Latest Updates
-
வாஸ்து செடிகள்: கோடை வெயிலில் வீட்டை குளிர்ச்சியாக வைத்து அதிர்ஷ்டத்தை அள்ளுவது எப்படி? -
சிக்கன் பிரியாணியை விட சூப்பரா இருக்கும் ஆம்பூர் ஸ்டைல் சோயா பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க -
சனிபகவானின் வக்ர பெயர்ச்சியால் 138 நாட்களுக்கு ஜெயிக்கிற குதிரையா மாறப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
சீதா நவமி: உங்கள் வீட்டில் இந்த மாற்றங்களைச் செய்தா பணமழை கொட்டுமா? அதிர்ஷ்டம் தரும் வாஸ்து ரகசியம்! -
கோடையில் இந்த கஞ்சியை தினமும் 1 கப் குடிங்க.. உடல் எடையும் குறையும், உடல் சூடும் தணியும்.. -
இன்றைய ராசிபலன் 25 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ராஜயோகம் கூடிவரப்போகுதாம் -
செவ்வாய் மேஷ ராசிக்கு செல்வதால் கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
இந்தியாவின் தேசிய காய் என்று அழைக்கப்படும் காய்கறி எது? அதற்கான காரணம் என்ன தெரியுமா? -
ஏப்ரல் இறுதியில் குரு-புதன் சேர்க்கையால் உருவாகும் அரிய ராஜயோகம்: இந்த 3 ராசிகளின் வருமானம் உயரும்! -
வெயில் காலத்தில் திருமணமா? இந்த 5 விஷயங்களைச் செய்யாவிட்டால் விசேஷமே வீணாகிவிடும்!
சாணக்கிய நீதி படி லக்ஷ்மி தேவி இந்த 3 இடங்களை விட்டு எப்போதும் நகர மாட்டாராம்...அதனால் செல்வம் கொட்டுமாம்!
Chanakya Niti: சாணக்கியர் ஒரு சிறந்த தத்துவஞானி மற்றும் இராஜதந்திரி என்று கருதப்படுகிறார். மனித வாழ்க்கையை எப்படி அமைதியாக வழிநடத்துவது, எப்படி வெற்றி பெறுவது என்று பல விஷயங்களைப் பற்றி தனது சாணக்கிய நீதியில் கூறியிருக்கிறார். அவருடைய கொள்கைகளைப் பின்பற்றுபவர்கள் வாழ்க்கையில் பெரிய வெற்றியைப் பெற்றிருக்கிறார்கள்.
பணம் மற்றும் லட்சுமி தேவியைப் பற்றி சாணக்கியர் பல விஷயங்களைக் கூறியுள்ளார். லட்சுமி தேவி சஞ்சலா அதாவது உலாவுபவர் என்று அழைக்கப்படுகிறார். இப்படிப்பட்ட சூழ்நிலையில், லட்சுமி தேவியை எப்போதும் ஒரே இடத்தில் வைத்திருப்பது கடினம்.

இருப்பினும், லட்சுமி தேவிக்கு மிகவும் பிடித்தமான சில இடங்கள் உள்ளன. லட்சுமி தேவி இந்த இடங்களை எளிதில் விட்டுச் செல்வதில்லை. அவை என்னென்ன இடங்கள் என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
புத்திசாலிகள் இருக்கும் இடங்கள்
சிலர் முட்டாள்களாக இருந்தாலும் புத்திசாலிகள் போல் நடிக்கிறார்கள் என்கிறார் சாணக்கியர். அப்படிப்பட்ட வீட்டில் லட்சுமி தேவி வசிக்க மாட்டார். கற்றறிந்த மற்றும் நல்லொழுக்கமுள்ள மக்கள் மதிக்கப்படும் இடத்தில் லட்சுமி தேவி வசிக்கிறார்.
முட்டாள்களின் வார்த்தைகள் மதிப்பற்றவை. முட்டாள்களின் வார்த்தைகளுக்கு செவிசாய்க்காத வீட்டில் லட்சுமி தேவி வசிக்கிறார். முட்டாள்கள் அல்லது அவர்களின் முட்டாள்தனமான வார்த்தைகளை நம்புவதன் மூலம் இலக்கை நோக்கி செல்வோர் ஒருபோதும் வெற்றியை அடைய முடியாது என்று சாணக்கியர் கூறுகிறார்.
வெற்றியை அடைய முட்டாள்களின் அறிவுரையை எடுத்துக்கொள்ளாதீர்கள் ஆனால் அறிவுள்ள ஒருவரின் அறிவுரையை எப்போதும் எடுத்துக்கொள்ளுங்கள். சரியான பாதையில் தனது இலக்கை அடையும் நபருக்கு லட்சுமி தேவி எப்போதும் மகிழ்ச்சியாக துணையாக இருப்பார்.
தானியம் நிறைந்த வீடு
சாணக்கியரின் கூற்றுப்படி, லட்சுமி உணவு பற்றாக்குறை இல்லாத வீட்டில் அல்லது தானியங்கள் நிறைந்த வீட்டில் மகிழ்ச்சியுடன் வசிக்கிறார். தானியங்கள் தீராத வீடுகளில் அன்னபூரணி மற்றும் லட்சுமி தேவியின் அருள் நிலைத்திருக்கும்.
எனவே உங்கள் களஞ்சியத்தை முழுமையாக வைத்திருக்க கடினமாக உழைக்கவும். உணவு தானியங்களுக்கு ஒருபோதும் தட்டுப்பாடு ஏற்படக்கூடாது. மேலும், உணவை அவமதிக்காதீர்கள். இப்படிச் செய்வதால் ஏற்படும் லட்சுமி தேவியின் கோபம், பணக்காரனைக் கூட ஏழையாக மாற்றிவிடும். அப்படிப்பட்டவர்களுக்கு பிற்காலத்தில் செல்வமும் தானியங்களும் இருக்காது.
அன்பு நிறைந்த வீடு
குடும்ப ஒற்றுமையும், அன்பும் செழிப்பின் அடையாளமாகும். குடும்பத்தில் பரஸ்பர அன்பும் சகோதரத்துவமும் இருக்கும் இடத்தில், லட்சுமி தேவி ஈர்க்கப்படுகிறார். அத்தகைய வீடுகளில் பணத்திற்கு எந்தப் பற்றாக்குறையும் இருக்காது.
கணவன் மனைவி இடையே அன்பை பேணுவதும் மிகவும் அவசியம்.கணவன்-மனைவிக்குள் அன்பில்லாத வீட்டில் அடிக்கடி பிரிவினை, சண்டை, சச்சரவுகள் ஏற்படும். அப்படிப்பட்ட வீட்டில் ஒரு நிமிடம் கூட இருக்க லட்சுமி தேவி இருக்க மாட்டார்.
லக்ஷ்மி தேவி அன்பும் நல்லிணக்கமும் நிறைந்த வீட்டை விரும்புகிறார். குடும்ப உறுப்பினர்களுக்கும், கணவன் மனைவிக்கும் இடையே அன்பு இருந்தால், வீட்டில் பிரச்னைகள் வராது. அத்தகைய வீட்டில் நிறைய அமைதி இருக்கும். அத்தகைய வீடுகளில் லட்சுமி தேவி எப்போதும் வசிக்கிறார்.
செல்வத்தை பாதுகாக்க தெரிய வேண்டும்
ஒரு மனிதன் தன் நடத்தையில் எப்போதும் கவனமாக இருக்க வேண்டும் என்று சாணக்கியர் கூறுகிறார். லட்சுமி தேவி தவறாக நடந்துகொள்ளும் நபருடன் தங்குவதில்லை. செல்வத்தின் தெய்வமான லட்சுமி மிகவும் நிலையற்ற தன்மை உடையவள்.
இதனால்தான் அவர் நீண்ட நேரம் ஒரே இடத்தில் தங்குவதில்லை. அத்தகைய சூழ்நிலையில், ஒரு நபர் ஒவ்வொரு சூழ்நிலைக்கும் ஏற்ப தயாராக இருக்க வேண்டும். பணத்தை முறையாக கையாள்வதில் அறிவு இருக்க வேண்டும். இந்த குணம் இல்லாதவருடைய செல்வம் நீண்ட காலம் நிலைக்காது.
கோபம் கொள்ளக்கூடாது
ஒரு நபர் தனது குணத்திற்கும் கவனம் செலுத்த வேண்டும். சாணக்கியரின் கூற்றுப்படி, லட்சுமி தேவி ஒருபோதும் கோபமான நபரின் அருகில் நிற்க மாட்டார். ஒருபோதும் யாரையும் அவமதிக்கவே கூடாது. அவமானப்படுத்துபவருக்கு அல்லது அப்படிப்பட்ட உணர்வுகள் உள்ளவருக்கு வாழ்க்கையில் எப்போதும் நஷ்டமே ஏற்படும்.
பேராசை கூடாது
எப்போதும் நல்ல உள்ளம் இருந்தால் மட்டுமே லட்சுமி தேவியின் அருள் உங்களுக்கு கிடைக்கும். பேராசை கொண்டவர்கள் எப்போதும் செல்வத்தின் பின்னாலேயே அலைவார்கள். சாணக்கியரின் கூற்றுப்படி, பேராசை கொண்ட ஒருவருக்கு லட்சுமி தேவியின் ஆசிர்வாதம் எப்போதும் கிடைக்காது.



Click it and Unblock the Notifications
