Just In
- 27 min ago இந்த படத்துல உங்களுக்கு எது முதல்ல தெரியுதுன்னு சொல்லுங்க.. உங்கள பத்தின ரகசியத்தை சொல்றோம்..
- 2 hrs ago உங்களுக்கு இந்த அறிகுறிகள் அதிகம் தெரியுதா? அப்ப உடம்புல தண்ணீர் ரொம்ப கம்மியா இருக்கு-ன்னு அர்த்தம்... உஷார்.
- 4 hrs ago 1 கப் ரேசன் அரிசி வெச்சு ஈவ்னிங் டைம்-ல இப்படியொரு ஸ்நாக்ஸ் செய்யுங்க.. அட்டகாசமா இருக்கும்..
- 5 hrs ago இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கனுமா?.. இதை சாப்பிடுங்கள்..!
Don't Miss
- News ஜஸ்ட் 26 வயசு தான்! தனிஆளாய் பாஜக-காங்கிரசை மிரட்டும் ராஜ்புத் இளைஞர்! யார் இந்த ராஜஸ்தான் ரவீந்திரா
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- Sports Thank you ரஹானே! தயவு செய்து ஓய்வு பெற்றுவிடுங்க.. தொடர்ந்து சொதப்பும் வீரருக்கு வாய்ப்பு ஏன்?
- Automobiles குடும்பத்தோட போகலாம்னு சொல்றாங்களே இந்த கார் பாதுகாப்பானதா இருக்குமா? மோதல் ஆய்வுல வச்சு செஞ்சிருக்காங்க!
- Movies Actor Vikram: விக்ரம் படத்தில் இணைந்த பிரபல மலையாள நடிகர்.. அறிவித்த படக்குழு!
- Finance நீங்க கிரெடிட் கார்டு வச்சிருக்கீங்களா.. ஆன்லைன் மோசடியில் இருந்து தப்பிக்க நச்சுனு 4 டிப்ஸ்!
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
சிறுநீரக நோய்களின் அறிகுறிகளும்! அவற்றை வராமல் தடுக்கும் அற்புத உணவுகளும்!!
சிறு நீரக நோய்களின் அறிகுறிகளும்,அவற்றை வராமல் தடுக்கும் அற்புத உணவுகளும் பற்றி இந்த கட்டுரையில் காணலாம்
இந்தியாவில் ஏறக் குறைய 1 லட்சத்திற்கும் அதிகம் பேர் சிறு நீரக நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். நமது அன்றாட வாழ்க்கை முறையை விட பெரிதாக வேறென்ன காரணங்கள் கூறிட முடியும். மரபுக் கோளாறுகளால், பாதிக்கப்படுபவர்களை தவிர மற்றவர்கள் தங்களது ஒழுங்கில்லாத வாழ்க்கை முறையால்தான் சிறு நீரக நோய்க்கு ஆளாகிறார்கள்.
ஒருவரது உடலில் இருந்து அன்றாடம் சராசரியாக 1,500 மில்லி முதல் 2500 மில்லி வரை சிறுநீர் பிரிகிறது. சிறுநீரகங்கள் செயல் இழப்பு ஏற்பட்டு கழிவுகள் வெளியேறாமல் தங்கிவிடும் போதுதான் உடல் நலம் பாதிக்கப்பட்டு உயிருக்கு ஆபத்து ஏற்படுகிறது. சிறுநீரகங்கள் ஏன் பாதிக்கின்றது தெரியுமா?
சரியாக நீர் அருந்தாத காரணங்களா, அதிக சக்தி வாய்ந்த மாத்திரைகள் சாப்பிடுவதால், முக்கியமாக ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அதை சரியாக கவனிக்காமல் விட்டு விடுவதால் சிறுநீரக பாதிப்புக்கு ஆளாகிறார்கள். அதன் அறிகுறிகளையும், சிறு நீரக நோய்களை தடுக்கும் முறைகளையும் பார்க்கலாம்.
வீக்கம் :
உடலில் தேங்கியுள்ள தேவையற்ற நீரை சிறுநீரகத்தால் வெளியேற்ற முடியாமல் போகும்போது நீர் உடலுக்குள்ளேயே தங்கி கணுக்கால், கால், பாதம், கைகள் குறிப்பாக முகத்தில் வீக்கம் அல்லது அடைப்பு ஏற்படும்.
ரத்த சோகை :
சிறுநீரகம் பாதிப்படையும்போது ரத்த சிவப்பு அணுக்கள் ஆக்சிஜனை எடுத்துச் செல்லும் அளவும் குறையும். இதனால்தான் சோர்வும் ரத்தசோகையும் ஏற்படுகின்றன.
சிறுநீர் :
நுரைபோன்ற சிறுநீர் வருவது, இயல்பைவிட அதிகமாக அல்லது குறைவாக சிறுநீர் கழிப்பது, சிறுநீரில் ரத்தம் கலந்து வருவது, சிறுநீர் தொற்று ஏற்படுவது, அடிக்கடி சிறுநீர் கழிப்பது, சிறுநீர் வருவது போன்ற உணர்வு இருந்தாலும் சிறுநீர் கழிக்க முடியாமல் போவது மற்றும் சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல் உணர்வு ஏற்படுவது.
சரும வெடிப்பு :
சிறுநீரகத்தின் செயல்பாடு குறையும்போது உடலில் கழிவுகள் அதிகமாகச் சேரும். இதனால் தோல்களில் அதிகமான வெடிப்பு மற்றும் தடிப்புகள் உண்டாகும்.
தலைசுற்றல் :
மூளைக்கு ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டு, மறதி, கவனமின்மை, தலைசுற்றல் ஆகியவை உண்டாகும். சிலருக்கு அடிக்கடி குமட்டல் வரும். அதிகப்படியான காய்ச்சல் இருந்து குமட்டல் வந்தால், சிறுநீரகங்களில் கற்கள் இருக்கின்றன என்று அர்த்தம்.
அடிவயிற்று வலி :
பாலிசிஸ்டிக் ஓவரி பிரச்னை உள்ளவர்களுக்கு முதுகுவலி அடிக்கடி ஏற்படும். இன்னும் சிலருக்கு சிறுநீரகத்துக்கு அருகிலேயே வலி தோன்றும். இந்த அறிகுறி வெகு சிலருக்கு மட்டுமே தெரியும்.
சிறு நீரக நோய்கள் வராமல் தடுக்கும் உணவுகள் :
ஓமம்:
ஓம இலை சிறுநீரக செயல்பாட்டுக்கு மிகவும் நல்லது. எனவே தினமும் உணவுடன் சிறிது ஒம இலையை சேர்த்து கொள்ளவும். அல்லது ஓமத்தை நீரில் போட்டு கொதிக்க வைத்து அந்த நீரை வாரம் இரு நாட்கள் அருந்தலாம்.
புளி :
புளியிலுள்ள டார்டாரிக் அமிலம், சிறுநீர ஆக்சலேட் கற்கள் உருவாக்கத்தை தடுகிறது. புளியை அதிகம் உணவில் சேர்த்து கொள்வதால்தான் இந்தோனேசிய மக்களுக்கு அதிகம் சிறுநீரக பிரச்சினைகள் ஏற்படுவதில்லையென்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
மஞ்சள் :
மஞ்சள் சிறுநீரக செயல்யிழப்பை தவிர்க்கவும், இழந்த செயல்பாட்டை புத்துணர்வு அடையவும் செய்யும் மகிமையுடையது என்று சித்த மருத்துவத்தின்படியும், இக்கால அறிவியலின்படியும் நிருபிக்கபட்டுள்ளது.
துளசி
புதிதான துளசி இலையின் சாறுடன் , தேன் கலந்து ஆறு நாட்கள் உண்டால் சிறு நீரகக் கற்கள் உருவாகாமல் தடுக்கலாம். சிறுநீரகக் கற்கள் இருந்தாலும் கரைந்து விடும்.
வெங்காயம் :
அடிக்கடி ஏற்படும் சிறு நீரகத் தொற்றும் கூட சிறு நீரக் கோளாறுகளை உண்டு பண்ணும். வெங்காயத்தை உணவில் அதிகமாகச் சேர்த்துக்கொண்டால் போதும். வெங்காயம் கழிவுப் பொருட்களை கரைத்து, அலர்ஜியை குறைத்து கழிவுகளை வெளியே தள்ளிவிடும். இதனால் சிறுநீர்த் தாரைத் தொற்றும் குறையும்.
காய்கறிகள்:
பூசணிக்காய், வாழைத்தண்டு, பூண்டு, வெங்காயம், காரட், கத்திரிக்காய், முள்ளங்கி, பச்சைப் பட்டாணி, முட்டைக்கோஸ், காலிபிளவர் போன்ற காய்கறிகளை அடிகக்டி உணவில் சேர்த்துக் கொள்வதால் சிறு நீர் நன்கு பிரியும். சிறு நீரகங்கள் ஆரோக்கியமாக இருக்கும்.
பழங்கள் :
ஆப்பிள் எலுமிச்சை, பேரிக்காய், அன்னாசி, ப்ளம்ஸ், தர்பூசணி, போன்றவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக சிட்ரஸ் நிறைந்த பழங்கள் சிறு நீரகத்தில் தங்கும் நச்சுக்களை அழித்து, கற்கள் உருவாகாமல் தடுத்து சிறு நீரகங்களை ஆரோக்கியமாக வைக்கின்றன.
திராட்சை :
திராட்சை இதில் உள்ள, நீரும், பொட்டாசியம் உப்பும், கல் உருவாகுவதை தடுக்குமாம். மேலும் இந்த பழத்தில் உள்ள ஆல்புமின் மற்றும் சோடியம் குளோரைடு கல் பிரச்சினக்கு நல்ல தீர்வாக இருக்குமாம்.
மாதுளம் பழம்:
இந்த பழத்தின் விதையைப் பிழிந்து, ஒரு டேபில் ஸ்பூன் அளவு எடுத்து, அதனுடன் 2 ஸ்பூன் கொள்ளு சாருடன்( குதிரைக்கு பிடித்தது..!!) சேர்த்து சாப்பிட்டால் , கல் பிரச்சினை தீருமாம்.
அத்திப்பழம்
இந்த பழத்தை, நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி, ஒரு மாதம் தொடர்ந்து, காலையில் காலி வயிற்றில், பருகினால் பலன் தரும் .
தவிர்க்க வேண்டியவை :
சிறுநீரக நோய் வந்தவர்கள் சர்க்கரை வள்ளிக் கிழங்கு, வாழைப்பழம், வேக கீரையின் வடிகட்டிய நீர் போன்றவற்றை எடுத்துக் கொள்ளக் கூடாது. காரணம் இவற்றில் பொட்டாசியம் அதிகம் இருப்பதால் அவற்றை வடிகட்ட சிறு நீரகங்கள் சிரமப்படும்.
சிறுநீர் தொற்றை போக்கும் உணவுகள் :
சிறு நீர் தொற்று ஏற்பட்டால் அவை சிறு நீர்க் குழாயின் வழியாக சிறு நீரகங்களை அடைந்து அங்கேயும் தொற்றுக்களை ஏற்படுத்திவிடும். ஆகவே சிறு நீர் தொற்றை அஜாக்கிரதையாக எடுத்துக் கொள்ள வேண்டாம்.
இளநீர் :
சிறு நீர் தொற்றிற்கு அருமருர்ந்து இள நீர்தான். தினமும் 3 முறை இள நீர் குடிக்க வேண்டும். அதனால் வேகமாக கிருமிகள் அழிந்துவிடும். மில முக்கியமக நீர் சொம்பு சொம்பாக குடித்தேயாக வேண்டும். நீர்தான் முக்கிய மருந்தே.
முள்ளங்கி :
முள்ளங்கி சிறு நீர்த் தோற்றைப் போக்கும் முக்கிய உணவாகும். தினமும் முள்ளங்கிச் சாறு எடுத்து அருந்தினால் சிறு நீரகங்களை பாதிக்கும் கிருமிகளை அழிக்க முடியும்.
சிறு நீரகக் கற்களை வரவிடாமல் தடுக்கும் உணவுகள் :
சிறு நீரக கற்கள் சரியாக நீர் அருந்தாவிட்டால் உருவாகும். ஒருமுறை வந்தால் திரும்பவும் வர வாய்ப்பிருப்பதால் கவனமாக இருக்கவேண்டும். வாழைத்தண்டு, தர்பூசணி, ஆகியவைகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.
எலுமிச்சை சாறு :
சிறு நீரக கற்களுக்கு எலுமிச்சை சாறு மிகச் சிறந்த பலனைத் தருகிறது. சிறு நீரகத்தில் உருவாகும் ஆக்சிலேட் கற்களை கரைக்கும் தன்மை சிட்ரஸ் பழங்களுக்கு உண்டு. குறிப்பாக எலுமிச்சை சாறு மிகவும் அற்புதமான பலனைத் தரும். எலுமிச்சை சாறு அடிக்கடி குடிப்பவர்களுக்கு சிறு நீரகக் கற்கள் ஏற்படாது.