Latest Updates
-
25 லட்சம் பண மாலை... கல்வீச்சு, மோதல்! ஹரியானா திருமணத்தில் நடந்த அந்த 'ஷோ-ஷாதி' கலாச்சாரத்தின் கோர முகம்! -
இந்த 4 ராசி பெண்கள் அசாத்திய புத்திசாலிகளாம் - இவங்ககிட்ட பொய் சொல்லி தப்பிக்கவே முடியாதாம் - உங்க ராசி என்ன? -
தித்திக்கும் கர்நாடகா ஸ்டைல் மாம்பழ கேசரி ரெசிபி - செஞ்சு பாருங்க, டேஸ்ட் தாறுமாறா இருக்கும் -
டெல்லி மழையால் மாறிய சூழல்! வீட்டை மாற்றும் அந்த 4 லக்கி செடிகள் இதோ! -
வீட்டில் இந்த செடிகள் இருந்தா போதும்… கோடை வெயிலும் தூசியும் உங்களை நெருங்கவே முடியாது! -
Mother's Day 2026: 35 வயதிற்கு பிறகு பெண்களின் எலும்புகளில் என்னென்ன மாற்றம் ஏற்படும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
பருப்பே இல்லாத அரைச்சுவிட்ட சாம்பார் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
கிழக்கிந்திய கம்பெனி எப்படி 200 ஆண்டுகள் இந்தியாவை ஆண்ட ஆட்சியாளராக மாறியது தெரியுமா? -
வீட்டை குளிர்ச்சியாக வைக்க இந்த செடிகள் போதுமா? பணவரவை அள்ளித்தரும் வாஸ்து ரகசியம் இதோ! -
12 ஆண்டுக்கு பின் குருபகவான் கடக ராசிக்கு செல்வதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா?
இந்தியாவின் பணக்கார கிராமம் இதுதான்... தண்ணீர் பஞ்சத்தால் பாதிக்கப்பட்ட கிராமம் இப்படி மாற இதுதான் காரணமாம்...
இந்தியாவின் முதுகெலும்பே விவசாயமும், கிராமங்களும்தான் என்று மகாத்மா காந்தி கூறியுள்ளார். ஆனால் இந்தியாவில் அத்தியாவசிய தேவைகளும், அடிப்படை வசதிகளும் இல்லாத கிராமங்கள் ஆயிரக்கணக்கில் இருப்பது மிகவும் துரதிர்ஷ்டமானது.
கிராமத்தில் வசிப்பவர்கள் பின்தங்கிய வாழ்க்கை முறையை வாழ்வார்கள் என்ற பொதுவான ஒரு நம்பிக்கை உள்ளது. ஆனால் இதனை பொய்யாக்கும் பல கிராமங்களை நாம் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். இந்தியாவின் ஒரு கிராமம் இதற்கு ஒரு படி மேலே சென்றுள்ளது. இங்கு வாழும் மக்கள் பெரும்பாலும் கோடீஸ்வரர்களாக இருக்கிறார்கள். அந்த கிராமத்தின் பெயர் ஹிவ்ரே பஜார்.

ஹிவ்ரே பஜார் என்பது இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தின் அகமதுநகர் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு கிராமமாகும். அதிக எண்ணிக்கையிலான கோடீஸ்வரர்கள் வசிப்பதால் இந்த கிராமம் இந்தியாவின் பணக்கார கிராமமாக அறியப்படுகிறது. இந்த கிராமத்தில் 305 குடும்பங்கள் வசிக்கின்றன, அவர்களில் 80 பேர் கோடீஸ்வரர்கள். மேலும், 50 குடும்பங்கள் ஆண்டுக்கு ரூ.10 லட்சத்துக்கு மேல் வருமானம் ஈட்டுகின்றன. கிராமத்தின் மொத்த மக்கள்தொகை வெறும் 1250 மட்டுமே.
இதில் கூடுதல் சுவாரஸ்யம் என்னவென்றால் கிராம மக்களின் முக்கிய வருமானம் விவசாயம். 80 மற்றும் 90 களில் கடுமையான வறட்சியின் காரணமாக இந்த கிராமம் ஒரு காலத்தில் வறுமையால் பாதிக்கப்பட்டது, இதனால் கிராம மக்கள் வாழ்வாதாரம் தேடி நகரங்களுக்கு இடம்பெயர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அந்த அளவிற்கு நிலைமை மிகவும் மோசமாக இருந்தது, 1990 இல் இந்த கிராமத்தில் 90% குடும்பங்கள் ஏழைகளாக இருந்தன.
மனம் தளராத ஹிவ்ரே பஜார் மக்கள் ஒன்றிணைந்து 1990 இல் கூட்டு வன மேலாண்மை குழு என்ற குழுவை உருவாக்கினர். இந்த குழுவின் கீழ், அவர்கள் ஷ்ரம்தான் மூலம் கிராமத்தில் கிணறு தோண்டவும், மரங்களை நடவும் தொடங்கினர். கிராமத்தில் அதிக தண்ணீர் தேவைப்படும் பயிர்களை விதைப்பதற்கும் தடை விதித்தனர். இவர்களின் கடின உழைப்பு மற்றும் ஒற்றுமையின் பலனாக தற்போது கிராமத்தில் 300க்கும் மேற்பட்ட கிணறுகள் உள்ளன. ஆழ்குழாய் கிணறு கட்டி முடிக்கப்பட்டதால் நிலத்தடி நீர்மட்டமும் 30 அடியாக உயர்ந்துள்ளது.
கிராமத்தில் உள்ள அனைத்து குடும்பங்களும் விவசாயம் மூலம் மட்டுமே வருமானம் ஈட்டுகின்றனர், மேலும் அவர்கள் ஒவ்வொரு ஆண்டும் காய்கறிகளை பயிரிடுவதன் மூலம் பெரும் வருமானம் ஈட்டுகிறார்கள். ஹிவ்ரே பஜார் கிராமத்தின் தனிநபர் வருமானம், நாட்டின் முதல் 10 சதவீத கிராமப்புறங்களில் சராசரியாக இருக்கும் மாத வருமானம் ரூ.890-யை விட இரண்டு மடங்கு அதிகம்.
கடந்த 20 ஆண்டுகளில் கிராம மக்களின் சராசரி வருமானம் 20 மடங்குக்கு மேல் அதிகரித்துள்ளது. ஹிவ்ரே கிராம மக்களின் ஒற்றுமையால் வறுமை முடிவுக்கு வந்தது. இதனால், மக்கள் நகரங்களை நோக்கி இடம்பெயருவதை நிறுத்தியுள்ளனர். கிராமத்தை விட்டு வெளியேறியவர்களும் தற்போது கிராமத்திற்கே திரும்பி வந்துள்ளனர்.
ஹிவ்ரே பஜார் கிராமத்தின் சர்பாஞ்ச் போபட் ராவ் பவார், தங்கள் கிராமத்தில் நேர்மறையான மாற்றத்தைக் கொண்டு வந்த முக்கியமான நபர்களில் ஒருவர். ஊர் மக்களுக்காக 7 கொள்கைகளை அவர் வகுத்துள்ளார் மற்றும் இங்குள்ள பஞ்சாயத்துக்கான விதிகள் மற்றும் அவுட்லைன்களை ஊர் மக்களே தயாரித்துள்ளனர். ஹிவ்ரே பஜார் கிராமத்தைச் சுற்றியுள்ள மக்களும் அவரிடமிருந்து கற்றுக்கொண்டு விவசாயத்தில் புதிய சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் அவர்களின் வருமானமும் அதிகரித்து வருகிறது.
நமது இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, 24 ஏப்ரல் 2020 அன்று தனது 'மன் கி பாத்' நிகழ்ச்சியில் ஹிவ்ரே பஜார் கிராமத்தைப் பாராட்டினார். கிராம மக்களின் தண்ணீர் மீதான உணர்திறனையும், தண்ணீர் பிரச்சனையைச் சமாளிக்க அவர்கள் பயிர் செய்யும் முறையை மாற்றியதையும் அவர் பாராட்டினார். மேலும் தண்ணீர் தேவைப்படும் பயிர்களை விதைப்பதை தடை செய்த கிராமத்தை அவர் பாராட்டினார்.
ஹிவ்ரே பஜார் கிராமம், மக்கள் தங்கள் நிலைமையை முன்னேற்றிக்கொள்ள எப்படி ஒன்றிணைவார்கள் என்பதற்கு ஒரு சிறந்த உதாரணம். கிராம மக்களின் கடின உழைப்பும், ஒற்றுமையும் கிராமத்தின் அடையாளத்தையே மாற்றியுள்ளது. அவர்களின் வெற்றிக் கதை மற்ற கிராம மக்களைச் சிறப்பாகச் செய்யத் தூண்டுகிறது.



Click it and Unblock the Notifications
