Latest Updates
-
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்..
கார்த்திகை தீபத்துக்கு வீட்டு வாசலில் இந்த ரங்கோலி கோலங்களை போடுங்க.. அழகா இருக்கும்..
Karthigai Deepam 2025: தமிழ்நாட்டில் இந்துக்களால் மிகவும் கோலாகலமாக கொண்டாடப்படும் ஒரு தீபத்திருவிழா தான் கார்த்திகை தீபம். இந்த கார்த்திகை தீப நாளில் தான் சிவபெருமான் விஷ்ணு மற்றும் பிரம்மாவுக்கு அக்னி வடிவமாக காட்சியளித்தார். இதை கொண்டாடும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதத்தில் வரும் கிருத்திகை நட்சத்திரத்தில் இந்த திருக்கார்த்திகை தீபம் கொண்டாடப்படுகிறது.
இந்த தீபத்திருவிழாவை முன்னிட்டு, மக்கள் தங்கள் வீட்டை சுத்தம் செய்து, பூஜை அறையை அழகாக பூக்களால் அலங்கரிப்பார்கள். அதோடு வீட்டிற்கு முன் கண்களை கவரும் வகையில் அழகான மற்றும் வண்ணமயமான கோலங்களைப் போட்டு வீட்டு வாசலையும் அலங்கரிப்பார்கள்.

அதன் பின் மாலை வேளையில் திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் மகா தீபம் ஏற்றிய பின், வீட்டில் பூஜை செய்து விளக்கேற்றி, வீட்டை அகல்விளக்குகளால் அழகாக அலங்கரிப்பார்கள். இப்படி வீட்டைச் சுற்றி அகல் விளக்குகளை ஏற்றுவதன் மூலம், வீட்டில் உள்ள தீய ஆற்றல்கள் விரட்டப்பட்டு, நேர்மறை ஆற்றல்கள் வீட்டிற்கு கொண்டு வரப்படுவதாக நம்பப்படுகிறது.
இந்த கார்த்திகை தீபத்திருவிழா நாளில் உங்கள் வீட்டு வாசலில் மற்றவர்கள் பார்த்து பொறாமை படும் அளவில் அழகான விளக்கு கோலம் போட நினைக்கிறீர்களா? அப்படியானால் கீழே உங்களுக்காக சில அழகான கார்த்திகை தீப கோலங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றில் உங்களுக்கு பிடித்ததை தேர்ந்தெடுத்து போடுங்கள்.
1. சிம்பிளான தீப கோலம்
நீங்கள் மிகவும் சிம்பிளாக, அதே சமயம் அழகான தீப கோலத்தைப் போட விரும்பினால், தாமரையில் தீபம் இருப்பது போன்ற இந்த கோலத்தைப் போடலாம். இந்த கோலத்திற்கு நிறைய வண்ணங்கள் தேவையில்லை. வெறும் 3 கலர் பொடி இருந்தாலே போதும், இந்த அழகான கோலத்தைப் போடலாம்.
2. தாமரையில் தீபம்
உங்கள் வீட்டு வாசல் சிறியதா? அந்த வாசலில் சிறிய அளவிலான அதே சமயம் க்யூட்டான ஒரு ரங்கோலி போட நினைத்தால், தாமரையில் தீபம் இருப்பது போன்ற இந்த ரங்கோலியை போடலாம். இந்த ரங்கோலிக்கு வெள்ளை கோலமாவும், காவியும் இருந்தாலே போதும்.
3. மயில் ரங்கோலி
நீங்கள் ஒரு சிம்பிளான மற்றும் சிறிய அளவிலான மயில் ரங்கோலியை தேடிக் கொண்டிருக்கிறீர்களா? அப்படியானால் இந்த மயில் ரங்கோலி உங்களுக்கானதாக இருக்கும். இந்த ரங்கோலியைப் போட்டு, அதன் மேல் விளக்குகளை வைத்து அலங்கரித்தால், அருமையாக இருக்கும்.
4. புள்ளி விளக்கு கோலம்
நீங்கள் கார்த்திகை தீபத்துக்கு புள்ளி வைத்து போடும் விளக்கு கோலத்தை தேடிக் கொண்டிருக்கிறீர்களா? அப்படியானால் இந்த பல வண்ணங்கள் கொண்ட கோலங்களை ட்ரை செய்யுங்கள். உங்கள் வீட்டு வாசல் பெரியது என்றால், நிச்சயம் இந்த கோலங்களுள் ஒன்றை தேர்வு செய்து போடலாம்.
5. கலர்ஃபுல் தீப ரங்கோலி
கார்த்திகை தீப திருநாளில் கலர்ஃபுல்லான 6 தீபங்களைக் கொண்ட ஒரு ரங்கோலியை தேடிக் கொண்டிருக்கிறீர்களா? அதுவும் மிகவும் பெரியதாக இல்லாமல், மிதமான அளவில் கார்த்திகை தீப ரங்கோலியை எதிர்பார்த்துக் கொண்டிருந்தால் இந்த விளக்கு கோலத்தைப் போடலாம்.



Click it and Unblock the Notifications











