Latest Updates
-
மழைக்காலத்தில் வீட்டில் இந்த செடிகளை வளர்த்தால்… அதிர்ஷ்டமும் பணமும் தேடி வரும்! -
காலிஃப்ளவரை எப்பவும் ஒரே மாதிரி செய்யாம.. ஒருவாட்டி இப்படி மிளகு வறுவல் செய்யுங்க.. அள்ளும்.. -
ஐயங்கார் ஸ்டைல் அப்பளக் குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
இந்த 8 அறிகுறிகள் தெரியுதா? அப்ப மூளையில் கட்டி இருக்க வாய்ப்பிருக்கு.. எச்சரிக்கும் டாக்டர்! -
இந்த 5 ராசி பெண்கள் காதலில் துரோகம் செய்பவர்களாக இருப்பார்களாம் - உங்க காதலி ராசி இதுல இருக்கா? -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரங்க வாயை திறந்தாலே பிரச்சனையை சந்திப்பாங்க.. உஷார்! -
சாணக்கிய நீதி படி இந்த 5 குணங்கள் உள்ளவர்கள் சமூகத்தில் எல்லோராலும் மதிக்கப்படுவார்களாம் - உங்ககிட்ட இருக்கா? -
வெள்ளரிக்காய் தோசையும், கருப்பு உளுந்து சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 08 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு கேட்ட வரங்கள் கிடைக்கப்போகுதாம் -
வக்ரமாகும் சனிபகவான்: ஜூலை முதல் 138 நாட்களுக்கு இந்த 4 ராசிக்கு தொழில் வளரும், வருமானம் அதிகரிக்கும்!
கார்த்திகை தீபத்துக்கு வீட்டு வாசலில் இந்த ரங்கோலி கோலங்களை போடுங்க.. அழகா இருக்கும்..
Karthigai Deepam 2025: தமிழ்நாட்டில் இந்துக்களால் மிகவும் கோலாகலமாக கொண்டாடப்படும் ஒரு தீபத்திருவிழா தான் கார்த்திகை தீபம். இந்த கார்த்திகை தீப நாளில் தான் சிவபெருமான் விஷ்ணு மற்றும் பிரம்மாவுக்கு அக்னி வடிவமாக காட்சியளித்தார். இதை கொண்டாடும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதத்தில் வரும் கிருத்திகை நட்சத்திரத்தில் இந்த திருக்கார்த்திகை தீபம் கொண்டாடப்படுகிறது.
இந்த தீபத்திருவிழாவை முன்னிட்டு, மக்கள் தங்கள் வீட்டை சுத்தம் செய்து, பூஜை அறையை அழகாக பூக்களால் அலங்கரிப்பார்கள். அதோடு வீட்டிற்கு முன் கண்களை கவரும் வகையில் அழகான மற்றும் வண்ணமயமான கோலங்களைப் போட்டு வீட்டு வாசலையும் அலங்கரிப்பார்கள்.

அதன் பின் மாலை வேளையில் திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் மகா தீபம் ஏற்றிய பின், வீட்டில் பூஜை செய்து விளக்கேற்றி, வீட்டை அகல்விளக்குகளால் அழகாக அலங்கரிப்பார்கள். இப்படி வீட்டைச் சுற்றி அகல் விளக்குகளை ஏற்றுவதன் மூலம், வீட்டில் உள்ள தீய ஆற்றல்கள் விரட்டப்பட்டு, நேர்மறை ஆற்றல்கள் வீட்டிற்கு கொண்டு வரப்படுவதாக நம்பப்படுகிறது.
இந்த கார்த்திகை தீபத்திருவிழா நாளில் உங்கள் வீட்டு வாசலில் மற்றவர்கள் பார்த்து பொறாமை படும் அளவில் அழகான விளக்கு கோலம் போட நினைக்கிறீர்களா? அப்படியானால் கீழே உங்களுக்காக சில அழகான கார்த்திகை தீப கோலங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றில் உங்களுக்கு பிடித்ததை தேர்ந்தெடுத்து போடுங்கள்.
1. சிம்பிளான தீப கோலம்
நீங்கள் மிகவும் சிம்பிளாக, அதே சமயம் அழகான தீப கோலத்தைப் போட விரும்பினால், தாமரையில் தீபம் இருப்பது போன்ற இந்த கோலத்தைப் போடலாம். இந்த கோலத்திற்கு நிறைய வண்ணங்கள் தேவையில்லை. வெறும் 3 கலர் பொடி இருந்தாலே போதும், இந்த அழகான கோலத்தைப் போடலாம்.
2. தாமரையில் தீபம்
உங்கள் வீட்டு வாசல் சிறியதா? அந்த வாசலில் சிறிய அளவிலான அதே சமயம் க்யூட்டான ஒரு ரங்கோலி போட நினைத்தால், தாமரையில் தீபம் இருப்பது போன்ற இந்த ரங்கோலியை போடலாம். இந்த ரங்கோலிக்கு வெள்ளை கோலமாவும், காவியும் இருந்தாலே போதும்.
3. மயில் ரங்கோலி
நீங்கள் ஒரு சிம்பிளான மற்றும் சிறிய அளவிலான மயில் ரங்கோலியை தேடிக் கொண்டிருக்கிறீர்களா? அப்படியானால் இந்த மயில் ரங்கோலி உங்களுக்கானதாக இருக்கும். இந்த ரங்கோலியைப் போட்டு, அதன் மேல் விளக்குகளை வைத்து அலங்கரித்தால், அருமையாக இருக்கும்.
4. புள்ளி விளக்கு கோலம்
நீங்கள் கார்த்திகை தீபத்துக்கு புள்ளி வைத்து போடும் விளக்கு கோலத்தை தேடிக் கொண்டிருக்கிறீர்களா? அப்படியானால் இந்த பல வண்ணங்கள் கொண்ட கோலங்களை ட்ரை செய்யுங்கள். உங்கள் வீட்டு வாசல் பெரியது என்றால், நிச்சயம் இந்த கோலங்களுள் ஒன்றை தேர்வு செய்து போடலாம்.
5. கலர்ஃபுல் தீப ரங்கோலி
கார்த்திகை தீப திருநாளில் கலர்ஃபுல்லான 6 தீபங்களைக் கொண்ட ஒரு ரங்கோலியை தேடிக் கொண்டிருக்கிறீர்களா? அதுவும் மிகவும் பெரியதாக இல்லாமல், மிதமான அளவில் கார்த்திகை தீப ரங்கோலியை எதிர்பார்த்துக் கொண்டிருந்தால் இந்த விளக்கு கோலத்தைப் போடலாம்.



Click it and Unblock the Notifications