Latest Updates
-
5 முட்டை இருந்தா பள்ளிப்பாளையம் முட்டை வறுவலை செஞ்சு பாருங்க - காரசாரமா வேற லெவலில் இருக்கும் -
மயில்கள் ஏன் மழை வரும்போது நடனமாடுகிறது தெரியுமா? காரணம் தெரிஞ்சா ஷாக் ஆகிருவீங்க -
சிக்கன் வாங்குனா இந்த மாதிரி தெலங்கானா ஸ்டைலில் மசாலா செஞ்சு பாருங்க - சாதம், டிபனுக்கு அட்டகாசமாக இருக்கும் -
குருபகவான்-செவ்வாய் அரிய சேர்க்கையால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
தென்னிந்தியாவின் சுல்தான் என்று அழைக்கப்பட்ட வலிமையான அரசர் யார் தெரியுமா? -
மட்டன் வாங்குனா.. இப்படி ஒருவாட்டி கிராமத்து ஸ்டைலில் செஞ்சு சாப்பிடுங்க.. தாறுமாறா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 21 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ரொம்ப சந்தோஷமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (21 June 2026-27 June 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கப்போகுது..! -
உங்க ஸ்கின் டைப் சொல்லுங்க.. அரிசி மாவு வெச்சு எப்படி ஃபேஸ் பேக் போடுறது-ன்னு சொல்றோம்.. -
சர்க்கரைவள்ளிக் கிழங்கு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இப்படி ஸ்நாக்ஸ் செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட..
சாணக்கிய நீதி படி இந்த 5 குணங்கள் இருக்குறவங்க சுனாமியே வந்தாலும் தப்பிச்சிருவாங்களாம்... உங்ககிட்ட இருக்கா?
Chanakya Niti: பல நூற்றாண்டுகளுக்கு முன் சாணக்கியர் கூறிய அறிவுரைகள் இப்போதும் பொருந்துபவையாக இருக்கிறது. சாணக்கிய நீதியின் வார்த்தைகள் மனிதனை வாழ்க்கையில் முன்னேறத் தூண்டுவது மட்டுமின்றி வாழ்வதற்கு சரியான பாதையையும் காட்டுகின்றன. ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையிலும் இன்பமும் துன்பமும் வரும்.
இந்த சூழ்நிலைகளில் சிலர் மிகவும் பாதிக்கப்படக்கூடியவர்களாகத் தோன்றுகிறார்கள். அதே சமயம் சிலர் கஷ்டங்களை எளிதில் சமாளிக்கும் திறன் கொண்டவர்களாக இருக்கிறார்கள். மனிதர்களிடம் காணப்படும் சில குணங்களைப் பற்றி சாணக்கியர் குறிப்பிட்டுள்ளார், இந்த குணங்களைக் கொண்டவர்கள் துன்பத்திலும் ஒருபோதும் மனம் தளர மாட்டார்கள்.

வாழ்வில் வரும் கஷ்டங்களை எளிதில் சமாளிப்பார்கள். சாணக்கிய நீதியின் கூற்றுப்படி, எந்தெந்த குணங்களைக் கொண்டவர்கள் நெருக்கடியான காலங்களில் தளர மாட்டார்கள் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
பொறுமை
பொறுமை மற்றும் நிதானம் போன்ற குணங்களைக் கொண்ட ஒருவர் துன்பத்தால் எப்போதும் மனம் தளர மாட்டார் என்றும், நிதானத்துடன் பிரச்சினைகளைத் தீர்ப்பதன் மூலம் மோசமான காலக்கட்டத்தை எளிதில் வெல்வார் என்றும் சாணக்கியர் கூறுகிறார்.
பணத்தை சேமிப்பவர்
கையில் போதுமான பணம் உள்ளவர்கள் கெட்ட காலம் வந்தாலும் அதிகம் கவலைப்படத் தேவையில்லை என்று சாணக்கியர் கூறுகிறார். எனவே ஒருவர் தனது கெட்ட காலத்திற்காக சிறிது பணத்தை சேமிக்க வேண்டும். நல்ல செயல்கள் ஒருவரை மகிழ்ச்சியடையச் செய்யும். எனவே ஒருவர் தனது செல்வத்திலிருந்து ஏழைகளுக்கு தானம் செய்ய வேண்டுமென்றும் சாணக்கியர் அறிவுறுத்தியுள்ளார்.
முடிவெடுக்கும் திறன்
சாணக்கிய நீதி படி , நல்ல முடிவெடுக்கும் திறன் கொண்டவர்கள் பாதகமான சூழ்நிலைகளில் பிரச்சினைகளை எளிதில் தீர்க்க முடியும். வாழ்க்கையில் முன்னேற்றம் மற்றும் வெற்றியை அடைய, ஒரு நபர் மிகவும் கடினமான காலங்களில் சரியான முடிவுகளை எடுக்கும் திறனைக் கொண்டிருக்க வேண்டும்.
அறிவாற்றல்
கல்வியும், அறிவுமே உண்மையான அழியாத செல்வம் என்று சாணக்கியர் கூறுகிறார், இந்த செல்வம் உங்களிடம் இருந்தால் கடினமான மற்றும் கெட்ட காலங்களை எளிதில் கடக்க முடியும். எல்லா வழிகளும் மூடப்பட்டு, எல்லோரும் உங்களை விட்டு வெளியேறும்போது, அறிவு இக்கட்டான சூழ்நிலைகளில் உங்களுக்கான பாதையைத் திறக்கும். அறிவுள்ளவர்களுக்கு சமூகத்தில் எப்போதும் மரியாதை கிடைக்கும் என்று சாணக்கியர் கூறுகிறார்.
கவனிக்கும் திறன்
சாணக்கிய நீதி படி, உங்கள் எதிரியை ஒருபோதும் உங்களை விட பலவீனமாக கருதாதீர்கள். எதிரியின் அனைத்து நடவடிக்கைகளையும் எப்போதும் கவனிக்க வேண்டும். எதிரியின் அனைத்து பலவீனங்களையும் அடையாளம் காண வேண்டும். ஏனெனில் இந்த பலவீனங்களின் மூலம் எதிரியை எளிதில் தோற்கடிக்க முடியும். பலவீனமான நபரை நாம் அடிக்கடி புறக்கணிக்கிறோம், ஆனால் சரியான நேரத்தில், அத்தகையவர்கள் நம்மை காயப்படுத்தலாம். எனவே எதிரிகள் யாரும் பலவீனமானவர்கள் என்று கருத வேண்டாம் என்று சாணக்கியர் கூறுகிறார்.



Click it and Unblock the Notifications
