Latest Updates
-
வார ராசிபலன் (29 March 2026-04 April 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்.. -
Tamil Nadu Election 2026: நம்ம தமிழ் நாட்டு அரசியல் தலைவர்களின் கல்வித்தகுதி தெரியுமா? -
கோதுமை மாவும், பொட்டுக்கடலையும் இருந்தா.. இப்படி செஞ்சு கொடுங்க.. கணக்கில்லாம சாப்பிடுவாங்க.. -
மீன ராசியில் உதயமாகும் சனி பகவான்: ஏப்ரல் முதல் இந்த 5 ராசிக்காரர்களின் கஷ்டங்கள் முடிவுக்கு வரப்போகுது... -
பலாக்காய் வெச்சு ஒருவாட்டி இப்படி சுக்கா செய்யுங்க.. மட்டன் சுக்காவே தோத்துடும்... -
புடலங்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி... இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க... தோசை, சாதத்துக்கு அட்டகாசமா இருக்கும்...! -
எந்த பிரச்சனைக்கு எந்த கீரையை சாப்பிட வேண்டும்? - டாக்டர். பிள்ளை விளக்கம் -
ஏப்ரல் மாதத்தில் நஷ்டங்களையும், ஆபத்துகளையும் சந்திக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான்... உங்க ராசி இதுல இருக்கா? -
30 ஆண்டுகள் கழித்து மீன ராசியில் உருவாகும் சுப யோகம்: ஏப்ரலில் ஜாக்பாட் அடிக்கபோவது இந்த 5 ராசிக்காரங்க தான்! -
பச்சை பயறு தோசையும்.. வேர்க்கடலை சட்னியும்.. - எப்படி செய்றது-ன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க..
எப்போதெல்லாம் தேங்காய் எண்ணெயைப் பயன்படுத்தக்கூடாது என தெரியுமா?
இங்கு எப்போதெல்லாம் தேங்காய் எண்ணெயைப் பயன்படுத்தக்கூடாது என்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து இனிமேல் அந்த பிரச்சனைகளுக்கு தேங்காய் எண்ணெயைப் பயன்படுத்தாதீர்கள்.
தேங்காய் எண்ணெயில் ஏராளமான சத்துக்கள் இருப்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான்.
அதற்காக இந்த எண்ணெய் அனைத்துவிதமான பிரச்சனைகளுக்கும் நல்ல தீர்வளிக்கும் என்று கூற முடியாது. தேங்காய் எண்ணெயாலும் ஒருசில பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்காது.

இங்கு எப்போதெல்லாம் தேங்காய் எண்ணெயைப் பயன்படுத்தக்கூடாது என்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து இனிமேல் அந்த பிரச்சனைகளுக்கு தேங்காய் எண்ணெயைப் பயன்படுத்தாதீர்கள்.

ஆயில் புல்லிங் :
பழங்காலத்தில் இருந்து வாயின் ஆரோக்கியத்தை மேம்படுத்த ஆயுர்வேதம் ஆயில் புல்லிங் முறை பின்பற்றப்பட்டு வருகிறது. ஆனால் ஆயில் புல்லிங் செய்வதற்கு தேங்காய் எண்ணெய் சிறந்ததாக இருக்காது.
மாறாக நல்லெண்ணெய் கொண்டு ஆயில் புல்லிங் செய்தால், அது வாயில் உள்ள பாக்டீரியாக்களை வேகமாகக் குறைக்கும்.

சன் ஸ்க்ரீன்
வெயிலில் இருந்து சருமத்திற்கு நல்ல பாதுகாப்பை தேங்காய் எண்ணெய் வழங்குவது உண்மை தான். ஆனால் அக்காலத்தில் வேண்டுமானால், இது சரியாக இருக்கும்.
ஏனெனில் அக்காலத்தில் ஓசோன் படலம் மிதமான அளவில் சூரியக்கதிர்களை வெளியிட்டது. தற்போதோ சூரியக்கதிர்கள் நேரடியாக சருமத்தை தாக்குவதால், தேங்காய் எண்ணெயால் போதிய பாதுகாப்பை வழங்க முடியாது.
ஏனெனில் தேங்காய் எண்ணெயில் SPF 8 தான் உள்ளது. ஆனால் சருமத்திற்கு பாதுகாப்பு அளிக்க குறைந்தது SPF 30 இருக்க வேண்டும்.

குளியல் :
குளிக்கும் நீரில் தேங்காய் எண்ணெயை சில துளிகள் சேர்த்துக் கொண்டால், சருமம் வறட்சி அடையாமல் தான் இருக்கும்.
ஆனால் இது சருமத்தில் எண்ணெயை அதிகமாக வழியச் செய்யும். அதுமட்டுமின்றி, குளிக்கும் போது வழுக்கி கீழே விழவும் வாய்ப்புக்கள் அதிகரிக்கும்.

வெட்டுக் காயங்கள்
வெட்டுக் காயங்கள் குணமாவதற்கு பலரும் தேங்காய் எண்ணெயைப் பயன்படுத்துவோம். ஆனால் இப்படி வெட்டு ஏற்பட்ட உடனேயே தேங்காய் எண்ணெயை பயன்படுத்தினால், மிகுந்த எரிச்சலை சந்திக்கக்கூடும்.
ஆகவே உடனே தேங்காய் எண்ணெய் பயன்படுத்துவதைத் தவிர்த்து, காயம் ஆறும் நிலையில் தேங்காய் எண்ணெயை உபயோகித்தால், விரைவில் காயம் ஆறிவிடும்.

பொரிப்பதற்கு :
உணவுகளை டீப் ப்ரை செய்வதற்கு தூய்மையாக்கப்படாத தேங்காய் எண்ணெயைக் கொண்டு பொரிக்காதீர்கள். நன்கு சுத்திகரிக்கப்பட்ட தேங்காய் எண்ணெய் கொண்டு உணவுப் பொருட்களை ப்ரை செய்வதே சிறந்தது.



Click it and Unblock the Notifications











