Latest Updates
-
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை நோயை குணப்படுத்தும் 1,300 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் பற்றி தெரியுமா? -
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்.. -
1 வருடம் கழித்து மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 15 முதல் இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. -
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்...
கொரோனா தடுப்பூசி போட்டபின் இந்த செயல்களை தாராளமாக செய்யலாமாம்... என்னென்ன செயல்கள் தெரியுமா?
கொரோனா வைரஸ் ஏற்படுத்திய பேரழிவிலிருந்து நம்மை காப்பாற்றும் பேராயுதமாக தடுப்பூசி உள்ளது, இது இயல்பு நிலைக்கு திரும்புவதற்கு நமக்கு உதவக்கூடும்.
கொரோனா வைரஸ் ஏற்படுத்திய பேரழிவிலிருந்து நம்மை காப்பாற்றும் பேராயுதமாக தடுப்பூசி உள்ளது, இது இயல்பு நிலைக்கு திரும்புவதற்கு நமக்கு உதவக்கூடும். வேலையைத் தொடங்குவது, மக்களைச் சந்திப்பது அல்லது வெளியே செல்வது போன்று, சரியான நேரத்தில் தடுப்பூசி போடுவதால் நிச்சயமாக நிறைய நன்மைகள் உள்ளன. இருப்பினும், டெல்டா வைரஸ் வேகமாக பரவும் இந்த சூழலில் தடுப்பூசி போட்டிருந்தாலும் சில செயல்களை செய்வது புத்திசாலித்தனமான காரியமல்ல.

இந்தியாவில் டெல்டா பிறழ்வின் ஆதிக்கம் இன்னும் குறையவில்லை, மேலும் இது எளிதில் பரவுவதாகவும், கடுமையான அறிகுறிகளை ஏற்படுத்துவதாகவும், தடுப்பூசி போடப்பட்டவர்களுக்கும் கூட தொற்று ஏற்படுவதாகவும் அறியப்படுகிறது. எனவே இந்த நேரத்தில் அலட்சியமாக இருப்பது உங்களை பேராபத்தில் விழவைக்கக்கூடும். இருப்பினும், பாதுகாப்பு வழிமுறைகளுடன் தடுப்பூசி போட்டுக்கொண்ட பிறகு நீங்கள் சில செயல்களில் ஈடுபடலாம். அவை என்னென்ன என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

தடுப்பூசிக்கு பிந்தைய நடவடிக்கைகளை மீண்டும் தொடங்குவது எப்போது பாதுகாப்பானது?
நீங்கள் முழுமையாக தடுப்பூசி போட்டவுடன் எந்தவொரு செயலும் மிகக் குறைவான ஆபத்தானதாகக் கருதப்படும் என்பதை நினைவில் கொள்ளுங்கள், அதாவது, இரண்டு டோஸ் தடுப்பூசியும் போடப்பட்ட பின். முதல் டோஸ் சிறிய அளவிலான பாதுகாப்பை வழங்க முடியும் என்றாலும், இரண்டாவது டோஸுக்குப் பிறகுதான் ஒரு நபர் முழுமையாக நோய்த்தடுப்புடன் இருப்பதாக கருதப்படுகிறார் மற்றும் கொரோனா வைரஸுக்கு எதிராக அதிகபட்ச நோய் எதிர்ப்பு சக்தியைக் கொண்டுள்ளார்.

தடுப்பூசி போடப்பட்டவர்களை நீங்கள் சந்திக்கலாம்
தடுப்பூசி போடப்பட்டவர்கள் தொற்றுநோய்க்கு முன்பு செய்த செயல்களைச் செய்வதும், முன்னர் அவர்கள் செய்த வேலைகளை மீண்டும் தொடங்குவதும் பாதுகாப்பானது என்று வல்லுநர்கள் பரிந்துரைக்கின்றனர். அதாவது தடுப்பூசி போடப்பட்டவர்கள் முன்பு போன்ற தொற்றுநோய்களின் தீவிர ஆபத்து இல்லாமல் மற்றவர்களைச் சந்திக்கலாம் அல்லது குழு நடவடிக்கைகளில் பங்கேற்கலாம். இருப்பினும், சுற்றியுள்ள அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டிருக்கிறதா என்பதை அறிந்து கொள்வது கடினம் என்றாலும், செய்ய வேண்டிய பாதுகாப்பான விஷயம் என்னவென்றால், முழுமையாக தடுப்பூசி போடப்பட்டவர்களுடன் சந்திப்பில் ஈடுபடுவதுதான். தடுப்பூசிக்குப் பிறகு, மூத்த குடிமக்கள், குழந்தைகள் அல்லது கொமொர்பிடிட்டி உள்ளவர்கள் போன்ற அதிக ஆபத்து உடையவர்களாகக் கருதப்படும் மக்களைச் சுற்றி இருப்பது ஒப்பீட்டளவில் பாதுகாப்பானதாக இருக்கும். இருப்பினும், முகமூடிகள் மற்றும் COVID பாதுகாப்பு நடவடிக்கைகள் பின்பற்ற இன்னும் அறிவுறுத்தப்படுகின்றன. மேலும் சந்திப்புகள் திறந்த வெளியில் காற்றோட்டமாக நடத்தப்படுவது பாதுகாப்பானதாக இருக்கும்.

பூங்காக்கள் மற்றும் வெளிப்புற இடங்களுக்குச் செல்லலாம்
மக்கள் நீண்ட காலமாக தங்கள் வீடுகளில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர் மற்றும் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ள நிலையில், தடுப்பூசி போடப்பட்ட நபர்கள் வெளியே செல்வது, உடற்பயிற்சி செய்வது அல்லது வெளியில் புதிய காற்றில் ஈடுபடுவது குறித்து பரிசீலிக்கலாம். டாக்டர்களின் கூற்றுப்படி, தடுப்பூசிக்கு பிந்தைய உடல் செயல்பாடுகள் உங்கள் நோயெதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகிறது, மேலும் பூங்காக்கள் மற்றும் திறந்த பொழுதுபோக்கு மையங்களில் அவ்வாறு செய்வது புத்திசாலித்தனமாக இருக்கும், ஏனெனில் வைரஸ் அங்கு உயிர்வாழ அதிக வாய்ப்புகள் இல்லை. ஜிம்கள் மற்றும் உட்புற விளையாட்டு மையங்கள் திறக்கப்பட்டிருந்தாலும், ஒரு குறிப்பிட்ட அளவிலான தொற்று அபாயங்களைக் கொண்டிருக்கக்கூடும், ஏனெனில் அவை கூட்டமாகவோ அல்லது குறைந்த காற்றோட்டமாகவோ இருக்கலாம். எனவே, எதிர்வரும் எதிர்காலத்தில், வெளிப்புறங்களில் நேரத்தை செலவிடுவது மிகச் சிறந்த செயலாகும். உடற்பயிற்சி செய்யும் போது முகமூடி அணிவதை உறுதி செய்யவும், பூங்காக்களுக்குச் சென்றால் சமூக இடைவெளியை கடைபிடிக்கவும்.

சில உட்புற கூட்டங்கள் பாதுகாப்பானதாக இருக்கும்
தடுப்பூசி போடப்பட்டவர்கள் உட்புற கூட்டங்களில் பங்கேற்பது ஒப்பீட்டளவில் மற்றவர்களை விட பாதுகாப்பானது. எடுத்துக்காட்டாக நீங்கள் மக்களைச் சந்திக்க நேர்ந்தால், அல்லது அவர்களின் வீட்டிற்குச் சென்றால், எல்லோரும் முழுமையாக தடுப்பூசி போடப்பட்டவராக இருந்தால் உட்புற சந்திப்புகள் பாதுகாப்பானதுதான். அலுவலகங்களில் கலந்துகொள்வது அல்லது வேலை செய்வது, அல்லது உணவகங்களுக்குச் செல்வது போன்ற செயல்கள் குறிப்பிட்ட அளவிலான அபாயத்துடன் வருகின்றன, ஆனால் எல்லோரும் முகமூடிகளை அணியத் தேர்வுசெய்தால், சமூக இடைவெளியை கடைபிடித்து பிற பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றினால் அது பாதுகாப்பான சூழலாகும். மளிகைக் கடைகள், கடைகள், மருத்துவமனைகள் ஆகியவற்றிற்குச் செல்வது உட்புற அமைப்புகளாகும், அவை ஓரளவு ஆபத்துகளுடன் வருகின்றன. எனவே, இவற்றில் சில செல்ல அவசியம் இருக்கும்போது, நீங்கள் எல்லா பாதுகாப்பு நெறிமுறைகளையும் நன்கு பின்பற்றுவதை உறுதிசெய்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்.

பயணம் செய்யும் போது கடுமையான வழிகாட்டுதல்களைப் பின்பற்றுங்கள்
பயணம் செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது, ற்றும் பலர் வெளிப்புற இடங்களுக்குச் செல்கின்றனர். பயணத்தின் மூலம், நோய்த்தொற்றின் அபாயங்கள் சிக்கலானதாக இருக்கலாம், ஆனால் தடுப்பூசி போடுவது ஆபத்தை குறைக்கிறது, ஆனால் முழுமையாக காப்பாற்றாது. நீங்கள் பயணிக்கும் முறை அல்லது நீங்கள் செல்லும் இடம் எவ்வளவு ஆபத்தானது அல்லது பாதுகாப்பானது என்பதை தீர்மானிக்க முடியும். தொற்றுநோய்க்கான குறைந்த ஆபத்து, குறைந்த கூட்டம் மற்றும் எல்லாவற்றிற்கும் மேலாக, எல்லா தடுப்பு நடவடிக்கைகளையும் பின்பற்றும் இடங்களுக்குச் செல்லுங்கள். சில மாநிலங்களில் பயணிகள் (தடுப்பூசி போடப்படாத / தடுப்பூசி போடப்படாதவர்கள்) ஒரு கோவிட் சோதனை செய்ய வேண்டும், எனவே அதற்கேற்ப செய்யுங்கள். ஹோட்டல்கள் மற்றும் இடங்களைப் பொறுத்தவரை, நீங்கள் முகமூடிகளைப் பயன்படுத்துவதும், வெளிப்பாடு வீதத்தைக் கட்டுப்படுத்துவதும், பாதுகாப்பான சூழலில் பயணிப்பதும் பாதுகாப்பானதாக இருக்கும். பயண முறையைப் பொறுத்தவரை, நீங்கள் ஒரு விமானம் / ரயில் அல்லது பஸ்ஸில் என எதில் பயணம் செய்தாலும் தடுப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றவும். இரட்டை மாஸ்க் கண்டிப்பாக அணிய வேண்டும், கூட்டமாக இல்லாத இடங்களுக்கு செல்வதை உறுதி செய்து கொள்ளுங்கள்.

பாதுகாப்பிற்கு என்ன செய்ய வேண்டும்?
மேலே குறிப்பிட்டுள்ளபடி, தற்போதைய தொற்றுநோய்களின் போது கூட, உண்மையான முக்கியத்துவம், அடிப்படை தடுப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றுவதில் உள்ளது. முகமூடி அணிதல், சமூக விலகல் மற்றும் COVID பாதுகாப்பு நடத்தையை பின்பற்றுங்கள். தடுப்பூசி நோய்த்தொற்றின் பல அபாயங்களைக் குறைப்பதுடன், தீவிரத்தன்மை மற்றும் இறப்பு விகிதங்களைக் குறைக்கிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள், இதற்கு முன்னர் நீங்கள் ஏற்கனவே தொற்றுக்கு ஆளாகியிருந்தாலும் மீண்டும் நோய்த்தொற்றுக்கு ஆளாகலாம். எனவே அடிப்படை நெறிமுறைகள் மற்றும் சுகாதார நடவடிக்கைகளைப் பின்பற்றுவது ஒரு நல்ல அளவிலான பாதுகாப்பை வழங்குகிறது, மேலும் வாழ்க்கையை உங்களுக்கு எளிதாக்குகிறது.



Click it and Unblock the Notifications











