Latest Updates
-
கோடையில் இந்த கஞ்சியை தினமும் 1 கப் குடிங்க.. உடல் எடையும் குறையும், உடல் சூடும் தணியும்.. -
இன்றைய ராசிபலன் 25 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ராஜயோகம் கூடிவரப்போகுதாம் -
செவ்வாய் மேஷ ராசிக்கு செல்வதால் கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
இந்தியாவின் தேசிய காய் என்று அழைக்கப்படும் காய்கறி எது? அதற்கான காரணம் என்ன தெரியுமா? -
ஏப்ரல் இறுதியில் குரு-புதன் சேர்க்கையால் உருவாகும் அரிய ராஜயோகம்: இந்த 3 ராசிகளின் வருமானம் உயரும்! -
வெயில் காலத்தில் திருமணமா? இந்த 5 விஷயங்களைச் செய்யாவிட்டால் விசேஷமே வீணாகிவிடும்! -
மட்டன் சுவையை மிஞ்சும் சோயா உருளைக்கிழங்கு குருமா ரெசிபி - செஞ்சு பாருங்க, செமையா இருக்கும் -
பொருளாதாரச் சுரண்டல் இனி குடும்ப வன்முறை! மனைவியிடம் கையேந்த வைக்கும் கணவர்களுக்கு நீதிமன்றம் கொடுத்த செக்! -
செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டகாத்து வீசும்! உங்க ராசியும் இதுல இருக்கா? -
ஏசி ஓடினாலும் கரண்ட் பில் கம்மியா வரணுமா? ஏசியை இந்த மாதிரி யூஸ் பண்ணுங்க
குலைநடுங்க வைக்கும் வரலாற்றின் கொடூரமான கொலைகாரர்கள்... இவர்கள் செய்த உறையவைக்கும் குற்றங்கள் என்ன தெரியுமா?
உலகம் தோன்றிய காலம் முதலே குற்றங்களும், குற்றவாளிகளும் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனால் வெகுசிலரே தங்களின் கொடுஞ்செயல்களால் வரலாற்றில் மறக்க முடியாத தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளனர். நவீன உலகில் அவர்கள் ஏற்படுத்திய பயத்திற்காகவும், செய்த குற்றங்களுக்காகவும் பல நாடுகளில் அவர்கள் தலைப்பு செய்தியாக மாறினார்கள்.
கற்பனை செய்ய முடியாத வன்முறை மற்றும் உலகத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கிய குற்ற செயல்கள் மூலம் வரலாற்றில் தங்கள் பெயர்களை பொறித்த சிலரைப் பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். சமூகத்தை உலுக்கிய கொடூரமான குற்றங்கள் முதல் இரக்கமற்ற செயல்பாடுகள் வரை ஒரு மனிதரால் இவ்வளவு கொடூரமாக இருக்க முடியுமா என்று இவர்கள் மனித குலத்திற்கே சவால் விடுகிறார்கள். அந்த குற்றவாளிகள் யார், அவர்களின் கொடுஞ்செயல்கள் என்னவென்று மேற்கொண்டு பார்க்கலாம்.

ஜெஃப்ரி டாஹ்மர்
Jeffrey Dahmer 1978 இல் தனது 18 வது வயது முதல் கொலை செய்யத் தொடங்கினார் மற்றும் 1991 வரை அவர் கைது செய்யப்படவில்லை. பின்னர் அவரிடம் இருந்து ஒருவர தப்பித்து காவல்துறையை அவரது வீட்டிற்கு அழைத்துச் சென்றார். அங்குதான் அவரது கொலை வாழ்க்கைப் பற்றிய உண்மைகள் தெரிய வந்தது. சிதைந்த உடல்கள் மற்றும் உடல் பாகங்கள் அபார்ட்மெண்ட் முழுவதும் சிதறிக்கிடந்த புகைப்படங்கள் மூலம் காணப்பட்டன.
கொலை செய்தவர்களை அப்புறப்படுத்த அவர் பயன்படுத்திய ஒரு தொட்டி ஆசிட் கூட இருந்தது. மொத்தமாக டாஹ்மர் 17 பேரைக் கொன்றார், அவர்களில் பெரும்பாலோனோர் இளைஞர்களாக இருந்தனர். குற்றம் நிரூபிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட அவர் 1994 இல் சக கைதியால் கொல்லப்பட்டார்.
அலெக்சாண்டர் சோலோனிக்
வரலாற்றின் மிகப்பெரிய குற்றவாளிகளில் ஒருவர் அலெக்சாண்டர் சோலோனிக், சுமார் 40 பேரைக் கொன்ற ரஷ்ய கொடூர கொலைகாரர். சோலோனிக் ஒரு முன்னாள் சோவியத் சிப்பாய் மற்றும் தற்காப்பு கலை நிபுணராக இருந்தார், வரலாற்றின் ஆபத்தான கொலைகாரர்களில் ஒருவராக அவர் இருந்தார். சிறையில் அடைக்கப்பட்ட அவர் பின்னர் சிறையிலிருந்து தப்பினார், பின்னர் அவரைப் போன்ற கொலைகாரரால் கொல்லப்பட்டார்.
ஹாரி ஸ்ட்ராஸ்
1930 களில், "மர்டர் இன்க்" என்று அழைக்கப்படும் ஒரு மோசமான அமெரிக்க கும்பல், நிழல் உலகை ஆட்சி செய்தது. மாஃபியாவுக்காக நடத்தப்பட்ட எண்ணற்ற ஒப்பந்த படுகொலைகளால் அவர்கள் உலகம் முழுவதும் பிரபலம் அடைந்தனர். இந்தக் கும்பலுடன் தொடர்புடைய ஒரு கொடிய குற்றவாளிதான் ஹாரி ஸ்ட்ராஸ்.
அவரால் இறந்தவர்களின் எண்ணிக்கை சரியாக தெரியா விட்டாலும், அவரால் 500 பேர் இறந்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது. 1941 இல் வெறும் 31 வயதில் மரண தண்டனை விதிக்கப்பட்ட அவருக்கு மின்சார நாற்காலியில் அமர வைக்கப்பட்டு தண்டனை நிறைவேற்றப்பட்டது.
ரிச்சர்ட் குகாலிஸ்கி
"தி ஐஸ்மேன்" என்று அழைக்கப்படும் ரிச்சர்ட் குகாலிஸ்கி ஒரு புகழ்பெற்ற அமெரிக்க ஹிட்மேன் ஆவார், அவர் மூன்று தசாப்தங்களாக 200 க்கும் மேற்பட்ட ஒப்பந்த கொலைகளுக்குக் காரணமாக இருந்தார். குகாலிஸ்கி தனது கருவிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காதவர், மேலும் அவர் அம்புகள் முதல் செயின் வரை கையில் கிடைக்கும் எதை வேண்டுமென்றாலும் கொலை செய்ய பயன்படுத்துவார், மேலும் அவர் உடனடியாக கொல்ல ஒரு கொடிய சயனைடு நாசி ஸ்ப்ரேயைப் பயன்படுத்தினார். அவரது ஆளுமை மற்றும் இரக்கமற்ற செயல்திறன் மற்றும் அவரது குற்றச் செயல்களின் போது வெளிப்பட்டது. குகலிஸ்கியின் மரணம், 2006 ஆம் ஆண்டு, 70 வயதில் சிறையில் இருந்தபோது நிகழ்ந்தது.
ஜான் சைல்ட்ஸ்
"Brutal Brit" என்று அறியப்படும் ஜான் சைல்ட்ஸ், 1974 முதல் 1978 வரையில் மிகவும் பிரபலமாக இருந்த ஒரு பிரிட்டிஷ் கொலைகாரராவார். அந்த 4 பயங்கரமான ஆண்டுகளில், அவர் தந்தையின் கொலையைப் பார்த்த 10 வயது சிறுவன் உட்பட ஆறு பேரின் உயிரைக் கொடூரமாகப் பறித்தார்.
சைல்ட்ஸின் நடுங்க வைக்கும் பழக்கங்களில் ஒன்று அவர் கொலை செய்த பிறகு அவர்களின் உடல்களை எரிப்பதும் அடங்கும். 1979 ஆம் ஆண்டு முதல், அவர் செய்த கொடுஞ்செயல்கள் நிரூபிக்கப்பட்டு, அவர் ஆயுள் முழுவதும் சிறையில் அடைக்கப்பட்டார்.
தி அனிமல்
"தி அனிமல்" என்ற அச்சுறுத்தும் பெயரால் அறியப்பட்ட ஜோசப் பார்போசா ஒரு பிரபலமற்ற அமெரிக்க கொலைகாரர் ஆவார். அவர் 26 பேரை கொடூரமாக கொலை செய்தார். ஒரு பாரில் நடந்த சண்டையில் ஒரு மனிதனின் கன்னத்தை அவர் கொடூரமாக கடித்த பிறகு அவருக்கு 'தி அனிமல்' என்ற புனைபெயர் வந்தது.
பார்போசா, பாஸ்டனை தளமாகக் கொண்ட மோசமான பாட்ரியார்கா கும்பலுடன் வலுவான தொடர்புகளைக் கொண்டிருந்தார், மேலும் அவரது நடவடிக்கைகளின் போது சைலன்சர் துப்பாக்கிகள் மற்றும் வெடிக்கும் கார் குண்டுகளை விருப்பமான கருவிகளாகப் பயன்படுத்தியதற்காக பிரபலமடைந்தார். அவரது கொடூரமான பயணம் 1976 இல் தனது 43 வயதில் படுகொலை செய்யப்பட்டபோது முடிவுக்கு வந்தது.



Click it and Unblock the Notifications
