Latest Updates
-
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க..
நாளை ஆடி முதல் வெள்ளிக்கிழமை.. செல்வம் பெருக கட்டாயம் இந்த பொருட்களை வாங்குங்கள்..!
ஆடி வெள்ளிக்கிழமை அன்று அம்மனை வழிபட்டால் நம் வீட்டில் உள்ள தீமைகள் விலகி நன்மைகள் நடக்கும்... அத்துடன் உடலில் ஆரோக்கியம், செல்வம், ஞானம் ஆகியவை நம்மை வந்துச் சேரும்.
இதுவரை திருமணம் ஆகாதவர்களுக்கு திருமண பாக்கியம் கிடைக்கும், குழந்தை பாக்கியம் பெறுவதற்கு இருக்கும் தடைகள் அனைத்தும் விலகும். விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும். எடுத்த காரியங்கள் அனைத்திலும் வெற்றி கிடைக்கும்.

அத்தகைய சிறப்பு வாய்ந்த இந்த ஆடி மாதம் இந்த வருடம் (2024) நேற்று ஜீலை 17ஆம் தேதி துவங்கியது. ஆடி மாதம் என்றாலே வீட்டிலும் சரி ஆலயங்களிலும் சரி பெரிய அளவில் வழிபாடுகள் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கும். அதுவும் ஆடி முதல் வெள்ளி என்றால் இன்னும் விஷேசம்தான்.. இது மிகவும் அப்படியான இந்த விசேஷமான நாளில் இரண்டு முக்கியமான பொருட்களை உங்கள் வீட்டில் புதிதாக வாங்கி வையுங்கள்.. அப்படி வாங்கினால் செல்வமும் ஐஸ்வரியமும் மேன் மேலும் பெருகும் என்பது ஐதீகம்.
ஆடி மாதம் வரும் முதல் வெள்ளிக்கிழமை, மகாலட்சுமிக்கு மிகவும் உரித்தான ஒரு நாள். அந்த நாளில் அந்த தெய்வத்திற்கு உகந்த ஒரு பொருளை நீங்கள் வீட்டில் வாங்கி வைத்தால் உங்கள் வீட்டில் ஐஸ்வரியம் பொங்கும், வீட்டில் உள்ள பிரச்சனைகள் அனைத்தும் விலகும்..
இந்த ஆண்டு ஆடி மாதத்தில் நான்கு வெள்ளிக்கிழமைகள் வருகிறது. அதில் ஆடி முதல் வெள்ளிக்கிழமையானது ஜூலை 19ஆம் தேதியான நாளை வருகிறது. இந்த நாளில் ராகு கால வேளையான காலை 10.30 மணி முதல் 12 மணி வரை வழிபாட்டினை மேற்கொள்ளலாம். அலுவலகம் செல்பவராக இருந்தால் காலையிலோ அல்லது மாலை 7 மணிக்கு பிறகோ இந்த வழிபாட்டினை செய்யலாம். வீட்டில் காளி படம் அல்லது ஏதாவது ஒரு அம்பிகையின் படத்தையோ வைத்து பூஜை செய்யலாம்..
அப்படி பூஜை செய்வதற்கு முன் இந்த 2 பொருட்களை கண்டிப்பாக வாங்கி வைத்து பூஜையை தொடங்குங்கள்.. பாற்கடலில் பள்ளி கொண்டிருக்கும் விஷ்ணு பகவானுக்கு அருகில் உள்ளவர்தான் மகாலட்சுமி, அவருக்கு உப்பு மிகவும் பிடிக்கும் என்று கூறுவார்கள். உப்பு மகாலட்சுமியின் அம்சமாகும்.. அதனால் நாளை ஆடி முதல் வெள்ளி அன்று உங்கள் வீட்டில் சிறிது உப்பை வாங்கி வைக்க பல ஐஸ்வரியங்கள் ஒன்றாக கூடும். அந்த மகாலட்சுமியே உங்கள் வீட்டிற்கு வந்ததாக அர்த்தம்..
அதேபோல குங்குமம் அல்லது மஞ்சளை நாளை உங்கள் வீட்டில் புதிதாக வாங்கி வைக்கலாம். கண்டிப்பாக இவை இரண்டையும் நாளை வாங்கி வைத்து சாமி கும்பிட்டால் உங்க வீட்டில் மகாலட்சுமி குடிக்கொள்வாள்.. அதனால் பிரச்சனைகள் அனைத்தும் விலகுமாம்..
இதே போல் அம்மனுக்கு பிடித்த பொருட்களில் ஒன்றான வேப்பிலையால் அம்மனுக்கு மாலை கட்டி போடலாம். வேப்பிலை மட்டும் விரளி மஞ்சள் கிழங்குகளை சேர்த்து கட்டி அம்மன் கோவிலுக்கு சென்று மாலையாக அணிவிக்கலாம். கோவிலுக்கு செல்ல முடியாதவர்கள் வீட்டில் உள்ள அம்மனின் படத்திற்கு இதை அணிவிக்கலாம். இதனால் அம்மனின் மனம் குளிர்ந்து, நினைத்த காரியங்களை நடத்தி வைப்பாள்.



Click it and Unblock the Notifications











