Latest Updates
-
மே மாதத்தில் நடக்கும் கிரக பெயர்ச்சிகளால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
வெயில் கொடுமை! திருமணத்தை மாற்ற முடியாமல் தவிக்கிறீர்களா? இந்த 5 டிப்ஸ் உங்கள் விழாவை காப்பாற்றும்! -
1/4 கப் தனியா இருந்தா இந்த வித்தியாசமான சட்னியை அரைங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமாக இருக்கும் -
வட இந்தியத் திருமணங்கள்: சுட்டெரிக்கும் வெயிலில் சிக்கித் தவிக்கும் கொண்டாட்டங்கள் - இதோ சில அதிரடி மாற்றங்கள்! -
இந்த 5 உணவுகள் உங்கள் உடலில் துர்நாற்றத்தை ஏற்படுத்தி சங்கடமாக உணர வைக்குமாம் - பார்த்து சாப்பிடுங்க -
வாஸ்து செடிகள்: கோடை வெயிலில் வீட்டை குளிர்ச்சியாக வைத்து அதிர்ஷ்டத்தை அள்ளுவது எப்படி? -
சிக்கன் பிரியாணியை விட சூப்பரா இருக்கும் ஆம்பூர் ஸ்டைல் சோயா பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க -
சனிபகவானின் வக்ர பெயர்ச்சியால் 138 நாட்களுக்கு ஜெயிக்கிற குதிரையா மாறப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
சீதா நவமி: உங்கள் வீட்டில் இந்த மாற்றங்களைச் செய்தா பணமழை கொட்டுமா? அதிர்ஷ்டம் தரும் வாஸ்து ரகசியம்! -
கோடையில் இந்த கஞ்சியை தினமும் 1 கப் குடிங்க.. உடல் எடையும் குறையும், உடல் சூடும் தணியும்..
சாணக்கிய நீதி படி இந்த 4 பெண்களை உங்க கனவில் கூட நம்பிராதீங்க... உங்க வாழ்க்கையை மொத்தமா அழிச்சிருவாங்களாம்...
Chanakya Niti: இந்தியாவின் சிறந்த பொருளாதார அறிஞர்களில் ஒருவரான சாணக்கியர் அவருடைய இராஜதந்திரங்களுக்கு புகழ் பெற்றவர். சாணக்கியரின் இராஜதந்திரங்கள் சந்திரகுப்த மௌரியரை மகதத்தின் பேரரசர் ஆக்கியது. சாணக்கியரின் பண்டையகால கொள்கைகள் எக்காலத்திற்கும் பொருந்துபவையாக இருக்கிறது.
செல்வம், சொத்து, மனைவி, நட்பு மற்றும் திருமணம் போன்ற வாழ்க்கையின் அனைத்து அம்சங்களைப் பற்றியும் சாணக்கியர் தனது நீதி சாஸ்திரத்தில் விளக்கியுள்ளார். சாணக்கிய நீதியில் பெண்களைப் பற்றி பல விஷயங்கள் கூறப்பட்டுள்ளன. உதாரணமாக, சாணக்கிய நீதியில் அவர்களின் குணம், சிந்தனை, தீய குணங்கள் என பலவற்றைப் பற்றி கூறியுள்ளார். அதன்படி சில பெண்களை நம்பவே கூடாது என்று சாணக்கிய நீதி கூறுகிறது.

கெட்ட குணமுள்ள பெண்
தீய மற்றும் மோசமான குணமுள்ள பெண்ணை ஒருபோதும் நம்ப வேண்டாம் என்று சாணக்கியர் கூறுகிறார். அத்தகைய பெண்ணை ஒருபோதும் நம்ப முடியாது. அவர்கள் எப்போதும் மற்ற ஆண்களிடம் எளிதாக ஈர்க்கப்படுகிறார். அத்தகைய சூழ்நிலையில், அவருடைய கணவன் அவருக்கு மிகப்பெரிய எதிரியாகிறார். ஏனென்றால் அவரின் விருப்பங்களுக்கு நடுவில் கணவன் தடையாக இருக்கிறார். இது கணவர்களுக்கு ஆபத்தை உண்டாக்கும். எனவே கெட்ட குணம் கொண்ட பெண்ணை ஒருபோதும் நம்பக்கூடாது என்று சாணக்கியர் கூறுகிறார்.
அழகைக் கண்டு ஏமாறக்கூடாது
பெண்ணின் அழகை மட்டும் பார்த்து ஒருபோதும் நம்பக்கூடாது. அப்படிப்பட்டவர்களை நம்புவது பெரிய தவறு. வெளிப்புற அழகை விட அவருடைய குணங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அழகை விட பெண்ணின் குணம் மற்றும் கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
பேராசை கொண்ட பெண்கள்
சாணக்கியரின் கூற்றுப்படி, ஒரு பெண்ணிற்கு தோன்றும் பேராசை மிகவும் ஆபத்தானது. இது வீட்டின் அமைதியைக் கெடுப்பது மட்டுமல்லாமல், சில நேரங்களில் அது முழு குடும்பத்தையும் அழிக்க வழிவகுக்கும். எனவே நீங்கள் ஒரு பேராசை கொண்ட பெண்ணை ஒருபோதும் நம்பக்கூடாது.
தற்பெருமை கொண்ட பெண்கள்
தற்பெருமை கொண்ட பெண்களை ஒருபோதும் நம்பக்கூடாது என்கிறார் சாணக்கியர். சரஸ்வதி தேவியும், லக்ஷ்மி தேவியும் எப்பொழுதும் திமிர் பிடித்த பெண் மீது கோபமாக இருப்பார்கள் என்று சாஸ்திரம் கூறுகிறது. அத்தகைய சூழ்நிலையில் அவர்களால் தன் அறிவையோ புத்திசாலித்தனத்தையோ பயன்படுத்த முடியாது. கர்வமுள்ள பெண்களின் நடத்தை முழு குடும்பத்தின் மகிழ்ச்சியையும் செழிப்பையும் அழிக்கிறது.
நம்ப வேண்டிய பெண்கள்
- உலகில் ஒரு ஆண் ஒரு பெண்ணை மட்டுமே கண்மூடித்தனமாக நம்ப முடியும் என்றால் அது அவருடைய அம்மாதான் என்று சாணக்கியர் கூறியுள்ளார். ஒரு தாய் தன் குழந்தைக்கு ஒருபோதும் தீங்கு செய்ய முடியாது. அவர் இதயத்தில் பிறர் மீது பொறாமை இல்லை, எப்போதும் தன் குழந்தைகளின் நலனையே விரும்புகிறார். அதனால்தான் சாணக்கியர் ஒருவர் அவருடைய அம்மாவை மட்டும் நம்ப வேண்டுமென்று கூறியுள்ளார்.
- ஒரு பெண் ஒரு குடும்பத்தின் அடித்தளமாக இருப்பதால் கல்வி கற்பது மிகவும் முக்கியம் என்று சாணக்கியர் நம்பினார். படித்த பெண் உங்கள் பல தலைமுறைகளுக்கு கல்வி கற்பித்து குலத்தை காப்பாற்றுகிறார். எனவே பெண்கள் மத்தியில் கல்வி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. கல்வி கற்ற பெண் உங்கள் வாழ்க்கையில் ஒளியேற்றுவார்.



Click it and Unblock the Notifications
