கள் ரயில்களில் பயணிக்கின்றனர். இந்திய ரயில்வே டிக்கட் விற்பனை மூலம் குறிப்பிட்ட வருமானத்தைப் பெறுகிறது.
இந்த நிலையில் வரப்போகும் டிக்கெட் கட்டண உயர்வு நிச்சயம் நடுத்தர வர்க்கத்தினருக்கு அதிர்ச்சியளிக்கும் செய்தியாக உள்ளது. இந்த கட்டண உயர்வு ஜூலை 1, 2025 முதல் அமலுக்கு வரும். ஏசி அல்லாத மெயில்/எக்ஸ்பிரஸ் ரயில்களுக்கான பயணிகள் கட்டணம் ஒரு கிலோமீட்டருக்கு 1 பைசா உயர்த்தப்படும் என்று கூறப்படுகிறது.

500 கிலோமீட்டருக்கு அதிகமுள்ள பயணம்
ஏசி வகுப்புகளுக்கான கட்டணம் கிலோமீட்டருக்கு 2 பைசா உயர்த்தப்படும். ஆறுதல் அளிக்கும் வகையில், 500 கிலோமீட்டர் வரையுள்ள பயணத்திற்கு புறநகர் டிக்கெட்டுகள் மற்றும் இரண்டாம் வகுப்பு பயணத்திற்கான கட்டணம் உயர்த்தப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 500 கிலோமீட்டருக்கும் அதிகமான தூரங்களுக்கு, கிலோமீட்டருக்கு அரை பைசாவாக உயர்வு இருக்கும். கூடுதலாக, மாதாந்திர சீசன் டிக்கெட்டில் எந்த உயர்வும் இருக்காது.
ஆதார் அவசியம்
இந்த மாத தொடக்கத்தில், ஜூலை 1, 2025 முதல் தொடங்கும் தட்கல் ரயில் டிக்கெட் முன்பதிவுகளுக்கு ஆதார் அவசியம் என்று இந்திய ரயில்வே முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஜூன் 10, 2025 அன்று வெளியிடப்பட்ட உத்தரவின் மூலம், இந்த புதிய தேவை "தட்கல் திட்டத்தின் பலன்கள் பொதுமக்களால் பெறப்படுவதை உறுதி செய்வதை" நோக்கமாகக் கொண்டுள்ளது என்று ரயில்வே அமைச்சகம் அனைத்து ரயில்வே மண்டலங்களுக்கும் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து இந்திய ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில் "01-07-2025 முதல், தட்கல் திட்டத்தின் கீழ் டிக்கெட்டுகளை இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகத்தின் (IRCTC) வலைத்தளம் அல்லது அதன் ஆப் மூலம் ஆதார் அங்கீகரிக்கப்பட்ட பயனர்களால் மட்டுமே முன்பதிவு செய்ய முடியும்" என்று ரயில்வேயின் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. ஜூலை 15, 2025 முதல், தட்கல் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும் போது, பயணிகள் ஆதார் அடிப்படையிலான OTP-யை சேர்த்து படிவத்தை பூர்த்தி செய்ய வேண்டும் என்றும் அமைச்சகம் அறிவித்துள்ளது.
புதிய கட்டுப்பாடுகள்
புதிய வழிகாட்டுதல்கள் இந்திய ரயில்வேயின் அங்கீகரிக்கப்பட்ட முன்பதிவு முகவர்களுக்கான தட்கல் டிக்கெட் முன்பதிவுகளில் புதிய வரம்புகளை நிறுவியுள்ளன. புதிய அறிவிப்புகளை படி பிரதிநிதிகள் இப்போது முதல் நாள் தட்கல் டிக்கெட்டுகளை முதல் அரை மணி நேரத்திற்குள் முன்பதிவு செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளனர். ஏசி வகுப்பு முன்பதிவுகளுக்கு காலை 10.00 மணி முதல் காலை 10.30 மணி வரையிலும், ஏசி அல்லாத வகுப்பு முன்பதிவுகளுக்கு காலை 11.00 மணி முதல் காலை 11.30 மணி வரையிலும் இந்த கட்டுப்பாடு அமலில் உள்ளது. ரயில்வே தகவல் அமைப்புகள் மையம் (CRIS) மற்றும் IRCTC ஆகிய இரண்டும் தேவையான அமைப்பு மாற்றங்களைச் செய்து இந்த மாற்றங்களை அனைத்து மண்டல ரயில்வே பிரிவுகளுக்கும் தெரிவிக்க வேண்டும் என்று ரயில்வே அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.



Click it and Unblock the Notifications
