Latest Updates
-
செவ்வாய் மேஷ ராசிக்கு செல்வதால் கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
இந்தியாவின் தேசிய காய் என்று அழைக்கப்படும் காய்கறி எது? அதற்கான காரணம் என்ன தெரியுமா? -
ஏப்ரல் இறுதியில் குரு-புதன் சேர்க்கையால் உருவாகும் அரிய ராஜயோகம்: இந்த 3 ராசிகளின் வருமானம் உயரும்! -
வெயில் காலத்தில் திருமணமா? இந்த 5 விஷயங்களைச் செய்யாவிட்டால் விசேஷமே வீணாகிவிடும்! -
மட்டன் சுவையை மிஞ்சும் சோயா உருளைக்கிழங்கு குருமா ரெசிபி - செஞ்சு பாருங்க, செமையா இருக்கும் -
பொருளாதாரச் சுரண்டல் இனி குடும்ப வன்முறை! மனைவியிடம் கையேந்த வைக்கும் கணவர்களுக்கு நீதிமன்றம் கொடுத்த செக்! -
செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டகாத்து வீசும்! உங்க ராசியும் இதுல இருக்கா? -
ஏசி ஓடினாலும் கரண்ட் பில் கம்மியா வரணுமா? ஏசியை இந்த மாதிரி யூஸ் பண்ணுங்க -
வீட்டிலேயே மாம்பழ ஐஸ்க்ரீம்மை ஈஸியாக செய்வது எப்படி-ன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. -
40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் இந்த உணவுகளில் ஒன்றை தினமும் சாப்பிடணுமாம் - அதான் நல்லது
எதையும் வேஸ்ட் பண்ணாதீங்க!!!

1. தினமும் அணியும் ரப்பர் செருப்பு பிய்ந்துவிட்டால், அதை தூக்கிப் போடாமல், அதை இரண்டாக வெட்டி கிரைண்டரின் நான்கு பக்கத்திற்கு அடியிலும் வைத்து விட்டால், மாவு அரைக்கும் போது கிரைண்டரானது நகராமல் இருக்கும்.
2. வீட்டில் பழைய சாக்ஸ்கள் (socks) இருந்தால், அதை தூக்கிப் போட வேண்டாம். ஏனெனில் வீட்டில் இருக்கும் சோபா, மேஜை போன்றவற்றை இடம் மாற்றி வைக்கும் முன் அவற்றின் கால்களில் இந்த சாக்ஸை நுழைத்து விட்டு இழுத்தால், தரையில் கீறல் விழாமல் இருக்கும்.
3. டேட் எக்ஸ்பயரி ஆன மாத்திரைகள் வீட்டில் இருந்தால் அதை தூக்கிப் போடாமல், அதனை பொடி செய்து தண்ணீரில் கலந்து செடிகளுக்கு தெளிக்கலாம். இதனால் செடிகளில் பூச்சி வராமல் இருக்கும்.
4. குளிக்கும் போது, துணி துவைக்கும் போது பயன்படுத்தும் பிளாஸ்டிக் பக்கெட் ஓட்டையாகி விட்டால், அதை தூக்கி எறிய வேண்டாம். அப்போது வீட்டில் இருக்கும் பழைய டூத் பிரஸை எரித்து, அதில் வரும் திரவத்தை ஊட்டையான இடத்தில் ஊற்றினால் ஓட்டை அடைபட்டுவிடும்.
5. சமைக்கும் போது வாசத்திற்காக வாங்கும் பெருங்காயப் பவுடர் வரும் டப்பாக்கள் காலியானதும் தூக்கிப் போடாமல், அதில் சோப்பு பவுடரைப் போட்டு, சாப்பிட்டத் தட்டுகளை அவசரத்திற்கு தேய்க்க சுலபமாக இருக்கும். இதனால் சோப்பும் வீணாகாது.
6. வீடு கட்டும் போது தரையில் வைக்க வாங்கும் டைல்ஸ்களை தூக்கிப் போடாமல், அதை சமயலறையில் எண்ணெய், நெய், ஊறுகாய் ஜாடிகளுக்கு அடியில் வைக்கப் பயன்படுத்தலாம்.
7. வீட்டில் பழைய டைரிகள் இருந்தால், அதன் அட்டையை வட்டமாக கத்தரித்து, அந்த அட்டையை சூடான பாத்திரங்களை வைக்கப் பயன்படும் டேபிள் மேட் ஆகப் பயன்படுத்தலாம்.
இவ்வாறெல்லாம் செய்தால் எந்த பொருளும் வீணாகாமல், நீண்ட நாட்கள் பயனுள்ளப் பொருளாகவே இருக்கும்.



Click it and Unblock the Notifications