Latest Updates
-
ஜூன் 22-ல் புதன் கடக ராசிக்குள் நுழைவதால் சகல நன்மைகளையும் பெற்று ஜெயிக்கப்போகும் 3 ராசிகள் -
கோவக்காய் வாங்குனா இந்த ஆந்திரா ஸ்டைல் சட்னி செய்யுங்க - இட்லி, தோசை, சாதம் எல்லாத்துக்கும் சூப்பரா இருக்கும் -
100 ஆண்டுகளுக்கு முன்னரே இந்தியாவில் நிறுவப்பட்ட முதல் விமான நிலையம் எது தெரியுமா? -
செவ்வாய் ரிஷப ராசிக்கு செல்வதால் அதிர்ஷ்டத்தால் ஜெயிக்கிற குதிரையா மாறப்போகும் 4 ராசிகள் -
மீந்து போன இட்லி இருந்தா இந்த மாதிரி மசாலா சேர்த்து மசாலா இட்லி செய்யுங்க - சூப்பர் டிபனா இருக்கும் -
Telegram ஆப் இந்தியாவில் தடைசெய்யப்பட்டுள்ளதற்கு காரணம் என்ன தெரியுமா? எத்தனை நாள் தடை தெரியுமா? -
கொத்தவரங்காயை இந்த மாதிரி செட்டிநாடு ஸ்டைலில் கூட்டு செஞ்சு பாருங்க - பிடிக்காதவங்க கூட விரும்பி சாப்பிடுவாங்க -
சுக்கிரன்-சந்திரன் உருவாக்கும் கலாத்மகா யோகத்தால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி என்ன? -
ஹோட்டல் ஸ்டைல் தக்காளி கார சட்னி - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 17 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு மன அழுத்தம் நிறைந்த நாளாக இருக்குமாம்
சாணக்கிய நீதி படி இந்த 4 விஷயங்கள்தான் ஆண்கள் வாழ்க்கையில் ஏற்படும் மிகவும் துர்பாக்கியமான விஷயங்களாம்...!
Chanakya Niti: சாணக்கியர் மனித வாழ்வு சீராகவும், வெற்றிகரமாகவும் இருக்க பல கொள்கைகளை வழங்கியுள்ளார். இந்த கொள்கைகளை பின்பற்றுவதன் மூலம் உங்கள் வாழ்க்கையில் ஏற்படும் பல பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம். சாணக்கியர் ஒரு சிறந்த அறிஞரும், அனைத்துப் பாடங்களையும் அறிந்த ஒரு சிறந்த ஞானியாக இருந்தார்.
சாணக்கியர் எழுதிய நெறிமுறைகள் இன்றும் மனிதர்களுக்கு பல வாழ்க்கை முறைகளை கற்பிக்கிறது. அவற்றை கடைபிடித்தால் மனிதனின் வாழ்க்கை கவலைகள், சிரமங்கள் இன்றி சுமூகமாக செல்லும் என்பது பெரியோர்களின் நம்பிக்கை.

துரதிர்ஷ்டத்துடன் இருப்பது என்பது பெரும்பாலும் கஷ்டங்களின் விரிவாக்கம், தாமதமான முன்னேற்றம் அல்லது எந்த முன்னேற்றமும் இல்லை. இது நமது தோல்விகள், மனவேதனைகள் போன்றவற்றைக் குறிக்கிறது.
ஒரு நபர் அதிர்ஷ்டசாலியா அல்லது துரதிர்ஷ்டசாலியா என்பதைத் தீர்மானிக்க, அவரது தற்போதைய நிலையை பகுப்பாய்வு செய்வதன் மூலம் ஒருவர் அவரது நிலையை தீர்மானிக்க முடியும். ஒருவர் வாழ்க்கையில் மிகவும் துரதிர்ஷ்டத்துடன் இருப்பதை உணர்த்தும் சம்பவங்கள் என்னென்ன என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
மனைவியின் மரணம்
சாணக்கியரின் கூற்றுப்படி, ஒரு ஆணின் மனைவி இறந்துவிட்டால், அது அவரது மிகப்பெரிய துரதிர்ஷ்டம். ஒரு ஆண் தனது இளம் வயதில் மனைவியை இழந்தாலோ அல்லது அவர்கள் இருவரும் பிரிந்து சென்றாலோ, அவர் மீண்டும் திருமணம் செய்து கொள்ள வாய்ப்புள்ளது.
ஆனால் வயதான காலத்தில் தோழமையும், துணையும் மிகவும் முக்கியமானது. வயதான காலத்தில் இரண்டாவது திருமணம் செய்ய முடியாது. இது தனிமை மனச்சோர்வு மற்றும் மனநலப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும்.
கடினமாக சம்பாதித்த பணத்தை இழப்பது
ஒருவர் கடினமாக உழைத்து சம்பாதித்த பணம், கோபம் கொண்ட ஒருவருக்கு அல்லது ஒருவரின் எதிரிக்கு சென்றால், அது மிகவும் அசுபமாக கருதப்படுகிறது. ஒருவர் தாமாகவே தனது பணத்தை அல்லது செல்வத்தை எதிரியிடம் ஒப்படைக்கும் நிலை இருந்தால், அது மிகவும் துரதிர்ஷ்டம் மற்றும் அவர்கள் பல இடையூறுகளையும் விபத்துகளையும் சந்திக்க வேண்டியிருக்கும்.
இது பணம் தொடர்பான பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது மற்றும் பணம் தவறான செயல்களுக்கு பயன்படுத்தப்படுகிறது.
பிறரை சார்ந்து வாழ்வது
இவ்வுலகில் பிறந்த ஒவ்வொரு விவேகமுள்ள நபரும் தங்கள் குறைபாடுகளைப் பொருட்படுத்தாமல் தங்களைத் தற்காத்துக் கொள்ளும் திறன் கொண்டவர்கள் என்று ஆச்சார்யா சாணக்கியர் விளக்குகிறார். உங்கள் உடல் அல்ல, மன உறுதியும் அறிவும் உங்களை தன்னம்பிக்கை மிக்கவராக மாற்றுகிறது.
மேலும், ஒரு நல்ல மற்றும் ஆரோக்கியமான நபர் வாழ்வாதாரத்திற்காக வேறொருவரைச் சார்ந்து இருந்தால், அது அவர்களைத் தாக்கும் துரதிர்ஷ்டத்தின் அறிகுறியாகும். பிரபஞ்ச ஆற்றல்கள் அவரை மரணத்திற்குப் பிறகு துரதிர்ஷ்டத்தை நோக்கித் தள்ளுகின்றன என்பதற்கும் இது ஒரு அறிகுறியாகும்.
உங்கள் புகழை மற்றொருவர் கவர்ந்து செல்வது
சாணக்கியரின் கூற்றுப்படி, ஒவ்வொரு கடின உழைப்பும், முயற்சியும் உடனடியாகவோ அல்லது சிறிது தாமதமாகவோ வெகுமதியைத் தருகின்றன. ஆனால், சிலர் எந்த வேலையும் செய்யாமலே பிறரின் வேலைக்குரிய பாராட்டுக்களைப் பெறுகிறார்கள்.
உங்களுக்கு அது நிகழும்போது, அது ஒரு துரதிர்ஷ்டவசமான அறிகுறி என்பதை அறிந்து கொள்ளுங்கள். உங்களுக்கான புகழ் வேறொருவரால் பறிக்கப்படும் தருணம், மரணத்திற்குப் பிறகு நீங்கள் அதிக சிரமப்படுவீர்கள் என்பதற்கான அறிகுறியாகும்.



Click it and Unblock the Notifications
