Latest Updates
-
மே மாதத்தில் நடக்கும் கிரக பெயர்ச்சிகளால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
வெயில் கொடுமை! திருமணத்தை மாற்ற முடியாமல் தவிக்கிறீர்களா? இந்த 5 டிப்ஸ் உங்கள் விழாவை காப்பாற்றும்! -
1/4 கப் தனியா இருந்தா இந்த வித்தியாசமான சட்னியை அரைங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமாக இருக்கும் -
வட இந்தியத் திருமணங்கள்: சுட்டெரிக்கும் வெயிலில் சிக்கித் தவிக்கும் கொண்டாட்டங்கள் - இதோ சில அதிரடி மாற்றங்கள்! -
இந்த 5 உணவுகள் உங்கள் உடலில் துர்நாற்றத்தை ஏற்படுத்தி சங்கடமாக உணர வைக்குமாம் - பார்த்து சாப்பிடுங்க -
வாஸ்து செடிகள்: கோடை வெயிலில் வீட்டை குளிர்ச்சியாக வைத்து அதிர்ஷ்டத்தை அள்ளுவது எப்படி? -
சிக்கன் பிரியாணியை விட சூப்பரா இருக்கும் ஆம்பூர் ஸ்டைல் சோயா பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க -
சனிபகவானின் வக்ர பெயர்ச்சியால் 138 நாட்களுக்கு ஜெயிக்கிற குதிரையா மாறப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
சீதா நவமி: உங்கள் வீட்டில் இந்த மாற்றங்களைச் செய்தா பணமழை கொட்டுமா? அதிர்ஷ்டம் தரும் வாஸ்து ரகசியம்! -
கோடையில் இந்த கஞ்சியை தினமும் 1 கப் குடிங்க.. உடல் எடையும் குறையும், உடல் சூடும் தணியும்..
தெரியாம கூட துடைப்பத்தை வீட்டின் இந்த திசையில் வெக்காதீங்க... இல்ல பெரிய நஷ்டத்தை சந்திப்பீங்க...
துடைப்பத்தை ஒரு வீட்டில் சரியான திசையில் வைக்க வேண்டும். இல்லாவிட்டால் அதுவே வீட்டில் வறுமையை வரவழைக்கும். இப்போது வாஸ்துப்படி துடைப்பத்தை எங்கு வைக்க வேண்டும் என்பது பற்றி காண்போம்.
நம் வாழ்வில் வாஸ்து மிகவும் முக்கியம் வாய்ந்தது. ஒருவர் குடியிருக்கும் வீடு வாஸ்துப்படி கட்டப்படாவிட்டால், அந்த வீட்டில் குடியிருப்போர் வாழ்க்கையில் பலவிதமான பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும். குறிப்பாக நிதி நிலையில் பிரச்சனைகள் ஏற்படும், வறுமை மேலோங்கும். இதற்கு காரணம் வீட்டு வாஸ்துப்படி கட்டப்படாமல் இருப்பது மற்றொன்று வீட்டில் வைத்திருக்கும் பொருட்கள் வாஸ்துப்படி சரியான இடத்தில் வைக்காமல் இருப்பது.

அந்த வகையில் ஒவ்வொரு வீட்டிலும் இருக்கும் ஒரு பொருள் தான் துடைப்பம். இந்த துடைப்பம் வீட்டில் உள்ள குப்பைகளை வெளியேற்ற உதவினாலும், துடைப்பம் லட்சுமி தேவி வாசம் செய்யும் பொருளாக கருதப்படுகிறது. ஒரு வீட்டை காலி செய்யும், அந்த வீட்டில் எதை மறக்கிறோமோ இல்லையோ, துடைப்பத்தை மறக்காமல் எடுத்து செல்ல வேண்டும். இல்லாவிட்டால், அது வீட்டின் லட்சுமியை விட்டு செல்வதற்கு சமம் என்று கூறுவார்கள். அப்படிப்பட்ட துடைப்பத்தை ஒரு வீட்டில் சரியான திசையில் வைக்க வேண்டும். இல்லாவிட்டால் அதுவே வீட்டில் வறுமையை வரவழைக்கும். இப்போது வாஸ்துப்படி துடைப்பத்தை எங்கு வைக்க வேண்டும் என்பது பற்றி காண்போம்.

உடைந்த துடைப்பத்தை பயன்படுத்தக்கூடாது
நீங்கள் உங்கள் வீட்டில் உடைந்த துடைப்பத்தை பயன்படுத்தி வந்தால், முதலில் அதை தூக்கி எறியுங்கள். வாஸ்துப்படி உடைந்த துடைப்பத்தை பயன்படுத்தக்கூடாது. ஒருமுறை துடைப்பம் உடைந்துவிட்டால், அது தீங்கு விளைவிக்கும் ஒரு பொருளாகிவிடும். எனவே இந்த மாதிரியான துடைப்பத்தை வீட்டில் வைத்திருந்தால், முதலில் அப்புறப்படுத்துங்கள்.

எந்த இடத்தில் வைக்கக்கூடாது
என்ன தான் துடைப்பம் லட்சுமி தேவியின் வடிவாக கருதப்பட்டாலும், அதை ஆபரணங்கள் அல்லது மதிப்புமிக்க பொருட்கள் வைக்கும் இடத்தில் வைக்கக்கூடாது. அப்படி வைத்தால், அது அந்த வீட்டில் வணிகம் செய்வோரின் வியாபாரத்தில் எதிர்மறையான தாக்கத்தை, அதாவது நஷ்டத்தை ஏற்படுத்தும்.

துடைப்பத்தை நிறுத்தி வைக்கக்கூடாது
துடைப்பத்தை நீங்கள் உங்கள் வீட்டில் நிறுத்தி வைத்திருந்தால், முதலில் அதை படுக்க வையுங்கள். ஏனெனில் வாஸ்துப்படி துடைப்பத்தை நிறுத்தி வைக்கக்கூடாது. இப்படி வைத்தால், அது மோசமான சகுனமாக கருதப்படுகிறது. எனவே எப்போதும் துடைப்பத்தை வீட்டில் படுக்க வையுங்கள். இதனால் உங்கள் வீட்டில் உள்ள செல்வம் அல்லது வங்கி இருப்பு எப்போதும் காலியாகாது.

மாலை வேளையில் வீட்டை பெருக்காதீர்
உங்கள் வீட்டில் பாட்டிமார்கள் இருந்தால், அவர்கள் மாலை வேளையில் வீட்டை பெருக்கக்கூடாது என்று சொல்வதைக் கேட்டிருப்பீர்கள். அது உண்மை தான், ஏனெனில் அவ்வாறு செய்வது லட்சுமி தேவியின் கோபத்திற்கு ஆளாக்கும். எனவே எப்போதும் இரவு அல்லது மாலை வேளையில் வீட்டைப் பெருக்குவதைத் தவிர்த்திடுங்கள். ஒருவேளை வீட்டை பெருக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தால், குப்பையை வீட்டிற்கு வெளியே கொட்டாதீர்கள்.

துடைப்பத்தை எந்த திசையில் வைக்கக்கூடாது?
வாஸ்து சாஸ்திரத்தின் படி, துடைப்பத்தை எப்போதும் தென்மேற்கு மூலை அல்லது மேற்கு திசையில் தான் வைக்க வேண்டும். அதே வேளையில், துடைப்பத்தை வடகிழக்கு திசையில் வைக்கக்கூடாது. இந்த திசையில் வைத்தால், அது வீட்டின் சந்தோஷம் மற்றும் மகிழ்ச்சியை அழிப்பதோடு, வீட்டில் உள்ளோரின் முன்னேற்றத்தில் தடையை ஏற்படுத்தும்.



Click it and Unblock the Notifications