Latest Updates
-
2050-ல் உலகை ஆளப்போகும் டாப் 10 நாடுகள்: இந்தியா 2050-ல் எந்த நிலையில் இருக்கும் இருக்கப்போகுது தெரியுமா? -
சிக்கன் எடுத்தா இப்படி குக்கர்-ல ஒருடைம் குழம்பு வையுங்க.. டேஸ்ட் வேற லெவல்-ல இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 19 ஏப்ரல் 2026: இன்று இந்த 3 ராசிக்காரர்களுக்கு தெண்ட செலவுகள் தேடிவருமாம் -
வார ராசிபலன் (19 April 2026 - 25 April 2026) - இந்த வாரம் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்தில் கவனமா இருக்கணும்.. -
மட்டன் வாங்குனா.. ஒருடைம் இந்த செட்டிநாடு ஸ்டைல் மட்டன் சுக்கா செய்யுங்க.. தாறுமாறா இருக்கும்.. -
அடுத்தடுத்து நட்சத்திரத்தை மாற்றும் 3 கிரகங்கள்: இந்த 4 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டப்போகுது! -
வெயிலால் முகம் டல்லாகிடுச்சா? அப்ப 1 ஸ்பூன் அரிசி மாவு வெச்சு தினமும் நைட் இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
உங்க பிறந்த தேதியை சொல்லுங்க.. நீங்க அட்சய திருதியை நாளில் என்ன வாங்கணும்-ன்னு சொல்றோம். .. -
நாவூறும்.. சேலத்து மாங்காய் கறி - எப்படி செய்றது-ன்னு பாத்து ஒருவாட்டி ட்ரை பண்ணிப் பாருங்க.. -
Mango Benefits: மாம்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகளும்.. மாம்பழம் வாங்கும் போது கவனிக்க வேண்டியவைகளும்..
நாளை ஆடி முதல் வெள்ளிக்கிழமை.. செல்வம் பெருக கட்டாயம் இந்த பொருட்களை வாங்குங்கள்..!
ஆடி வெள்ளிக்கிழமை அன்று அம்மனை வழிபட்டால் நம் வீட்டில் உள்ள தீமைகள் விலகி நன்மைகள் நடக்கும்... அத்துடன் உடலில் ஆரோக்கியம், செல்வம், ஞானம் ஆகியவை நம்மை வந்துச் சேரும்.
இதுவரை திருமணம் ஆகாதவர்களுக்கு திருமண பாக்கியம் கிடைக்கும், குழந்தை பாக்கியம் பெறுவதற்கு இருக்கும் தடைகள் அனைத்தும் விலகும். விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும். எடுத்த காரியங்கள் அனைத்திலும் வெற்றி கிடைக்கும்.

அத்தகைய சிறப்பு வாய்ந்த இந்த ஆடி மாதம் இந்த வருடம் (2024) நேற்று ஜீலை 17ஆம் தேதி துவங்கியது. ஆடி மாதம் என்றாலே வீட்டிலும் சரி ஆலயங்களிலும் சரி பெரிய அளவில் வழிபாடுகள் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கும். அதுவும் ஆடி முதல் வெள்ளி என்றால் இன்னும் விஷேசம்தான்.. இது மிகவும் அப்படியான இந்த விசேஷமான நாளில் இரண்டு முக்கியமான பொருட்களை உங்கள் வீட்டில் புதிதாக வாங்கி வையுங்கள்.. அப்படி வாங்கினால் செல்வமும் ஐஸ்வரியமும் மேன் மேலும் பெருகும் என்பது ஐதீகம்.
ஆடி மாதம் வரும் முதல் வெள்ளிக்கிழமை, மகாலட்சுமிக்கு மிகவும் உரித்தான ஒரு நாள். அந்த நாளில் அந்த தெய்வத்திற்கு உகந்த ஒரு பொருளை நீங்கள் வீட்டில் வாங்கி வைத்தால் உங்கள் வீட்டில் ஐஸ்வரியம் பொங்கும், வீட்டில் உள்ள பிரச்சனைகள் அனைத்தும் விலகும்..
இந்த ஆண்டு ஆடி மாதத்தில் நான்கு வெள்ளிக்கிழமைகள் வருகிறது. அதில் ஆடி முதல் வெள்ளிக்கிழமையானது ஜூலை 19ஆம் தேதியான நாளை வருகிறது. இந்த நாளில் ராகு கால வேளையான காலை 10.30 மணி முதல் 12 மணி வரை வழிபாட்டினை மேற்கொள்ளலாம். அலுவலகம் செல்பவராக இருந்தால் காலையிலோ அல்லது மாலை 7 மணிக்கு பிறகோ இந்த வழிபாட்டினை செய்யலாம். வீட்டில் காளி படம் அல்லது ஏதாவது ஒரு அம்பிகையின் படத்தையோ வைத்து பூஜை செய்யலாம்..
அப்படி பூஜை செய்வதற்கு முன் இந்த 2 பொருட்களை கண்டிப்பாக வாங்கி வைத்து பூஜையை தொடங்குங்கள்.. பாற்கடலில் பள்ளி கொண்டிருக்கும் விஷ்ணு பகவானுக்கு அருகில் உள்ளவர்தான் மகாலட்சுமி, அவருக்கு உப்பு மிகவும் பிடிக்கும் என்று கூறுவார்கள். உப்பு மகாலட்சுமியின் அம்சமாகும்.. அதனால் நாளை ஆடி முதல் வெள்ளி அன்று உங்கள் வீட்டில் சிறிது உப்பை வாங்கி வைக்க பல ஐஸ்வரியங்கள் ஒன்றாக கூடும். அந்த மகாலட்சுமியே உங்கள் வீட்டிற்கு வந்ததாக அர்த்தம்..
அதேபோல குங்குமம் அல்லது மஞ்சளை நாளை உங்கள் வீட்டில் புதிதாக வாங்கி வைக்கலாம். கண்டிப்பாக இவை இரண்டையும் நாளை வாங்கி வைத்து சாமி கும்பிட்டால் உங்க வீட்டில் மகாலட்சுமி குடிக்கொள்வாள்.. அதனால் பிரச்சனைகள் அனைத்தும் விலகுமாம்..
இதே போல் அம்மனுக்கு பிடித்த பொருட்களில் ஒன்றான வேப்பிலையால் அம்மனுக்கு மாலை கட்டி போடலாம். வேப்பிலை மட்டும் விரளி மஞ்சள் கிழங்குகளை சேர்த்து கட்டி அம்மன் கோவிலுக்கு சென்று மாலையாக அணிவிக்கலாம். கோவிலுக்கு செல்ல முடியாதவர்கள் வீட்டில் உள்ள அம்மனின் படத்திற்கு இதை அணிவிக்கலாம். இதனால் அம்மனின் மனம் குளிர்ந்து, நினைத்த காரியங்களை நடத்தி வைப்பாள்.



Click it and Unblock the Notifications











