Latest Updates
-
ரவா அடையும், தக்காளி சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 19 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் கதவைத் தட்டப்போகுதாம் -
ஜூன் 30-ல் நடக்கும் ராகு நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
மதியம் லன்ச் பாக்ஸ்-க்கு இந்த ரைஸ் செஞ்சு குடுங்க.. மிச்சம் வெக்காம சாப்பிடுவாங்க.. -
ஃபேஸ் பேக் Vs ஃபேஸ் மாஸ்க் - இவற்றில் சிறந்தது எது? -
ஜூன் 22-ல் உருவாகும் லட்சுமி நாராயண ராஜயோகம்: இந்த 4 ராசிக்கு பணமழை கொட்டப்போகுது! -
முருங்கைக்கீரை கடையலும், வாழைக்காய் வறுவலும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
எகிறும் முட்டை விலை.. இந்த முட்டைக்கு இணையான புரோட்டீன் நிறைந்த சைவ உணவுகள் இதோ! -
குரு பகவானின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்.. -
தள்ளுவண்டி கடை புதினா கொத்தமல்லி சட்னி - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்..
சாணக்கிய நீதி படி இந்த 5 விஷயம் வாழ்க்கையில் நுழைஞ்சா அவங்க வாழ்க்கையில் நிம்மதியும், மகிழ்ச்சியும் இருக்காது!
Chanakya Niti: சாணக்கியர் பண்டைய இந்தியாவின் ஒரு பிரபலமான தத்துவஞானி மற்றும் அரசியல்வாதி. சாணக்கியரின் கொள்கைகள், வாழ்க்கையில் சரியான பாதையில் செல்ல மக்களைத் தூண்டுவதாகும். அவர் கூறிய ஆலோசனைகளைப் பயன்படுத்தி மக்கள் தங்கள் வாழ்க்கையை மகிழ்ச்சியாக மாற்றிக்கொள்ளலாம். சாணக்கியர் தனது கொள்கைகளில் ஒரு நபரின் வாழ்க்கையை அழிக்கும் சில பழக்கங்களைப் பற்றி குறிப்பிட்டுள்ளார்.
சாணக்கிய நீதியின் படி இந்த நான்கு பழக்கங்கல் ஒருவரிடம் இருந்தால் அவர்கள் வாழ்க்கையில் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும் என்று கூறுகிறார். சாணக்கியரின் கூற்றுப்படி, ஒருவர் இந்த பழக்கங்களை விட்டுவிட்டால், அவர் அதிக இழப்புகளை சந்திக்க மாட்டார், இல்லையெனில் வாழ்வில் பல இன்பங்களை இழக்க நேரிடும். அவை என்னென்ன என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

அதிகமான செலவு
ஆச்சார்ய சாணக்கியர் கூறுகையில், ஒருவர் தேவைக்கு அதிகமாகவோ அல்லது வருமானத்தை மீறியோ பணம் செலவழிக்கக்கூடாது. அதிகமாக செலவு செய்பவர் வாழ்க்கையில் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். சிந்திக்காமல் பணத்தைச் செலவழிக்கும் பழக்கம் ஒருவருக்கு எப்போதும் பணத் தட்டுப்பாட்டை ஏற்படுத்தும். பணத்தட்டுப்பாடு ஏற்படும் பொது அது பல பிரச்சனைகளை ஏற்படுத்தும். பணம் இல்லாவிட்டால் மகிழ்ச்சியற்ற வாழ்க்கையை வாழ வேண்டியிருக்கும்.
பலவீனத்தை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது
உங்கள் பலவீனத்தைப் பற்றி யாரிடமும் சொல்லக் கூடாது என்கிறார் சாணக்கியர். பதட்டம் அல்லது கவலையில் இருக்கும் ஒருவர் தனது பலவீனத்தை தனது நண்பர், உடன் படித்தவர்கள் அல்லது சக ஊழியரிடம் பகிர்ந்து கொள்கிறார்கள். அதனால் பலர் அந்த பலவீனத்தைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள், அதனால் எதிர்காலத்தில் நீங்கள் பல பிரச்சினைகளையும் மற்றும் மகிழ்ச்சியற்ற நிலையைச் சந்திக்க வேண்டியிருக்கும்.
மற்றவர்களுடன் ஒப்பிட்டு பார்ப்பது
சாணக்கியரின் கூற்றுப்படி,தங்களை மற்றவர்களுடன் ஒப்பிட்டு பார்ப்பவர்கள் ஒருபோதும் மகிழ்ச்சியாக இருக்க முடியாது. மற்றவர்களுடன் தன்னை ஒப்பிட்டுப் பார்க்க முயற்சிப்பவர் வாழ்க்கையில் எந்த விஷயத்திலும் ஒருபோதும் திருப்தி அடைவதில்லை. அவர்கள் எப்பொழுதும் அதிகமாக ஆசைப்பட்டு அல்லது தன்னை குறை மதிப்பிற்கு உட்படுத்தி தன் வாழ்க்கையையே அழித்துக் கொள்கிறார்கள்.
சோம்பேறித்தனம்
சோம்பேறித்தனமே மனிதர்களின் மிகப்பெரிய எதிரி என்று கூறப்படுகிறார். ஆச்சார்ய சாணக்கியர் கூறுகிறார், சோம்பேறித்தனம் உள்ள ஒருவர் வாழ்க்கையில் எப்போதும் வெற்றி பெற மாட்டார். அத்தகைய நபர் எப்போதும் தனது வேலையை அடுத்த நாளைக்கு என்று ஒத்திவைப்பார். அதனால் வாழ்க்கையில் பல சிரமங்களை சந்திக்க நேரிடும். அதனால் அவர் எப்போதும் சோகமாகவே இருப்பார்.
பேராசை
பேராசை என்பது மனிதர்களை மிருகமாக மாற்றும் ஒரு மோசமான குணமாகும். ஒருவரின் மனதிற்குள் பேராசை என்ற எண்ணம் வந்துவிட்டால் அவர்கள் தங்களை சுற்றியுள்ள அனைவரையுமே தனக்கு எதிரியாக பார்க்கத் தொடங்குவார், அதனால் அவர்கள் வாழ்க்கையில் உள்ள அனைத்து நிம்மதியும், சந்தோஷமும் அவர்களை விட்டு விலகிவிடும்.



Click it and Unblock the Notifications
