Latest Updates
-
2 ஸ்பூன் ஓட்ஸ், 3 முட்டை இருந்தா.. காலையில் இந்த டிபனை செஞ்சு சாப்பிடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 23 ஜூன் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க ரொம்ப கவனமா வாகனம் ஓட்டணும் -
புதன் பெயர்ச்சி இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பண மழை கொட்டப்போகுது.. -
ராகுவின் நட்சத்திர மாற்றத்தால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த செட்டிநாடு கொரடா சட்னியை அரைங்க - இட்லி, தோசைக்கு சூப்பரா இருக்கும் -
உங்க அக்குள் கருப்பா இருக்கா? அப்ப இந்த 5 வழிகளை ட்ரை பண்ணிப் பாருங்க... -
இந்த 3 ராசிக்காரங்க கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்ட அதிர்ஷ்ட ஆன்மாக்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
காய்ந்த பட்டாணி இருந்தா.. இந்த பக்குவத்துல குருமா செய்யுங்க.. சப்பாத்திக்கு வேற லெவல்-ல இருக்கும்.. -
பெண்களின் உடல் பற்றிய ஆச்சரியப்பட வைக்கும் உண்மைகள் - இவ்வளவு ரகசியம் ஒளிஞ்சிருக்கா? -
ஒரே நாளில் நடக்கும் சூரிய-சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது..
இந்த நாட்டு மருந்தை தினமும் 4 டேபிள் ஸ்பூன் சாப்பிட்டால் புற்றுநோய் போய்விடுமாம்!
உலகில் பில்லியன் கணக்கில் மக்கள் மிகவும் கொடிய நோயான புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அவஸ்தைப்பட்டு வருகின்றனர். ஒரு காலத்தில் புற்றுநோயால் ஏராளமான மக்கள் இறந்து வந்தனர். இன்னும் புற்றுநோயால் மக்கள் இறக்கின்றனர்.
ஆனால் புற்றுநோயை குணப்படுத்துவதற்கு மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால், ஆரம்பத்திலேயே புற்றுநோயின் அறிகுறிகளை கண்டறிந்து சிகிச்சை மேற்கொண்டு வந்ததால், இறப்போரின் எண்ணிக்கை குறைந்துள்ளது. இருப்பினும் சில மக்கள் இயற்கை வழிகளின் மூலமும் குணப்படுத்த முடியும் என்று கூறுகின்றனர்.
அந்த வகையில் மிகவும் பிரபலமான ரஷ்ய விஞ்ஞானியாக மெர்மெர்ஸ்கி புற்றுநோய்க்கு சமையலறையில் உள்ள பொருட்களைக் கொண்டே ஓர் சக்தி வாய்ந்த நாட்டு மருந்தைக் கண்டுபிடித்துள்ளார். அதுக் குறித்து தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.

ரஷ்ய விஞ்ஞானி
உலகில் மிகவும் பிரபலமான ரஷ்ய விஞ்ஞானியும், பேராசரியருமான ஹிரிஸ்டோ மெர்மெர்ஸ்கி புற்றுநோய்க்கான ஓர் சக்தி வாய்ந்த நாட்டு மருந்தை கண்டுபிடித்துள்ளார். இந்த மருந்தின் ஸ்பெஷலே, இதை சமையலறையில் இருக்கும் பொருட்களைக் கொண்டே ஒவ்வொருவரும் செய்யலாம் என்பது தான்.

மருந்தின் சக்தி
பேராசிரியர் மெர்மெர்ஸ்கி கண்டுபிடித்துள்ள இந்த மருந்தானது புற்றுநோயை குணப்படுத்துவது மட்டுமின்றி, உடலின் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்பெறச் செய்யும், மூளையின் செயல்பாட்டை மேம்படுத்தும், கல்லீரல் மற்றும் சிறுநீரகங்களை சுத்தம் செய்யும், இரத்த நாளங்களை சுத்தம் செய்யும் மற்றும் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

தேவையான பொருட்கள்:
எலுமிச்சை - 15
பூண்டு - 12 பற்கள்
தேன் - 1 கிலோ
வால்நட்ஸ் - 400 கிராம்
முளைக்கட்டிய கோதுமை - 400 கிராம்

முளைக்கட்டிய கோதுமை தயாரிக்கும் முறை
முதலில் கோதுமையை நீரில் போட்டு மூடி வைத்து, இரவு முழுவதும் (குறைந்தது 12 மணிநேரம்) ஊற வைக்க வேண்டும். பின் அந்த நீரை வடிகட்டிவிட்டு, நன்கு கழுவிக் கொள்ள வேண்டும். பின் அதனை ஒரு கிண்ணத்தில் போட்டு, 24 மணிநேரம் தனியாக வைத்தால், கோதுமை முளைக்கட்டிவிடும்.

மருந்து தயாரிக்கும் முறை
மிக்ஸியில் வால்நட்ஸ், பூண்டு, முளைக்கட்டிய கோதுமை ஆகியவற்றைப் போட்டு நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும். அதேப் போல் 5 எலுமிச்சையை துண்டுகளாக்கி தோலுடன் மிக்ஸியில் போட்டு நன்கு அரைத்துக் கொண்டு, கோதுமை கலவையுடன் கலந்து கொள்ள வேண்டும். எஞ்சியுள்ள எலுமிச்சைகளை பிழிந்து சாறு எடுத்து, அதனுடன் சேர்த்துக் கொள்ளவும். இறுதியில் தேனை சேர்த்து நன்கு கலந்து, ஒரு குடுவையில் போட்டு அடைத்து, ஃப்ரிட்ஜில் 3 நாட்கள் வைக்க வேண்டும்.

பயன்படுத்தும் முறை
பேராசிரியர் மெர்மெர்ஸ்கி, இந்த மருந்தை தினமும் உணவு உண்ணும் முன் 2 டேபிள் ஸ்பூன் மற்றும் படுக்கைக்கு முன் 2 டேபிள் ஸ்பூன் என எடுத்து வர பரிந்துரைக்கிறார்.

புற்றுநோய் இருப்பவர்கள் எடுக்கும் முறை
புற்றுநோய் இருப்பவர்களாக இருந்தால், சில 2 மணிநேரத்திற்கு ஒரு முறை 2 டேபிள் ஸ்பூன் உட்கொள்ள வேண்டும். இப்படி செய்து வந்தால், உடலின் மெட்டபாலிசம் அதிகரித்து, புற்றுநோய் செல்களை எதிர்த்துப் போராடும் சக்தி உடலுக்கு கிடைத்து, புற்றுநோயில் இருந்து விடுபடலாம் என்றும் விஞ்ஞானி மெர்மெர்ஸ்கி கூறுகிறார்.



Click it and Unblock the Notifications