Latest Updates
-
1 வருடத்துக்கு பின் மேஷம் சொல்லும் சுக்கிரன்: இந்த 3 ராசிக்காரங்க ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப் போறாங்களாம்...! -
336 ஆண்டுகளுக்கு முன் சத்ரபதி சாம்பாஜி மகாராஜாக்கு 11 மார்ச் 'இதே' நாளில் என்ன நடந்தது தெரியுமா? -
4 பிரெட், 1 கப் தயிர் இருந்தா 10 நிமிஷத்துல இந்த மாதிரி வடை சுடுங்க... மொறுமொறுனு டேஸ்ட் பிரமாதமா இருக்கும்... -
இந்த 4 ராசி ஆண்கள் ரொம்ப பொஸசிவான கணவர்களாக இருப்பார்களாம்...இவங்க மனைவிகள்தான் பாவம்..உங்க ராசி இதுல இருக்கா? -
LPG Gas: தலைவிரித்தாடும் சிலிண்டர் தட்டுப்பாடு... சிலிண்டர் சீக்கிரம் தீராம இருக்க இப்படி சமையல் பண்ணுங்க...! -
கோதுமை ரவா தோசையும்.. புதினா சட்னியும்..- 10 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 11 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மனஉளைச்சலான நாளாக இருக்குமாம்...! -
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை நோயை குணப்படுத்தும் 1,300 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் பற்றி தெரியுமா? -
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்..
எந்தெந்த அறிகுறிகள் இருந்தால் உடலில் என்னென்ன நோய்கள் இருக்கும்... அவசியம் தெரிஞ்சிக்கோங்க...
நம்முடைய உடலுக்குள் இருக்கின்ற நோய்கள் குறித்து நம்முடைய உடல் பாகங்கள் என்னென்ன அறிகுறிகளைக் காட்டுகின்றன என்பது பற்றி இங்கே விரிவாகப் பார்ப்போம்.
நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம் திடீரென ஒருவருக்கு பெரும் தீவிர வியாதி ஏதாவது வந்துவிடுகிறது. அதை கண்டுபிடிப்பதற்குள் அவருக்கு நோய் முற்றிவிட்டது என்று. அப்படி எந்த நோயும் வருவதில்லை. எல்லாவிதமான நோய்களும் வருவதற்கு முன்பாகவே சில அறிகுறிகளை நமக்குக் காட்டுகின்றன.

அதை நாம் கவனிக்காமல் விட்டு விடுகிறோம். நோயின் ஆரம்பக் கட்டத்தில் அறிகுறிகளும் மிக எளிமையானதாகத் தான் இருக்கும். அப்படி எந்தெந்த நோய்கள் என்னென்ன அறிகுறிகளுடன் வருகின்றன என்று பார்ப்போம்.
நம்முடைய உடலுக்கு ஏதாவது நோய் வருவதற்கு முன்பாக உடலில் சில அறிகுறிகள் தோன்றுகின்றன.

முக அரிப்பு
நம்முடைய முகத்தில் ஏதேனும் அரிப்போ நமைச்சலோ எடுத்தது என்றால், உங்களுடைய கூந்தலில் சுத்தம் இல்லை என்று அர்த்தம். சிலர் முகத்தை நமைச்சலால் சொரிந்து கொண்டே இருப்பார்கள். அது ஏதோ சருமப் பிரச்சினை என்று மட்டும் நினைத்துவிடக் கூடாது. அதற்கு தலைமுடிக்கும் நிறைய சம்பந்தம் உண்டு.

வயிற்றுவலி
வயிற்று வலியோ வயிற்றுக் கடுப்போ இல்லது வயிற்றுப் போக்கோ இருந்தால் அதுஉங்களுடைய கைவிரல் நகங்களில் சுத்தமில்லை என்று அர்த்தம்.

மூக்கு அரிப்பு
உங்களுடைய கண்களிலோ மூக்கிலோ தொடர்ந்து அரிப்பு எடுத்துக் கொண்டிருந்தால், உங்களுக்கு ஜலதோஷம் பிடிக்கப் போகின்றது என்று அர்த்தம். ஜலதோஷம் பிடித்தவுடன் ஒரு வாரம் அவதிப்படுவதை விட, ஆரம்பிக்கும் முன்னரே உணர்ந்து கொண்டால் நல்லது.

காது வலி
காது வலி ஏதோ காதின் உள்ளுக்குள் இருக்கிற கொப்புளம், நரம்பு பிரச்சினை என்று மட்டும் நினைத்து விடாதீர்கள். நம்முடைய காதுகளில் குடைச்சலோ வலியோ வந்தது என்றால் காய்ச்சல் வரப் போகின்றது என்று அர்த்தம். அதைப் புரிந்து கொண்டு முன்னெச்சரிக்கையோடு இருக்க வேண்டும்.

கழுத்து மடிப்பு
சிலருக்கு கை, கால், கழுத்து மடிப்புப் பகுதி அடர்ந்த கருப்பாக இருக்கும். அது சரும அழுக்குகள் சேர்ந்ததால் மட்டும் வருகிறது என்று நினைக்காதீர்கள். அவ்வாறு கை மடிப்பு, கழுத்து மடிப்பு, கால் இடுக்குகளில் கருப்பான பட்டை விழுந்தால் உங்களுடைய கணையத்தில் இன்சுலின் சுரப்பு அதிகமாகிறது என்பது பொருள்
உடலில் இன்சுலின் அதிகமாகச் சுரந்து அதிக அளவில் அடிக்கடி பசி எடுக்கிறது என்றால், அது நீரிழிவின் ஆரம்பம் என்பது பொருள்.

கால் வெடிப்பு
உங்களுடைய கால் பாதங்களில் அதிக அளவில் வெடிப்புகள் உண்டாகிறது என்றால், உடலில் அதிக அழுத்தமும் உடல் சூடும் இருக்கிறது என்பது பொருள். இது வெறும் பனி காலத்தில் ஏற்படுகிற ஒன்று மட்டுமில்லை, பித்தத்தால் வருவது மட்டுமல்ல என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

முழங்கால்
முழங்கால் மூட்டுகள் அல்லது கை, கால்களின் மணிக்கட்டுகளில் வலி எடுத்தால் உங்ளுடைய உடல் எடை உங்கள் உயரத்துக்கு ஏற்றதை விடவும் அதிகரித்து விட்டது. உடனே அதை குறைக்க வேண்டும் எ்னறு அர்த்தம்.

இடுப்பு வலி
தொடர்ந்து உங்களுடைய முதுகுத் தண்டு அல்லது இடுப்புப் பகுதியில் வலி எடுக்குமானால் அந்த பகுதியில் உள்ள இரண்டு முக்கிய எலும்புகளும் மிருதுவாகி, தேய்மானம் உண்டாகத் தொடங்கிவிட்டது என்று அர்த்தம்.

உதடு வெடிப்பு
உதட்டில் அல்லது உதட்டின் மேல் தோலில் வெடிப்பு, பிளவு, தோல் உரிவது போன்றவை ஏற்படுமானால் உங்களுடைய உடலில் நீர்ச்சத்தும் எண்ணெய்ப் பசையும் குறைந்து விட்டது என்று பொருள்.

தோள்பட்டை
தோள்பட்டை, முதுகுத்தாரை, குதிங்கால் இவற்றில் இறுக்கமோ வலியோ வந்தால் உடலில் காற்றின் அழுத்தம் அதிகரித்து வாயு தேங்கியிருக்கிறது என்று அர்த்தம்.

கைவிரல்கள்
கைவிரல் நகங்களுக்கு மேல் மெல்லிய கருப்புக் கோடு விழுந்தால் இதயத்தில் பிரச்சினை இருக்கிறது என்று அர்த்தம். இது பெரும்பாலும் அவ்வளவு எளிதாக நம்மால் கண்டுபிடிக்க முடிவதில்லை. ஏனெனில் கைவிரல்களையும் அதில் மாறும் நிற மாற்றம், நகங்களின் நிறங்களை நாம் பொருட்படுத்தாமல் இருப்பதே இதற்குக் காரணம்.



Click it and Unblock the Notifications











