சீனாவில் மீண்டும் வேகமாக பரவி வரும் hMPV வைரஸ்... யாருக்கெல்லாம் எளிதில் பரவுகிறது தெரியுமா? ஜாக்கிரதை...!

கொரோனாவின் கடுமையான தாக்கத்திலிருந்து உலகம் இன்னும் முழுமையாக வெளிவராத சூழலில் சீனாவில் மீண்டும் ஒரு புதிய தொற்றுநோய் பரவி வருவதாக சர்வதேச ஊடகங்கள் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

இந்த புதிய வைரஸ் தாக்கத்தால் மருத்துவமனைகள் நிரம்பியுள்ளன, பிணவறைகள் நிரம்பி வழிகின்றன, இன்ஃப்ளூயன்ஸா ஏ, மைக்கோபிளாஸ்மா நிமோனியா மற்றும் hMPV (Human Metapneumovirus) எனப்படும் மர்மமான வைரஸ் உள்ளிட்ட பல வைரஸ்கள் இந்த நிலையை மேலும் மோசமாக்குகின்றன என்று X தளத்தில் செய்திகள் தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளது.

China Faces New Virus Outbreak Five Years After Covid

சீனாவில் கோவிட்-19 வைரஸ் மீண்டும் பரவுகிறதா?

சீனாவில் சுவாச நோய்கள் அதிகரித்து வரும் நிலையில், சீன அரசாங்கமோ அல்லது உலக சுகாதார அமைப்போ (WHO) எச்சரிக்கைகள் எதையும் வெளியிடவில்லை மற்றும் அவசரகால நிலையை அறிவிக்கவில்லை. எனவே வைரஸ் பற்றிய வதந்திகள் இருந்தபோதிலும், இப்போதைக்கு தொற்றுநோய் பரவும் ஆபத்தில் உலகம் இல்லை என்று ஆறுதல் அடைந்து கொள்ளலாம்.

சீனாவில் என்னதான் நடக்கிறது?

வைரஸ்களின் அதிகரிப்பு குழந்தைகள் மற்றும் பெரியவர்களை பாதிக்கிறது. நோயெதிர்ப்பு அமைப்பு முழுமையாக வளர்ச்சியடையாத சிறியவர்கள், குறிப்பாக எளிதில் பாதிக்கப்படுகின்றனர். வயதானவர்கள் அல்லது ஆஸ்துமா அல்லது COPD போன்ற ஆரோக்கிய பிரச்சினைகளைக் கொண்டவர்கள் தீவிரமான பாதிப்புகளுக்கு அதிக ஆபத்தில் உள்ளனர். காய்ச்சல், இருமல், மூக்கு ஒழுகுதல் மற்றும் சில சமயங்களில் மூச்சுத் திணறல் போன்ற காய்ச்சல் அல்லது சளி போன்ற அறிகுறிகள் மிகவும் அதிகமாகவே இருக்கும். இருப்பினும், சிலருக்கு இது மூச்சுக்குழாய் அழற்சி அல்லது நிமோனியா போன்ற கடுமையான பிரச்சினைகளாக மாறலாம்.

பல ஆண்டுகளாக, கடுமையான லாக்டவுன்கள் மற்றும் குறைக்கப்பட்ட சமூக தொடர்புகள் பல வைரஸ்களின் பரவலைக் குறைத்தன, இதனால் மக்கள், குறிப்பாக குழந்தைகள், அன்றாட நோய்க்கிருமிகளால் பாதிக்கப்படும் வாய்ப்பு குறைந்தது. இப்போது லாக்டவுன் கட்டுப்பாடுகள் இல்லாததால், குழந்தைகள் மற்றும் பாதிக்கப்படக்கூடிய பெரியவர்களைக் கடுமையாகத் தாக்கும் இந்த வைரஸ்களுக்கு மக்கள் மீண்டும் பாதிக்கப்படத் தொடங்கியுள்ளார்கள்.

China Faces New Virus Outbreak Five Years After Covid

இது உண்மையில் ஒரு தொற்றுநோயா?

X தளத்தில் உள்ள சில பயனர்கள் நெரிசலான மருத்துவமனைகளைக் காட்டும் வீடியோக்களை பதிவிட்டுள்ளனர் மற்றும் சீனாவின் மருத்துவமனைகள் புதிய வைரஸ் தொற்றால் நிரம்பி வழிவதாக ஊகித்துள்ளனர். இருப்பினும், இந்த கூற்றுக்களை ஆதரிக்க எந்த நம்பகமான ஆதாரமும் இல்லை. சீன சுகாதார அதிகாரிகள் மற்றும் WHO ஆகிய இரண்டும் அத்தகைய நெருக்கடியை உறுதிப்படுத்தும் அதிகாரப்பூர்வ அறிக்கைகள் எதையும் வெளியிடவில்லை.

யாரெல்லாம் ஆபத்தில் உள்ளனர்?

hMPV குழந்தைகள் மற்றும் வயதானவர்களை தாக்கும் வாய்ப்பு அதிகம் என்றாலும், அது யாரை வேண்டுமென்றாலும் பாதிக்கலாம். பலவீனமான நோயெதிர்ப்பு அமைப்பு அல்லது நாள்பட்ட சுவாசப் பிரச்சினைகள் உள்ளவர்களும் அதிக ஆபத்தில் உள்ளனர். யாராவது இருமல் அல்லது தும்மும்போது வெளியிடப்படும் நீர்த்துளிகள் மூலம் இந்த வைரஸ் பரவுகிறது, எனவே நெரிசலான இடங்கள் வைரஸ் பரவும் முக்கிய இடங்களாக இருக்கிறது.

எப்படி பாதுகாப்பாக இருக்க வேண்டும்?

தற்போதைய நிலவரப்படி, hMPV பரவுவதைத் தடுப்பதற்கான சிறந்த வழி சுகாதாரத்தைக் கடைபிடிப்பதுதான் குறிப்பாக கைகளை கழுவவுவது, நெரிசலான இடங்களில் முகமூடிகளை அணிவது, முடிந்தவரை சமூக தூரத்தை பராமரிப்பது போன்றவற்றை கடைபிடிக்க வேண்டும். உங்கள் உடல்நிலை சரியில்லாமல் இருந்தால், வீட்டில் தங்கி ஓய்வெடுப்பது முக்கியம், குறிப்பாக உங்களுக்கு ஆஸ்துமா, சிஓபிடி அல்லது உங்கள் நுரையீரலைப் பாதிக்கும் வேறு ஏதேனும் நிலை இருந்தால் ஓய்வு மிகவும் அவசியம்.

Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.

Desktop Bottom Promotion