பெண்களே! 5 மணி நேரத்திற்கும் மேலாக ஒரே பேடை அணிவதால் உங்க உடலில் என்னென்ன பாதிப்பு ஏற்படும் தெரியுமா?

ஒவ்வொரு பெண்ணுக்கும் மாதவிடாய் ஏற்படுவது பொதுவானது. ஒருவயதிற்கு பிறகு மாதம் முறை ஏற்படும் மாதவிடாய் சுழற்சியின்போது, பெண்களுக்கு இரத்த போக்கு ஏற்படும். மாதவிடாய் சுழற்சியும், அதன் அறிகுறிகளும் எல்லா பெண்களுக்கும் ஒரே மாதிரி இருப்பதில்லை.

ஒவ்வொரு பெண்ணும் மாதவிடாயின்போது, ஒவ்வொரு மாதிரியான அறிகுறிகளையும் பிரச்சனைகளையும் சந்திக்கலாம். சிலருக்கு கடுமையான வயிற்று வலி இருக்கலாம், சிலருக்கு வயிற்று வலி இல்லாமல் இருக்கலாம். சிலருக்கு இரத்த போக்கு அதிகமாக இருக்கலாம், சிலருக்கு குறைவாக இருக்கலாம். பெரும்பலான பெண்கள் மாதவிடாய் காலத்தில் பேடுகளை பயன்படுத்துவதில் தவறு செய்கிறார்கள்.

World Menstrual Hygiene Day: Side Effect Of You Wear The Same Pad For More Than 5 Hours In Tamil

இரத்த போக்கு அதிகமாக இருந்தால்தான், பேடுகளை மாற்றுகிறார்கள். இல்லையெனில், ஒரே பேடை நீண்ட நேரம் பயன்படுத்துகிறார்கள். சிலர் 10 மணி நேரம் அல்லது ஒருநாள் முழுவதும் ஒரே பேட்டை பயன்படுத்துகிறார்கள். உண்மையில், இவ்வாறு பேடுகளை பயன்படுத்துவது, பல உடல்நல பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

ஒவ்வொரு ஆண்டும் மே 28 அன்று மாதவிடாய் சுகாதார தினம் அனுசரிக்கப்படுகிறது. இந்த தினம் நல்ல மாதவிடாய் சுகாதார நிர்வாகத்தின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. உலக மாதவிடாய் சுகாதார தினத்தின் ஒரு பகுதியாக, நீங்கள் ஐந்து மணி நேரத்திற்கும் மேலாக ஒரே பேடை அணிந்தால் என்ன நடக்கும் என்பது பற்றி இங்கே பேசலாம். உங்கள் பேடை எப்போது மாற்ற வேண்டும் என்று இங்கே தெரிந்துகொள்ளுங்கள்.

5 மணி நேரத்திற்கும் மேலாக ஒரே பேடை அணிந்திருந்தால் என்ன நடக்கும்?
ஐந்து மணி நேரத்திற்கும் மேலாக ஒரே சானிட்டரி பேடை அணிவது உங்கள் ஆரோக்கியத்திற்கு சில தீவிர பிரச்சனைகளை ஏற்படுத்தலாம். நீங்கள் நீண்ட காலத்திற்கு ஒரு பேடை அணிந்திருந்தால், அந்த பேட் மாதவிடாய் இரத்த ஓட்டத்தை உறிஞ்சாது, இதனால் இரத்த ஓட்டம் பின்வாங்கச் செய்யலாம். இது பலவிதமான சங்கடமான மற்றும் ஆபத்தான உடல்நலப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும்.

ஈஸ்ட் தொற்று
அதிக நேரம் பேட் அணிவதால் ஏற்படும் பொதுவான பிரச்சனைகளில் ஒன்று ஈஸ்ட் தொற்று ஆகும். புணர்புழையின் pH சமநிலை சீர்குலைந்தால் ஈஸ்ட் தொற்று ஏற்படுகிறது. இது பூஞ்சை கேண்டிடா அதிகமாக வளர வழிவகுக்கிறது. நீண்ட நேரத்திற்கு ஒரே பேட் அணிவது உங்கள் யோனி பகுதியில் சூடான, ஈரமான சூழலை உருவாக்குகிறது. அதில் இந்த பூஞ்சைகள் செழித்து, தொற்றுநோயை ஏற்படுத்தும்.

சிறுநீர் பாதை நோய்த்தொற்றுகள்
ஒரே பேடுகளை அதிக நேரம் அணிவது ஈஸ்ட் தொற்றோடு, சிறுநீர் பாதை நோய்த்தொற்றுகளின் அபாயத்தை அதிகரிக்கும். மாதவிடாய் ஓட்டத்திலிருந்து பாக்டீரியா சிறுநீர்க்குழாய் வரை பயணித்து ஒரு தொற்றுநோயை ஏற்படுத்தும். நீண்ட காலத்திற்கு ஒரே பேட் அணிவது தோல் எரிச்சலை ஏற்படுத்தும். குறிப்பாக லேபியா மற்றும் பிறப்புறுப்பு பகுதியைச் சுற்றி எரிச்சல் ஏற்படலாம்.

நச்சு அதிர்ச்சி நோய்க்குறி(டாக்ஸிக் ஷாக் சிண்ட்ரோம்)
அதிக நேரம் ஒரே பேடை அணிவது நச்சு அதிர்ச்சி நோய்க்குறியையும் ஏற்படுத்தும். டாக்ஸிக் ஷாக் சிண்ட்ரோம் என்பது ஒரு தீவிர பாக்டீரியா தொற்று ஆகும். இந்த நிலைக்கு உடனடியாக சிகிச்சை அளிக்கப்படாவிட்டால் மரணத்தை விளைவிக்கும்.

நீண்ட காலத்திற்கு ஒரே பேடை அணிவது இந்த நோய்த்தொற்றை உருவாக்கும் அபாயத்தை அதிகரிக்கும். இவை அனைத்தையும் விட, இது மோசமான துர்நாற்றத்தையும் ஏற்படுத்தும். அது சங்கடமானது மற்றும் சுகாதாரமற்றது.

எவ்வளவு நேரத்திற்கு ஒருமுறை பேடை மாற்ற வேண்டும்?
உங்கள் சானிட்டரி பேடை ஒவ்வொரு மூன்று முதல் நான்கு மணி நேரத்திற்கும் அல்லது அது நிரம்பியதும் மாற்றுவதை உறுதி செய்வது முக்கியம். அவ்வாறு செய்வது, ஒரே பேடை அதிக நேரம் அணிவதால் ஏற்படும் உடல்நலப் பிரச்சனைகளைத் தடுக்க உதவும்

இறுதிக் குறிப்பு
லேசான இரத்த ஓட்டம் அல்லது இரத்த ஓட்டம் இல்லாத நிலையில், பேடில் பாக்டீரியாக்கள் உருவாகலாம். எனவே ஒவ்வொரு 3 அல்லது 4 மணி நேரத்திற்கும் அல்லது உங்கள் மாதவிடாய் அதிகமாக இருந்தால், அதை மாற்றுவது ஒரு நல்ல சுகாதார நடைமுறையாகும். இது கெட்ட நாற்றங்களை எதிர்த்துப் போராட உதவுகிறது மற்றும் நல்ல சுகாதாரத்தை மேம்படுத்துகிறது.

Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.

Story first published: Thursday, May 25, 2023, 21:03 [IST]
Desktop Bottom Promotion