Latest Updates
-
சுக்கிரன் மிதுன ராசிக்கு செல்வதால் கோடிகளை குவிக்கும் அதிர்ஷ்டம் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
தேங்காயோட இந்த பொருளை சேர்த்து ஒரு தடவை சட்னி அரைச்சு பாருங்க - டேஸ்ட் வேற லெவலில் இருக்கும் -
இந்த 3 தேதிகளில் பிறந்தவர்கள் வசீகரமான தலைவர்களாக இருப்பார்களாம் - உங்க பிறந்த தேதி என்ன? -
திருமண மேடையில் திடீர் திருப்பம்! மணமகனை விட்டுவிட்டு காதலனைத் தேடி ஓடிய மணப்பெண் - என்ன நடந்தது? -
Agni Natchathiram 2026: அக்னி நட்சத்திரத்திற்கும், தமிழ்க் கடவுள் முருகனுக்கும் உள்ள தொடர்பு என்ன தெரியுமா? -
4 முட்டை இருந்தா இந்த மாதிரி முட்டை பட்டர் மசாலா செஞ்சு பாருங்க - தோசை, சப்பாத்திக்கு செமையா இருக்கும் -
வெயில் கொடுமையா? இந்த 5 செடிகள் இருந்தா வீடு ஏசி இல்லாமலே ஜில்லுனு இருக்கும்! -
Tamil Nadu Election Results 2026: தமிழ்நாட்டின் தலையெழுத்தை மாற்றிய 5 தேர்தல் முடிவுகள் என்னென்ன தெரியுமா? -
மதுரை ஸ்டைல் சிக்கன் கொத்துக்கறி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, வேற லெவலில் இருக்கும் -
வீட்டில் மணி பிளாண்ட் இருக்கா? இந்த திசையில் வைத்தால் கோடை வெயில் பறந்து போகும்!
சாணக்கிய நீதி படி இந்த 6 வகை நபர்கள் எதிரியை விட மோசமானவர்கள்... இவர்களிடம் தெரியாமகூட உதவி கேட்கக்கூடாது...!
Chanakya Niti: சாணக்கியர் பண்டைய இந்தியாவின் சிறந்த இராஜதந்திரி, அறிஞர், ஆலோசகர் மற்றும் பொருளாதார நிபுணர். மௌரிய வம்சத்தின் வெற்றிகளுக்குப் பின்னால் சாணக்கியரின் புத்திசாலித்தனம் இருந்தது. சாணக்கியர் அரசியலில் மட்டுமின்றி சமூகத்தின் அனைத்து அம்சங்களிலும் அறிந்தவராக இருந்தார்.
மனித வாழ்க்கை தொடர்பான பல விஷயங்களை சாணக்கியர் கூறியுள்ளார். சாணக்கிய நீதியின் இந்த கொள்கைகளை பின்பற்றுவதன் மூலம் ஒருவர் வாழ்க்கையை மகிழ்ச்சியாக மாற்ற முடியும். சாணக்கியரின் இந்தக் கொள்கைகளைக் கடைப்பிடிப்பதன் மூலம் எந்தவொரு நபரும் தனது வாழ்க்கையில் இருந்து விரக்தியை அகற்ற முடியும்.

சாணக்கிய நீதியின் கூற்றுப்படி, உங்கள் வாழ்க்கையில் குறிப்பிட்ட நபர்களை ஒருபோதும் நம்பக்கூடாது என்று கூறப்படுகிறது. ஏனெனில் அது உங்களுக்கு நன்மைக்கு பதிலாக சிக்கலை ஏற்படுத்தும். இப்படிப்பட்டவர்கள் தங்கள் சொந்த நலனுக்காக உங்களை ஏமாற்றுவார்கள் என்று சாணக்கியர் கூறியுள்ளார். அத்தகையவர்கள் எதிரியை விட ஆபத்தானவர்கள். அவர்கள் யாரென்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
காதலில் ஏமாற்றுபவர்கள்
சாணக்கியரின் கூற்றுப்படி, தவறான நபரைக் காதலிப்பவர்கள் கவனமாக இருக்க வேண்டும். ஆண்கள் மற்றும் பெண்கள் இருவருமே அப்படிப்பட்டவர்களிடம் கவனமாக இருக்க வேண்டும். அத்தகையவர்கள் தங்கள் நலனுக்காக யாரையும் ஏமாற்றலாம்.
இப்படிப்பட்டவர்கள் பணத்திற்காகவும், முன்னேற்றத்திற்காகவும் காதலித்து ஏமாற்றி மற்றவர்களின் வாழ்க்கையை சீரழிப்பார்கள். அப்படிப்பட்டவர்களிடம் இருந்து எப்பொழுதும் தூரமாக இருக்க வேண்டும் என்கிறார் சாணக்கியர்.
சுயநலவாதி
சாணக்கியர் தனது சொந்த நலனுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுக்கும் ஒருவரிடம் ஒருபோதும் உதவியை நாட வேண்டாம் என்று கூறுகிறார். இப்படிப்பட்டவர்கள் தங்கள் சுயநலத்திற்காக பிறரை காயப்படுத்த தயங்க மாட்டார்கள். அவர்களிடமிருந்து விலகி இருப்பது நல்லது.
அவர்கள் தங்கள் வாழ்க்கையில் லாபத்தைத் தவிர வேறு எதையும் கருதுவதில்லை. அவர்கள் தங்கள் சுயநலத்திற்காக மற்றவர்களை ஏமாற்றுகிறார்கள். அப்படிப்பட்டவர்களிடம் இருந்து விலகி இருப்பது நல்லது என்கிறார் சாணக்கியர். அவர்களிடம் உதவி பெற நினைக்கவே வேண்டாம்.
மோசமான குணம் கொண்ட பெண்கள்
கெட்ட குணம் கொண்ட பெண்களிடம் இருந்து விலகி இருக்க வேண்டுமென்று சாணக்கியர் கூறுகிறார். அத்தகைய பெண்ணுக்கு உதவி செய்யத் துணிபவர்களுக்கு பிரச்சனைகள் மட்டுமே தொடரும். அத்தகைய பெண்கள் தங்கள் சுயநல காரணங்களுக்காக மட்டுமே ஆண்கள் மீது ஆர்வம் காட்டுகிறார்கள். அத்தகைய பெண்ணின் வலையில் விழுவது உங்கள் சமூக அந்தஸ்தையும் தனிப்பட்ட வாழ்க்கையையும் கெடுத்துவிடும். எனவே அத்தகைய பெண்களிடம் இருந்து விலகி இருங்கள் என்கிறார் சாணக்கியர்.
பொறாமை கொண்டவர்கள்
பொறாமை கொண்டவர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். எந்த காரணமும் இல்லாமல் தனிமையாக உணருபவர்களிடமிருந்து விலகி இருக்க முயற்சி செய்ய வேண்டும் என்று சாணக்கியர் கூறுகிறார். ஏனென்றால், அவர்களுக்கு தன்னிடம் இருப்பதில் திருப்தி இருப்பதில்லை. அவர்கள் எப்போதும் மற்றவர்களிடம் இருப்பதைக் கண்டு பொறாமைப்படுவார்கள்.
அப்படிப்பட்டவர்களிடம் இருந்து விலகி இருப்பது நல்லது. ஏனென்றால் அவர்கள் நம் மன அமைதியைக் கெடுக்கிறார்கள். ஒரு பொறாமை கொண்ட நபர் எப்போதும் தனது எதிரியை தோல்வியடையச் செய்து மகிழ்ச்சியானவராக இருக்க விரும்புகிறார். அப்படிப்பட்டவர்கள் உங்கள் கெட்ட நேரத்தைப் பயன்படுத்தி உங்களை ஏமாற்றலாம்.
முட்டாள்கள்
எப்போதும் முட்டாள்களிடமிருந்து விலகி இருக்க வேண்டுமென்று சாணக்கியர் கூறுகிறார். ஏனென்றால், உலகில் நடக்கும் எதையும் அவர்கள் உணர்வதில்லை. ஏனென்றால் அவர்கள் மற்றவர்களின் குறைகளைக் கண்டுபிடிப்பதில் மிகவும் பிஸியாக இருக்கிறார்கள். முட்டாள்களுக்கு ஒருபோதும் அறிவுரை கூறாதீர்கள். அறிவைப் பகிர்வதன் மூலம் அவர்களுக்கு உதவ முடியும் என்று நீங்கள் நினைத்தால், உங்கள் எண்ணம் முற்றிலும் தவறு.
வாழ்க்கையில் சரியான விஷயங்களைப் புரிந்து கொள்ள முடியாத முட்டாள்களுக்கு அறிவுரை கூறுவதில் அல்லது உதவுவதில் அர்த்தமில்லை. அவர்கள் சிறிய விஷயங்களுக்குக் கூட வாக்குவாதம் செய்து உங்கள் நேரத்தையும் முயற்சியையும் வீணடிக்கலாம். எனவே முட்டாள் மக்களிடமிருந்து விலகி இருங்கள் என்று சாணக்கியர் கூறுகிறார்.
தவறான செயல்களில் ஈடுபடுபவர்கள்
சாணக்கியரின் கூற்றுப்படி, தவறான செயல்களில் ஈடுபடும் ஒருவர் பாவச் செயல்களைச் செய்யத் தொடங்குகிறார், மற்றவர்களையும் தவறான செயல்களைச் செய்யத் தூண்டுகிறார். அப்படிப்பட்டவர்களுடன் தொடர்பு கொண்டு அவர்களுக்கு உதவி செய்தால் அவமானம் ஏற்படும் என்கிறார் சாணக்கியர். எனவே அவர்களிடமிருந்து எப்போதும் விலகி இருங்கள்.



Click it and Unblock the Notifications
