Latest Updates
-
1/4 கப் தனியா இருந்தா இந்த வித்தியாசமான சட்னியை அரைங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமாக இருக்கும் -
வட இந்தியத் திருமணங்கள்: சுட்டெரிக்கும் வெயிலில் சிக்கித் தவிக்கும் கொண்டாட்டங்கள் - இதோ சில அதிரடி மாற்றங்கள்! -
இந்த 5 உணவுகள் உங்கள் உடலில் துர்நாற்றத்தை ஏற்படுத்தி சங்கடமாக உணர வைக்குமாம் - பார்த்து சாப்பிடுங்க -
வாஸ்து செடிகள்: கோடை வெயிலில் வீட்டை குளிர்ச்சியாக வைத்து அதிர்ஷ்டத்தை அள்ளுவது எப்படி? -
சிக்கன் பிரியாணியை விட சூப்பரா இருக்கும் ஆம்பூர் ஸ்டைல் சோயா பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க -
சனிபகவானின் வக்ர பெயர்ச்சியால் 138 நாட்களுக்கு ஜெயிக்கிற குதிரையா மாறப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
சீதா நவமி: உங்கள் வீட்டில் இந்த மாற்றங்களைச் செய்தா பணமழை கொட்டுமா? அதிர்ஷ்டம் தரும் வாஸ்து ரகசியம்! -
கோடையில் இந்த கஞ்சியை தினமும் 1 கப் குடிங்க.. உடல் எடையும் குறையும், உடல் சூடும் தணியும்.. -
இன்றைய ராசிபலன் 25 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ராஜயோகம் கூடிவரப்போகுதாம் -
செவ்வாய் மேஷ ராசிக்கு செல்வதால் கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா?
உங்க முகத்தில் எப்பவும் எண்ணெய் வழியுதா? அப்ப இந்த 3 பொருளை கலந்து தடவுங்க..
கெமிக்கல் கலந்த பொருட்களைக் கொண்டு முகத்தில் உள்ள எண்ணெய் பசையை போக்குவதற்கு பதிலாக, ஒருசில இயற்கை பொருட்களைக் கொண்டு ஆரோக்கியமான வழியில் போக்கலாம்.
வெயில் காலத்தில் அதிகம் வியர்ப்பதனால் பலரது முகம் எந்நேரமும் எண்ணெய் வழிந்தவாறு இருக்கும். இப்படி எப்போதும் முகத்தில் எண்ணெய் வழிந்தவாறு இருந்தால், முகம் பார்ப்பதற்கு அசிங்கமாகவும் கருமையாகவும் காணப்படும். அதோடு எண்ணெய் பசையுடன் முகம் இருந்தால், முகத்தில் பருக்கள், கரும்புள்ளிகள், வெள்ளைப்புள்ளிகள் போன்றவை வர ஆம்பித்துவிடும். சிலர் இயற்கையாகவே எண்ணெய் பசை சருமத்தைக் கொண்டிருப்பார்கள். உங்கள் முகத்தில் அதிகம் எண்ணெய் வழிவது போன்று இருந்தால், உடனே அதைக் கட்டுப்படுத்த முயற்சிக்க வேண்டும்.

முகத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் பசையைப் போக்க, பலரும் சோப்பு அல்லது ஃபேஸ் வாஷைக் கொண்டு முகத்தை கழுவுவார்கள். ஆனால் கெமிக்கல் கலந்த பொருட்களைக் கொண்டு முகத்தில் உள்ள எண்ணெய் பசையை போக்குவதற்கு பதிலாக, ஒருசில இயற்கை பொருட்களைக் கொண்டு ஆரோக்கியமான வழியில் போக்கலாம். இப்போது சருமத்தில் வழியும் அதிகப்படியான எண்ணெய் பசையைப் போக்க உதவும் சில எளிய வழிகளைக் காண்போம்.

தயிர்
உங்கள் முகத்தில் எண்ணெய் அதிகம் வழிகிறதா? அப்படியானால் தயிரைப் பயன்படுத்துங்கள். ஏனெனில் தயிர் முகத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெயை உறிஞ்சுவதற்கு உதவுகிறது. அதற்கு தயிரை முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.

ஓட்ஸ்
ஓட்ஸ், தேன் மற்றும் தயிர் ஆகியவற்றை சம அளவில் எடுத்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். பின் அதை முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, வெதுவெதுப்பான நீரால் கழுவ வேண்டும். எண்ணெய் பசை சருமத்தைக் கொண்டவர்கள், ஓட்ஸ் மற்றும கற்றாழை ஜெல்லை சரிசம அளவில் எடுத்து நன்கு கலந்து, முகத்தில் தடவி மென்மையாக சிறிது நேரம் மசாஜ் செய்து, 10-15 நிமிடம் ஊற வைத்து, பின் முகத்தைக் கழுவ வேண்டும்.

மஞ்சள்
முகத்தில் அதிக எண்ணெய் பசையைக் கொண்டவர்கள், ஒரு பௌலில் 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள், 1/2 டீஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் 1 டீஸ்பூன் தேன் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி நன்கு காய்ந்த பின், வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவ வேண்டும். இப்படி தினமும் ஒருமுறை செய்து வந்தால், முகத்தில் வழியும் எண்ணெயைக் கட்டுப்படுத்தலாம்.

எலுமிச்சை
ஒரு டீஸ்பூன் எலுமிச்சை சாற்றுடன், 1/2 டீஸ்பூன் தேன் மற்றும் 1 டீஸ்பூன் பால் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 10-15 நிமிடம் ஊற வைக்க வேண்டும். பின் குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவினால், முகத்தில் வழியும் அதிகப்படியான எண்ணெய் பசை கட்டுப்படும்.

கோதுமை மாவு
ஒரு பௌலில் 1 டீஸ்பூன் கோதுமை மாவில், 1 டீஸ்பூன் தேன் மற்றும் 2 டீஸ்பூன் தயிர் சேர்த்து கெட்டியாக பேஸ்ட் தயாரித்துக் கொள்ள வேண்டும். இந்த பேஸ்ட்டை முகத்தில் தடவி நன்கு காய்ந்த பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இப்படி வாரத்திற்கு 2 முறை செய்து வந்தால், சருமத்தில் எண்ணெய் பசையைக கட்டுப்படுத்தலாம்.

தக்காளி
தக்காளியில் எண்ணெயை உறிஞ்சும் அமிலம் உள்ளதால், இது சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் பசையை உறிஞ்சி வெளியேற்ற உதவுகிறது. அதற்கு தக்காளியை வெட்டி, முகத்தில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்து, 15 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.



Click it and Unblock the Notifications