Latest Updates
-
12 ஆண்டுக்கு பின் நடக்கும் குருபகவானின் நேரடி இயக்கத்தால் இந்த 3 ராசிகள் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம்... -
வேர்க்கடலையுடன் இந்த 2 பொருட்களை சேர்த்து ஆந்திரா ஸ்டைலில் சட்னி அரைங்க... இட்லி, தோசைக்கு செமையா இருக்கும்... -
சூரியன்-புதன் உருவாக்கும் புதாதித்ய யோகம் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு பணமும், புகழும் குவியப்போகுதாம்...! -
பரங்கிக்காய் வாங்குனா இந்த மாதிரி செட்டிநாடு ஸ்டைலில் பாயாசம் செஞ்சு பாருங்க... அமிர்தம் மாதிரி இருக்கும்...! -
முட்டையை இந்த மாதிரி பொரியல் செஞ்சு பாருங்க... டேஸ்ட் வேற லெவலில் இருக்கும்... ஆரோக்கியமாவும் இருக்கும்...! -
மூன்றாம் உலகப்போர் வந்தாலும் இந்த நாடுகளில் மக்கள் பாதுகாப்பாக இருப்பார்களாம்... எந்தெந்த நாடுகள் தெரியுமா? -
100 ஆண்டுக்கு பின் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகத்தை தரப்போகிறதாம்...! -
கலகத்தை உருவாக்குவதற்காகவே பிறந்த 4 ராசிக்காரங்க இவங்கதான்...ரொம்ப ஆபத்தானவங்க இவங்க...உங்க ராசி இதுல இருக்கா? -
3 கத்திரிக்காய் இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. இட்லி, தோசைக்கு செம சூப்பரா இருக்கும்... -
இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு மனஅழுத்தம் நிறைந்த நாளாக இருக்குமாம்...!
சாணக்கிய நீதி படி இந்த 6 குணம் உள்ள ஆண்களுக்கு ரொம்ப சந்தோஷமான திருமண வாழ்க்கை கிடைக்கும் அதிர்ஷ்டம் இருக்காம்
Chanakya Niti: சாணக்கியர் பண்டைய இந்தியாவின் ஒரு சிறந்த இராஜதந்திரியாகக் கருதப்படுகிறார். அவர் தனது நீதி சாஸ்திரத்தில் வாழ்க்கை தொடர்பான அனைத்து அம்சங்களையும் குறிப்பிட்டுள்ளார். வாழ்க்கையில் வெற்றியடையச் செய்வதற்கான கொள்கைகளை வழங்குவதுடன், ஒருவரின் வாழ்க்கையில் தடைகளை உருவாக்கும் விஷயங்களைப் பற்றியும் விவரித்துள்ளார்.
மனித வாழ்வில் காதல் மற்றும் திருமண உறவு மிகவும் முக்கியமானது மற்றும் புனிதமானது. அனைவருமே தங்கள் தொழில் மற்றும் திருமண உறவில் வெற்றிபெற விரும்புகிறார்கள். அதற்காக பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். உறவுகளைப் பற்றி சாணக்கியர் தனது சாணக்கிய நீதியில் பல விஷயங்களைக் கூறியுள்ளார்.

ஒருவர் தனது தொழில் வாழ்க்கையிலோ அல்லது சமூக வாழ்விலோ வெற்றி பெற்றால், அவர் காதலிலும் திருமண வாழ்விலும் வெற்றி பெற்றதாக அர்த்தமில்லை. காதலில் வெற்றிபெற, ஒருவருக்குள் சில குணங்கள் இருப்பது மிகவும் முக்கியம் என்கிறார் சாணக்கியர். சாணக்கிய நீதியில் கூறியுள்ள படி, ஆண்களிடம் சில குணங்கள் உள்ளன, அதைப் பின்பற்றுவதன் மூலம் அவர்கள் காதலில் தோல்வியடைய மாட்டார்கள், மேலும் அவர் தனது துணையிடமிருந்து முழுமையான மகிழ்ச்சியைப் பெறுகிறார்.
சாணக்கியரின் கூற்றுப்படி, காதலன் அல்லது கணவரிடம் இந்த குணங்கள் இருக்க வேண்டும். அப்போதுதான் உங்கள் காதலிலும் திருமணத்திலும் வெற்றி கிடைக்கும். சாணக்கியர் கூறும் அந்த குணங்கள் என்னென்ன என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
நம்பிக்கை
நம்பிக்கையே காதலின் அடித்தளம். உறவில் நம்பிக்கை இல்லாவிட்டால், அது நீண்ட காலம் நீடிக்காது. தங்கள் வாழ்க்கைத் துணையை அவரவர் வழியில் வாழ சுதந்திரம் கொடுப்பவர்கள் எப்போதும் வெற்றிகரமான உறவைக் கொண்டிருப்பார்கள். அனைத்து உறவுகளிலும் அன்புடன் நம்பிக்கையும் இருக்க வேண்டும் என்கிறார் சாணக்கியர்.
காதல் மற்றும் திருமண உறவுகளில் இது மிகவும் முக்கியமானது. மனைவியைத் தவிர வேறு எந்தப் பெண்ணிடமும் ஈர்ப்பு கொள்ளாத ஆணின் உறவு நீண்ட காலம் நீடிக்கும் என்கிறார் சாணக்கியர்.
மரியாதை
ஆண்-பெண் உறவை வெற்றிகரமாக்குவதில் மரியாதை முக்கிய பங்கு வகிக்கிறது என்கிறார் சாணக்கியர். பெண்களை மதிக்கத் தெரிந்த ஆண்களுக்கு நீண்ட காதல் மற்றும் திருமண உறவுகள் கிடைக்கும். எந்தவொரு பெண்ணும் ஆண்களின் இந்த குணத்தை கண்டு திருப்தியடைவார்.
அது உங்கள் மனைவியாக இருந்தாலும் சரி, காதலியாக இருந்தாலும் சரி, அவர்களுக்கு உரிய மரியாதையைக் கொடுங்கள். பெண்களை மதிக்காதபோது, அவர்களின் சொந்தப் பாதுகாப்பு குறித்த கேள்வியும் அவர்கள் மனதில் எழுகிறது. இதன் விளைவாக, உறவுகள் பலவீனமடைகின்றன.
பாதுகாப்பு
சாணக்கியரின் கூற்றுப்படி, பெண்கள் ஒருபோதும் பாதுகாப்பு தரும் ஆண்களை கைவிட மாட்டார்கள். திருமணமாக இருந்தாலும் சரி காதலாக இருந்தாலும் சரி இதை மட்டும் மறந்து விடாதீர்கள். ஏனென்றால், தங்களுக்குப் பாதுகாப்பைத் தரும் ஒரு நபரை பெண்கள் விரும்புகிறார்கள். அத்தகைய ஆண்கள் எப்போதும் பெண்களை கவனித்து பாதுகாக்க முடியும். பெண்கள் உங்களிடம் பாதுகாப்பு உணர்வைப் பெற்றால், உங்கள் உறவு நீண்ட காலம் நீடிக்கும்.
திருப்தி
இந்த குணம் உறவில் மிக முக்கியமானது என்கிறார் சாணக்கியர். மனைவி அல்லது காதலியை முழுமையாக திருப்திப்படுத்தும் ஆணுடன் பெண்கள் எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பார்கள். ஆண்களைப் போலவே பெண்களுக்கும் பல பாலியல் ஆசைகள் உள்ளன. அதை நிறைவேற்றுவது ஒவ்வொரு ஆணின் பொறுப்பாகும்.
நேர்மை
எந்தவொரு உறவிலும் நேர்மை மிகவும் முக்கியமானது. காதல் அல்லது திருமணம் எதுவாக இருந்தாலும், அதில் நேர்மையானவர்கள் வெற்றி பெறுவார்கள் என்று சாணக்கியர் கூறுகிறார். அன்பில் பணம், செல்வம், அந்தஸ்து என்ற பெருமையை ஒருபோதும் காட்டாத தனிநபர்களின் உறவுகள் நீண்ட காலம் நீடிக்கும்.
ஏமாற்றக்கூடாது
தன் காதலி அல்லது மனைவியைத் தவிர வேறு எந்தப் பெண்ணையும் காமக் கண்ணோட்டத்தில் பார்க்காத ஆண்தான் உண்மையான ஆண் என்று சாணக்கியர் கூறுகிறார். பெண்கள் தங்கள் இதயத்திலிருந்து அத்தகைய ஆண்களை நேசிக்கிறார்கள். ஆணின் இந்தப் பண்பு காரணமாக பெண்களின் மனதில் நம்பிக்கை அதிகரிக்கிறது. இது அவர்களின் உறவிலும் வெளிப்படுகிறது. எனவே காதல் உறவில் ஒருபோதும் ஏமாற்ற வேண்டாம்.



Click it and Unblock the Notifications












