Latest Updates
-
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்..
சாணக்கிய நீதி படி பெண்களின் இந்த தீயகுணங்கள் எவ்வளவு அமைதியான குடும்பத்தையும் அழித்து விடுமாம்...!
Chanakya Niti: சாணக்கியர் பண்டைய இந்தியாவின் மிகச்சிறந்த அறிஞர்களில் ஒருவர். அவர் அரசியல், இராஜதந்திரம் மற்றும் பொருளாதாரம் ஆகியவற்றில் நிபுணராக விளங்கினார். சாணக்கியர் மனித வாழ்க்கையை பாதிக்கும் அனைத்து பிரச்சனைகளையும் அறிந்தவராக இருந்தார்.
சாணக்கியர் தனது அனுபவத்தின் அடிப்படையில் மனித வாழ்க்கையின் மாற்றங்கள் தொடர்பான சில விஷயங்களைக் குறிப்பிட்டுள்ளார். சாணக்கியரின் கூற்றுப்படி, சில பெண்களுக்கு அழிவுப் பாதைக்கு அழைத்துச் செல்லும் சில மோசமான குணங்கள் உள்ளன. பெண்களின் அழிவுக்குக் காரணமான இந்த குணங்கள் குடும்ப அமைதியைக் குலைக்கும்.

பொய் கூறுவது
சாணக்கியரின் கூற்றுப்படி, பெரும்பாலான பெண்கள் பொய் சொல்லும் போக்கைக் கொண்டுள்ளனர். பொய் சொல்வது அல்லது ஏமாற்றுவது மட்டுமல்ல, மற்றவர்களை தவறாகப் பேசுவதும் ஒரு கெட்ட பழக்கம். இந்த பழக்கங்கள் நிச்சயம் ஒரு நாள் உங்கள் வாழ்க்கையை மோசமாக்கும். சில பெண்கள் தங்கள் குடும்ப உறுப்பினர்களைப் பற்றி கிசுகிசுப்பதையும், சிறிய விஷயங்களை பெரிதுபடுத்துவதையும் வழக்கமாகக் கொண்டுள்ளனர். அத்தகைய பெண்களை யாரும் நம்ப மாட்டார்கள். இந்த பெண்களுக்கு மற்றவர்களிடமிருந்து மரியாதை கிடைப்பதில்லை. இப்படிப்பட்ட பெண்களைக் கொண்ட வீடு எப்போதும் பிரச்சனைகளுக்கு மத்தியில்தான் இருக்கும்.
பெரியவர்களை மதிக்காமல் இருப்பது
பெரியவர்களை மதிக்காத பெண்கள் எப்போதும் அனைவரிடமும் அநாகரிகமாக பேசுவார்கள் அல்லது சின்ன சின்ன விஷயங்களுக்கு சண்டை போடுவார்கள். அத்தகைய பெண்கள் வீட்டின் அமைதி மற்றும் மகிழ்ச்சிக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளனர். அத்தகைய பெண்ணை மனைவியாகப் பெற்ற ஆண் ஒருபோதும் மகிழ்ச்சியாக இருக்க முடியாது. பெரியவர்களை மதிக்காத பெண்கள் குடும்பத்தின் மகிழ்ச்சிக்கு கேடு விளைவிக்கும் என்கிறார் சாணக்கியர்.
முன்கோபக்காரர்கள்
கோபம் காட்டுவது பெண்களின் இயல்பான பழக்கம். இருப்பினும், எல்லாவற்றுக்கும் கோபம் கொள்வது சரியல்ல. எனவே இதை மனதில் வைத்துக் கொண்டு எல்லாவற்றிலும் தந்திரமாக விளையாடுவதை நிறுத்துங்கள். ஏனென்றால் எதிரில் இருப்பவர் சில சமயங்களில் உங்கள் மீது அதிக கோபம் கொள்வதால் அதன் விளைவுகளை நீங்கள் சந்திக்க வேண்டியிருக்கும். கோபமான பெண்கள் வீட்டின் அமைதியைக் கெடுக்கிறார்கள்.
பணத்தின் மீது பேராசை
சில பெண்கள் பணத்தின் மீது பேராசை கொண்டவர்கள் என்கிறார் சாணக்கியர். பேராசையால் தவறான செயல்களையும் செய்கிறார்கள். இது பிற்காலத்தில் அவர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்துகிறது. பண ஆசை ஒரு மோசமான கெட்ட பழக்கம். உங்களுக்கும் இந்தப் பழக்கம் இருந்தால், விரைவில் இந்தத் தீமையிலிருந்து விடுபட வேண்டும். இல்லாவிட்டால் அதன் மோசமான விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும். பண ஆசை கொண்ட பெண்கள் குடும்பத்திற்கு கேடு என்று சாணக்கியர் கூறுகிறார்.
அதீத சுயநலம்
ஒரு குடும்பப் பெண் தன் வாழ்க்கையைப் பற்றி மட்டுமல்ல, முழு குடும்ப உறுப்பினர்களின் நலனையும் கருத்தில் கொள்ள வேண்டும். ஆனால் இது எல்லா வீட்டிலும் நடப்பதில்லை. சில பெண்களுக்கு இந்த பொறுப்பை நிறைவேற்றுவது கடினமாக இருக்கும். சிலர் பணம் மற்றும் உடைமைகளில் அதிக சுயநலவாதிகளாக இருப்பார்கள். பெண்களின் இத்தகைய நடத்தை குடும்ப உறுப்பினர்களிடையே பிளவை ஏற்படுத்தும்.
பின்விளைவுகளை பற்றி சிந்திக்காமல் இருப்பது
சாணக்கியரின் கூற்றுப்படி, பெண்கள் குடும்பத்தின் முதுகெலும்பு. ஒரு குடும்பத்தின் தற்போதைய சூழல் மட்டுமல்ல எதிர்காலச் சூழலும் பெண்ணின் நடத்தையைப் பொறுத்தே இருக்கிறது. ஒவ்வொரு பெண்ணும் குடும்பத்தில் முக்கிய பங்கு வகிக்கிறார்கள். ஒரு பெண் குடும்பத்தின் மகிழ்ச்சிக்காகவும் பெருமைக்காகவும் எந்த ஒரு முடிவையும் எடுப்பதற்கு முன் சரியாக யோசிக்க வேண்டும். பின்விளைவுகளைப் பற்றி யோசிக்காமல் எதற்கும் தலையசைக்கும் குணம் பெண்களுக்கு உண்டு. இது தவறு என்கிறார் சாணக்கியர்.



Click it and Unblock the Notifications













