Latest Updates
-
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை நோயை குணப்படுத்தும் 1,300 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் பற்றி தெரியுமா? -
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்.. -
1 வருடம் கழித்து மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 15 முதல் இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. -
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்...
தடுப்பூசி போட்ட பிறகு இந்த விஷயங்களை தெரியாமகூட செய்யாதீங்க... இல்லனா கொரோனா ஆபத்து அதிகமாகிரும்...!
கோவிட் தடுப்பூசிகள் நம் நம்பிக்கையின் ஒரே வழிமுறையாகவும், வைரஸிலிருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ளும் ஒரே வழியாகவும் மாறிவிட்டன.
கொரோனா வைரஸ் நம் வாழ்வின் ஒரு சோகமான பகுதியாக மாறியுள்ளது, இப்போதைக்கு அதிலிருந்து தப்பிக்க முடியாது என்று தெளிவாகத் தெரிகிறது. கோவிட் தடுப்பூசிகள் நம் நம்பிக்கையின் ஒரே வழிமுறையாகவும், வைரஸிலிருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ளும் ஒரே வழியாகவும் மாறிவிட்டன. உலகெங்கிலும் தடுப்பூசிகள் வெளியானதிலிருந்து, மில்லியன் கணக்கான மக்கள் ஏற்கனவே தங்களுக்கு தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர், மேலும் பலர் அதற்காக காத்திருக்கின்றனர்.

தடுப்பூசி முழுமையாக போடப்பட்டவர்கள் கூட தங்களின் முந்தைய வாழ்க்கையை முழுமையாக மீண்டும் தொடர முடியாது. ஏனெனில் கொரோனா தடுப்பூசி போட்டாலும் இன்னும் அவர்கள் கொரோனவிலிருந்து முழுமையாக தப்பிவிட்டீர்கள் என்று அர்த்தமல்ல. கொரோனா தடுப்பூசி போட்ட பிறகு செய்யக்கூடிய மற்றும் செய்யக்கூடாத வழிமுறைகளை வல்லுனர்கள் கூறியுள்ளனர். அவை என்னென்ன என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

தடுப்பூசி போட்ட பிறகும் கொரோனா வரலாம்
SARs-COV-2 வைரஸின் மிகவும் ஆபத்தான தன்மை என்னவெனில் அதன் கணிக்க முடியாத தன்மை. சிலருக்கு லேசான, மிதமான அல்லது கடுமையான நோய்த்தொற்றுகள் உள்ளன, மற்றவர்களுக்கு எந்த அறிகுறிகளும் இல்லை. எனவே, இதுபோன்ற கணிக்க முடியாத காலங்களில், COVID-19 க்கு எதிரான தடுப்பூசிகள் மட்டுமே ஒரே பாதுகாப்பாகும். ஆனால் நீங்கள் தடுப்பூசி போட்டுக்கொண்டால், தடுப்பூசிகள் உங்களுக்கு ஒரு குறிப்பிட்ட அளவிலான பாதுகாப்பை வழங்க முடியும் என்பதையும், கடுமையான நோய்த்தொற்றுகள் மற்றும் மருத்துவமனையில் அனுமதிப்பதைத் தவிர்க்கலாம் என்பதையும் நினைவில் கொள்வது அவசியம். இருப்பினும், இது உங்களை வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாப்பதில்லை, மேலும் நீங்கள் இன்னும் நோயைக் மற்றவர்களுக்கு அனுப்பலாம், குறிப்பாக சமூகத்தில் எளிதில் பாதிக்கப்படக்கூடிய மக்களுக்கு பரப்பலாம். நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் (சி.டி.சி) திங்களன்று புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டது, தடுப்பூசி போடப்பட்டவர்களுக்கு என்ன செய்ய முடியும் மற்றும் தடுப்பூசிக்குப் பின் செய்ய முடியாது என்பதை இந்த அறிக்கைக் குறிப்பிடுகிறது.

தடுப்பூசி போட்டவர்கள் கூட்டங்களில் பங்கேற்க முடியுமா?
சி.டி.சி வழிகாட்டுதல்களின்படி, கோவிட் ஷாட் கிடைத்த பிறகு உணவகங்கள், பார்கள், ஜிம்கள் போன்ற பொது இடத்தில் தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு. இருப்பினும், தடுப்பூசி போடப்பட்டவர்கள் மற்றும் தடுப்பூசி போடாதவர்கள் இருவருமே நெரிசலான பகுதிகளைத் தவிர்க்கவும், பொது மற்றும் பெரிய கூட்டங்களில் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் தொடர்ந்து கடைபிடிக்கவும் சி.டி.சி அறிவுறுத்துகிறது.

தடுப்பூசி போட்டவர்கள் மற்ற தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களை சந்திக்கலாமா?
சி.டி.சி வழிகாட்டுதலின்படி, நீங்கள் மற்றும் உங்கள் பெற்றோர் அல்லது நண்பர்கள் உட்பட உங்கள் அன்புக்குரியவர்கள் முழுமையாக தடுப்பூசி போடப்பட்டால், முகமூடி அல்லது சமூக தூரத்தை கடைபிடிக்காமல் சிறிய உட்புற அல்லது வெளிப்புற கூட்டங்களை நடத்துவது முற்றிலும் பாதுகாப்பானது.

தடுப்பூசி போட்டவர்கள் தடுப்பூசி போடாதவர்களை சந்திக்கலாமா?
ஒரே வீடு மற்றும் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் மற்றும் கடுமையான COVID-19 ஐ பெறுவதற்கான ஆபத்து காரணிகளைக் கொண்டிருக்கவில்லை என்பதால், முழுமையாக தடுப்பூசி போடப்பட்டவர்கள் அவர்களுடன் சந்திக்க முடியும். இருப்பினும், இதுபோன்ற சூழ்நிலைகளில் பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றுவது நல்லது. வைரஸின் தாக்கங்கள் மற்றும் அறிகுறிகளிலிருந்து உங்களைப் பாதுகாக்கும் நோய் எதிர்ப்பு சக்தி உங்களிடம் இருந்தாலும், நீங்கள் இன்னும் ஒரு கேரியராக இருக்க முடியும், மற்றவர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடும்.

தடுப்பூசி போட்டவர்கள் பயணம் செய்யலாமா?
சி.டி.சி வழிகாட்டுதல்களின் படி இரண்டு டோஸ் தடுப்பூசி பெற்றவர்கள் பயணிக்க முடியும் என்று கூறுகின்றன, அவர்கள் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் பின்பற்ற வேண்டும். பயணம் முழுமையாக தடுப்பூசி போடப்பட்டவர்களுக்கு குறைந்த ஆபத்தில் இருக்கும்போது, எல்லைகளுக்கு அப்பால் மற்றும் பல நாடுகளுக்கு பயணம் செய்வது மிகவும் ஆபத்தானது, குறிப்பாக தினமும் புதிய மாறுபாடுகள் உருவாகும் இந்த சூழலில் அவர்கள் புதிய தொற்றுகளுக்கு ஆளாக நேரிடலாம்.

தடுப்பூசி போட்டவர்கள் போடாதவர்களுக்கு வைரஸை பரப்ப இயலுமா?
தடுப்பூசி வைரஸுக்கு எதிராக ஒரு குறிப்பிட்ட அளவிலான பாதுகாப்பை வழங்கிகுவதால் நீங்கள் வைரஸை தடுக்க முடியும் என்று அர்த்தமல்ல. நீங்கள் இன்னும் ஒரு கேரியராக இருக்க முடியும். இருப்பினும், சமீபத்திய ஆய்வுகளின்படி, COVID தடுப்பூசிகள் தங்கள் தடுப்பூசி பெறாதவர்களுடன் ஒப்பிடும்போது அறிகுறியற்ற தொற்றுநோயை 80% க்கும் குறைக்கலாம். இருப்பினும், பிறழ்வுகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு இருப்பதால், கூடுதல் சான்றுகள் தேவை என்று நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.

தடுப்பூசி போட்ட பெற்றோர்கள் குழந்தைகளை தொடலாமா?
தற்போது வரை, இந்தியாவில் 18 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசிகள் இல்லை. சி.டி.சி வழிகாட்டுதல்களின் படி, தடுப்பூசி போட்டவர்கள் எந்தவொரு முகமூடி அல்லது சமூக தொலைதூரமும் இல்லாமல் வீட்டுக்குள்ளேயே சந்திக்க முடியும். குழந்தைகளுக்கு கடுமையான அறிகுறிகள் வருவதற்கான வாய்ப்புகள் குறைவு என்பதால், தடுப்பூசி போடப்பட்ட பெற்றோர்கள் அவர்களுடன் தொடர்பு கொள்வது பாதுகாப்பானது என்று சி.டி.சி அறிவித்துள்ளது.



Click it and Unblock the Notifications











