Latest Updates
-
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை நோயை குணப்படுத்தும் 1,300 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் பற்றி தெரியுமா? -
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்.. -
1 வருடம் கழித்து மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 15 முதல் இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. -
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்...
சாணக்கிய நீதி படி இந்த 5 குணங்கள் இருக்குறவங்க சுனாமியே வந்தாலும் தப்பிச்சிருவாங்களாம்... உங்ககிட்ட இருக்கா?
Chanakya Niti: பல நூற்றாண்டுகளுக்கு முன் சாணக்கியர் கூறிய அறிவுரைகள் இப்போதும் பொருந்துபவையாக இருக்கிறது. சாணக்கிய நீதியின் வார்த்தைகள் மனிதனை வாழ்க்கையில் முன்னேறத் தூண்டுவது மட்டுமின்றி வாழ்வதற்கு சரியான பாதையையும் காட்டுகின்றன. ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையிலும் இன்பமும் துன்பமும் வரும்.
இந்த சூழ்நிலைகளில் சிலர் மிகவும் பாதிக்கப்படக்கூடியவர்களாகத் தோன்றுகிறார்கள். அதே சமயம் சிலர் கஷ்டங்களை எளிதில் சமாளிக்கும் திறன் கொண்டவர்களாக இருக்கிறார்கள். மனிதர்களிடம் காணப்படும் சில குணங்களைப் பற்றி சாணக்கியர் குறிப்பிட்டுள்ளார், இந்த குணங்களைக் கொண்டவர்கள் துன்பத்திலும் ஒருபோதும் மனம் தளர மாட்டார்கள்.

வாழ்வில் வரும் கஷ்டங்களை எளிதில் சமாளிப்பார்கள். சாணக்கிய நீதியின் கூற்றுப்படி, எந்தெந்த குணங்களைக் கொண்டவர்கள் நெருக்கடியான காலங்களில் தளர மாட்டார்கள் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
பொறுமை
பொறுமை மற்றும் நிதானம் போன்ற குணங்களைக் கொண்ட ஒருவர் துன்பத்தால் எப்போதும் மனம் தளர மாட்டார் என்றும், நிதானத்துடன் பிரச்சினைகளைத் தீர்ப்பதன் மூலம் மோசமான காலக்கட்டத்தை எளிதில் வெல்வார் என்றும் சாணக்கியர் கூறுகிறார்.
பணத்தை சேமிப்பவர்
கையில் போதுமான பணம் உள்ளவர்கள் கெட்ட காலம் வந்தாலும் அதிகம் கவலைப்படத் தேவையில்லை என்று சாணக்கியர் கூறுகிறார். எனவே ஒருவர் தனது கெட்ட காலத்திற்காக சிறிது பணத்தை சேமிக்க வேண்டும். நல்ல செயல்கள் ஒருவரை மகிழ்ச்சியடையச் செய்யும். எனவே ஒருவர் தனது செல்வத்திலிருந்து ஏழைகளுக்கு தானம் செய்ய வேண்டுமென்றும் சாணக்கியர் அறிவுறுத்தியுள்ளார்.
முடிவெடுக்கும் திறன்
சாணக்கிய நீதி படி , நல்ல முடிவெடுக்கும் திறன் கொண்டவர்கள் பாதகமான சூழ்நிலைகளில் பிரச்சினைகளை எளிதில் தீர்க்க முடியும். வாழ்க்கையில் முன்னேற்றம் மற்றும் வெற்றியை அடைய, ஒரு நபர் மிகவும் கடினமான காலங்களில் சரியான முடிவுகளை எடுக்கும் திறனைக் கொண்டிருக்க வேண்டும்.
அறிவாற்றல்
கல்வியும், அறிவுமே உண்மையான அழியாத செல்வம் என்று சாணக்கியர் கூறுகிறார், இந்த செல்வம் உங்களிடம் இருந்தால் கடினமான மற்றும் கெட்ட காலங்களை எளிதில் கடக்க முடியும். எல்லா வழிகளும் மூடப்பட்டு, எல்லோரும் உங்களை விட்டு வெளியேறும்போது, அறிவு இக்கட்டான சூழ்நிலைகளில் உங்களுக்கான பாதையைத் திறக்கும். அறிவுள்ளவர்களுக்கு சமூகத்தில் எப்போதும் மரியாதை கிடைக்கும் என்று சாணக்கியர் கூறுகிறார்.
கவனிக்கும் திறன்
சாணக்கிய நீதி படி, உங்கள் எதிரியை ஒருபோதும் உங்களை விட பலவீனமாக கருதாதீர்கள். எதிரியின் அனைத்து நடவடிக்கைகளையும் எப்போதும் கவனிக்க வேண்டும். எதிரியின் அனைத்து பலவீனங்களையும் அடையாளம் காண வேண்டும். ஏனெனில் இந்த பலவீனங்களின் மூலம் எதிரியை எளிதில் தோற்கடிக்க முடியும். பலவீனமான நபரை நாம் அடிக்கடி புறக்கணிக்கிறோம், ஆனால் சரியான நேரத்தில், அத்தகையவர்கள் நம்மை காயப்படுத்தலாம். எனவே எதிரிகள் யாரும் பலவீனமானவர்கள் என்று கருத வேண்டாம் என்று சாணக்கியர் கூறுகிறார்.



Click it and Unblock the Notifications












