சாணக்கிய நீதி படி இந்த 5 விஷயங்கள் கொண்டவர்கள் வாழ்க்கையில் அதிர்ஷ்டசாலிகளாம்... உங்ககிட்ட எத்தனை இருக்கு?

Chanakya Niti: சாணக்கியர் பண்டைய இந்தியாவின் சிறந்த பொருளாதார நிபுணர் மற்றும் இராஜதந்திரி ஆவார். அவரது கொள்கைகளின் வலிமையால், ஒரு சாமானியராக இருந்த சந்திரகுப்தரை, மௌரியப் பேரரசர் என்ற பட்டத்திற்கு உயர்த்தினார்.

சாணக்கியரின் கொள்கைகள் எக்காலத்திற்கும் பொருத்தமானவை. இன்றும் மக்கள் சாணக்கியரின் கொள்கைகளைப் பின்பற்றுகிறார்கள். இந்த கொள்கைகளை பின்பற்றுவதன் மூலம் ஒரு நபர் தனது வாழ்க்கையை வெற்றிகரமாக மாற்ற முடியும்.

Chanakya Niti People Who Have These Things Will Get Extreme Happiness in Tamil

ஒரு மனிதன் தங்கள் வாழ்க்கையில் உயர்ந்தவராக மாறுவது தங்கள் குணத்தால் அல்ல, அவருடைய செயல்களால் என்று சாணக்கியர் கூறுகிறார். ஒரு மனிதனின் செயல்களே அவரது வாழ்க்கை நிலையையும் திசையையும் தீர்மானிக்கிறது.

ஒரு மனிதன் நல்ல மற்றும் கெட்ட செயல்களின் பலனை நிகழ்காலத்தில் மட்டுமல்ல, அடுத்த ஜென்மத்திலும் பெறுகிறார். வாழ்க்கையில் சில விஷயங்களை பெற்றவர்கள் அதிர்ஷ்டசாலிகள் என்று சாணக்கியர் கூறியுள்ளார். அவை என்னவென்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

நல்ல வாழ்க்கை துணையைப் பெற்றவர்கள்

அனைவருக்கும் ஒரு நல்ல மற்றும் புரிதல் கொண்ட வாழ்க்கை துணை கிடைப்பதில்லை. முற்பிறவியில் செய்த நற்செயல்களின் அடிப்படையில்தான் இந்த அதிர்ஷ்டம் கிடைக்கிறது. நல்லொழுக்கமுள்ள வாழ்க்கைத் துணையை வைத்திருப்பவர்கள் அதிர்ஷ்டசாலிகள் என்று அழைக்கப்படுவார்கள் என்று சாணக்கியர் கூறுகிறார். அத்தகைய பெண் முழு குடும்பத்தின் மகிழ்ச்சியையும் பாதுகாப்பார் என்று சாணக்கியர் கூறுகிறார்.

ஒருவேளை உங்களுக்கு சண்டையிடும் மனைவி இருந்தால், வீடு எப்போதும் குழப்பம் நிறைந்ததாக இருக்கும். அவர்கள் முற்பிறவியில் செய்த பாவங்களின் விளைவாகவே அவர்கள் பொருத்தமில்லாத வாழ்க்கைத்துணையை பெறுகிறார்கள்.

போதுமான பணம் உள்ளவர்கள்

பணம் இல்லாமல் வாழ்க்கை மிகவும் கடினமானதாக இருக்கும், எனவே அடிப்படை வாழ்வை வாழ்வதற்குக் கூட அனைவருக்கும் பணம் இருக்க வேண்டும். சிலரிடம் பணம் குறைவாகவும் சிலரிடம் அதிகமாகவும் உள்ளது. ஆனால், பணத்தைச் சரியாகப் பயன்படுத்தும் திறன் எல்லாருக்கும் இருப்பதில்லை. லட்சுமி தேவியை ஒருபோதும் அவமரியாதை செய்யாமல் அதன் மதிப்பைப் புரிந்துகொள்பவர்கள் மட்டுமே பணத்தை சரியாகப் பயன்படுத்தி அதன் பலனைப் பெறுவார்கள் என்று சாணக்கியர் கூறுகிறார்.

பணத்தை சரியாகப் பயன்படுத்தத் தெரியாவிட்டால், வாழ்நாள் முழுவதும் பணத்தைப் பெறுவதற்குப் போராட வேண்டியிருக்கும். நீங்கள் பண விஷயத்தில் தன்னிறைவு உள்ளவராக இருந்தால், நீங்கள் வாழ்க்கையில் நிறைய மகிழ்ச்சியைப் பெறுவீர்கள். அத்தகையவர்கள் அதிர்ஷ்டசாலிகள் என்று சாணக்கியர் நம்பினார்.

தாராள மனப்பான்மை உடையவர்கள்

தாராள மனதுடன் கொடுப்பது ஏழைகளையும் பணக்காரர் ஆக்குகிறது. தானம் செய்பவர்கள் வாழ்க்கையில் எப்போதும் முன்னேறுவார்கள் என்று சாணக்கியர் கூறியுள்ளார். வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் அவர்களுக்கு அதிர்ஷ்டம் கிடைக்கும். ஏனெனில் உலகில் உள்ள அனைவருக்கும் கொடுக்கும் மனப்பான்மை இருப்பதில்லை.

மற்றவர்களுக்கு ஏதாவது கொடுக்க வேண்டும் என்ற ஆசை உங்களுக்குள் இருந்தால் நீங்கள் அதிர்ஷ்டசாலி. தர்மம் செய்பவன் பிறர் வாழ்க்கையை அழகுபடுத்துவது மட்டுமின்றி, தன் குடும்பத்தையும், வளமாக்குகிறார் என்கிறார் சாணக்கியர்.

மூன்று வேளை உண்பவர்கள்

ஒரு நாளைக்கு மூன்று வேளை உணவைப் பெறுபவர் அதிர்ஷ்டசாலி என்று சாணக்கியர் நம்பினார். ஏனென்றால் உங்களைச் சுற்றி கோடிக்கணக்கான மக்கள் பட்டினியால் வாடுகிறார்கள். ஒருவேளை உணவுக் கூட கிடைக்காதவர்கள் உலகில் ஏராளமானவர்கள் இருக்கிறார்கள். அந்தச் சூழலில், ஒரு நாளைக்கு மூன்று வேளை உணவைத் தவறாமல் சாப்பிடும் ஒருவர் தன்னை அதிர்ஷ்டசாலி என்று கருத வேண்டும் என்று சாணக்கியர் அறிவுறுத்துகிறார்.

அதேபோல், உணவை ஜீரணிக்கும் ஆற்றல் பெற்றவர்களை மிகவும் அதிர்ஷ்டசாலிகள் என்று அழைக்கலாம் என்று சாணக்கியர் கூறுகிறார். எவ்வளவு நல்ல உணவை சாப்பிட்டாலும், ஜீரணிக்க முடியாமல் போனால், உடலில் பல நோய்கள் ஏற்படும் என்று சாணக்கியர் கூறுகிறார்.

தொழிலில் திறமையானவர்கள்

நல்ல வேலை திறன் கொண்ட ஒரு நபர் மிகவும் அதிர்ஷ்டசாலி என்று சாணக்கியர் கூறுகிறார். அவர்கள் உலகின் எந்த மூலையிலும் வாழக்கூடிய திறமைக் கொண்டவர்களாக இருப்பார்கள். அதேசமயம் தன் திறமையை நினைத்து ஒருபோதும் பெருமை கொள்ளவே கூடாது. ஏனெனில் நமது விதி எப்போது வேண்டுமானாலும் மாறலாம் என்கிறார் சாணக்கியர்.

Story first published: Sunday, March 17, 2024, 7:30 [IST]
Desktop Bottom Promotion