Latest Updates
-
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை நோயை குணப்படுத்தும் 1,300 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் பற்றி தெரியுமா? -
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்.. -
1 வருடம் கழித்து மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 15 முதல் இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. -
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்...
கொரோனா வைரஸ் பற்றிய புதிய அதிர்ச்சி செய்தி... நாம எச்சரிக்கையா மட்டும் இல்லனா அவ்வளவுதான்...!
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் என்று அவர்களின் உடலில் தோன்றும் அறிகுறிகளை வைத்துதான் அவர்களுக்கு சோதனை செய்யப்பட்டு கொரோனா தோற்று இருப்பது உறுதி செய்யப்படுகிறது.
உலகில் மூன்றின் ஒரு பகுதி இப்போது கொரோனாவிற்கு பயந்து முடங்கியுள்ளது. பல நாடுகள் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது. கொரோனவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 12 இலட்சத்தை தாண்டிவிட்டது. கொரோனாவிற்கு மருந்து கண்டுபிடிக்க முடியாமல் ஆராய்ச்சியாளர்கள் தவித்து கொண்டிருக்கும் சூழ்நிலையில் இப்போது மேலும் ஒரு கெட்ட செய்தி தெரிய வந்துள்ளது.

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் என்று அவர்களின் உடலில் தோன்றும் அறிகுறிகளை வைத்துதான் அவர்களுக்கு சோதனை செய்யப்பட்டு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்படுகிறது. இந்நிலையில் அறிகுறிகள் இல்லாமலும் கொரோனா பரவ வாய்ப்புள்ளது என்று கண்டறியப்பட்டுள்ளது இதனால் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை பலமடங்கு அதிகரிக்க வாய்ப்புள்ளது.

அறிகுறிகள் இல்லாதவர்களால் பரவுகிறது
கொலம்பியா பல்கலைக்கழகத்தின் அறிக்கையின் படி கொரோனா வைரஸ் அறிகுறிகள் இல்லாதவர்கள் மூலமும் குறிப்பிட்ட அளவு பரவுவதாக கண்டறியப்பட்டுளள்து. நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தின் கருத்துப்படி உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் 25 சதவீதத்தினருக்கு நோய் தீவிரமடையும் வரை எந்த அறிகுறியும் இல்லை மேலும் நோய்வாய்ப்படவும் இல்லை, இதனால் அவர்கள் மூலம் பலருக்கும் நோய்த்தொற்று ஏற்பட்டிருக்க வாய்ப்புள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

பில்கேட்ஸின் கட்டுரை
கொரோனா வைரஸுக்கு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் பில்கேட்ஸின் அறக்கட்டளை தீவிரமாக இறங்கியுள்ளது. இந்நிலையில் பில் கேட்ஸ் சமீபத்தில் நியூ இங்கிலாந்து ஜர்னல் ஆஃப் மெடிசினில் வெளியிட்ட ஒரு கட்டுரையில் அறிகுறிகள் இல்லாமல் இருப்பவர்கள் மூலம் கொரோனாவானது உலகளாவிய கட்டுப்பாட்டு முயற்சிகளுக்கு ஏற்றதாக இல்லை என்று கூறியுள்ளார். மேலும் இதற்கு முன் வந்த SARS நோயை விட இதனை கட்டுப்படுத்துவது கடினம் என்று கூறியுள்ளார். ஏனெனில் SARS அறிகுறிகள் இருந்தவர்கள் மூலம் மட்டுமே பரவியது.

அறிகுறியற்ற பரவுதல்
கொரோனா வைரஸ் அறிகுறியற்ற நபர்களால் பரப்பப்படலாம் என்பதற்கான முதல் உறுதிப்படுத்தல் பிப்ரவரியில் வந்தது. சீனாவின் வுஹானைச் சேர்ந்த 20 வயது பெண்ணின் மருத்துவ அறிக்கையை விவரித்தபோது, அவர் ஐந்து குடும்ப உறுப்பினர்களுக்கு கொரோனா வைரஸைக் பரப்பியிருந்தார், ஆனால் அவருக்கு கொரோனா அறிகுறிகளோ அல்லது உடல்நிலை மோசமாகுதலோ ஏற்படவேயில்லை.

WHO அறிக்கை
பிப்ரவரியில் வெளியிடப்பட்ட சீனாவில் கொரோனா வைரஸ் வெடித்தது குறித்த உலக சுகாதார அமைப்பின் அறிக்கையின் படி எந்த அறிகுறிகளும் இல்லாத சிலர் சோதனையின் போது பாசிட்டிவ் முடிவை பெற்றனர். அதற்கு பதிலாக, கண்டறியப்பட்ட தேதியில் அறிகுறியற்றவர்களாக இருந்த பெரும்பாலான மக்கள் பின்னர் அறிகுறிகளை பெற்றனர். உண்மையிலேயே அறிகுறியற்ற நோய்த்தொற்றுகளின் விகிதம் தெளிவாக இல்லை, ஆனால் ஒப்பீட்டளவில் அரிதாகவே தோன்றுகிறது.

ஆய்வு முடிவுகள்
இந்த அறிகுறியற்ற பரவல் பற்றி பல ஆராய்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. பிற ஆராய்ச்சிகள் இந்த அறிகுறியற்ற பரவலை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளன. வாஷிங்டன் மாநிலத்தின் கிங் கவுண்டியில் உள்ள ஒரு மருத்துவ மனையில் கொரோனா வைரஸ் நோயாளிகளைப் பற்றிய ஒரு சி.டி.சி ஆய்வில் பாசிட்டிவ் முடிவுகள் வந்த பரிசோதனை செய்த 23 பேரில், 10 பேர் மட்டுமே கண்டறியப்பட்ட நாளில் அறிகுறிகளைக் காட்டினர். மீதமிருந்தவர்களுக்கு ஒரு வாரம் கழித்தே அறிகுறிகள் தெரிய தொடங்கின.

கட்டுப்படுத்துவதில் சிக்கல்
இந்த கண்டுபிடிப்புகள் நோய்த்தொற்றுக் கட்டுப்பாட்டுக்கு முக்கியமான தாக்கங்களைக் கொண்டுள்ளன. COVID-19 ஐக் கொண்ட நோயாளிகளை அடையாளம் காணவும் தனிமைப்படுத்தவும் அறிகுறிகளை மட்டுமே நம்பியிருக்கும் சூழ்நிலை உள்ளது. பிப்ரவரி மாதம் ஜப்பானில் தனிமைப்படுத்தப்பட்ட டயமண்ட் பிரின்சஸ் பயணக் கப்பலில் கொரோனா வைரஸ் நோயாளிகளையும் சி.டி.சி மதிப்பீடு செய்தது. கப்பலில் இருந்த 3,711 பேரில், 712 பேர் நேர்மறை சோதனை செய்தனர், ஆனால் அவர்களில் கிட்டத்தட்ட 50 சதவீதம் பேருக்கு அந்த நேரத்தில் எந்த அறிகுறிகளும் இல்லை.

அறிகுறியற்ற பரவுதலின் ஆபத்து
அறிகுறியற்ற பரவலின் சிக்கலான அம்சம் என்னவென்றால், மக்கள் தங்கள் நோய்த்தொற்றின் முந்தைய கட்டங்களில் அதிக கொரோனா வைரஸை பரப்புவதாகத் தெரிகிறது. ஆனால் சராசரி அறிகுறி தொடங்குவதற்கு ஐந்து நாட்கள் ஆகும். இரண்டு ஹாங்காங் மருத்துவமனைகளில் 23 கொரோனா வைரஸ் நோயாளிகளை பரிசோதித்த ஆய்வில், தனிநபர்களின் வைரஸ் பரவல் எத்தனை பேருக்கு பரவுகிறது, எந்த சூழலில் பரவுகிறது என்று ஆராயப்பட்டது. இதில் அறிகுறிகள் தெரிய தொடங்கிய முதல் வாரத்தில் அதிகமாகவும் பின்னர் படிப்படியாக குறைவதும் கண்டறியப்பட்டது.

குழந்தைகள் அறிகுறியற்ற கேரியர்களாக இருக்கலாம்
அறிகுறியற்ற கேரியர்களின் ஒரு சாத்தியமான குழு குழந்தைகளாக இருக்கலாம். இதுவரை, கொரோனா வைரஸால் நோயுற்றவர்களில் குழந்தைகள் உள்ளனர், ஆனால் சிலருக்கு லேசான தொற்று ஏற்பட்டு பின்னர் வைரஸ் அவர்களிடம் இருந்து பரவுகிறது. சீனாவில் COVID-19 நோயால் பாதிக்கப்பட்ட 700 குழந்தைகளில் 56 சதவீத குழந்தைகளுக்கு அறிகுறியே இல்லாமலும் மற்றும் மிக அறிகுறிகளை மட்டுமே கொண்டிருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது. அறிகுறி இருந்தாலும் இல்லாவிட்டாலும் மாஸ்க் அணிவதும், சமூக விலகலை கடைபிடிப்பதும், தனிமனித சுகாதாரத்தை கடைப்பிடிப்பதும் மட்டுமே கொரோன தொற்றிலிருந்து நம்மை பாதுகாக்கும்.



Click it and Unblock the Notifications











