Latest Updates
-
செவ்வாய் மேஷ ராசிக்கு செல்வதால் கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
இந்தியாவின் தேசிய காய் என்று அழைக்கப்படும் காய்கறி எது? அதற்கான காரணம் என்ன தெரியுமா? -
ஏப்ரல் இறுதியில் குரு-புதன் சேர்க்கையால் உருவாகும் அரிய ராஜயோகம்: இந்த 3 ராசிகளின் வருமானம் உயரும்! -
வெயில் காலத்தில் திருமணமா? இந்த 5 விஷயங்களைச் செய்யாவிட்டால் விசேஷமே வீணாகிவிடும்! -
மட்டன் சுவையை மிஞ்சும் சோயா உருளைக்கிழங்கு குருமா ரெசிபி - செஞ்சு பாருங்க, செமையா இருக்கும் -
பொருளாதாரச் சுரண்டல் இனி குடும்ப வன்முறை! மனைவியிடம் கையேந்த வைக்கும் கணவர்களுக்கு நீதிமன்றம் கொடுத்த செக்! -
செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டகாத்து வீசும்! உங்க ராசியும் இதுல இருக்கா? -
ஏசி ஓடினாலும் கரண்ட் பில் கம்மியா வரணுமா? ஏசியை இந்த மாதிரி யூஸ் பண்ணுங்க -
வீட்டிலேயே மாம்பழ ஐஸ்க்ரீம்மை ஈஸியாக செய்வது எப்படி-ன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. -
40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் இந்த உணவுகளில் ஒன்றை தினமும் சாப்பிடணுமாம் - அதான் நல்லது
ஆட்டுப்பாலை வைச்சு உங்க கூந்தலை சினிமா ஹீரோயின் மாதிரி மாத்தலாமாம்.... சொல்கிறார் அழகுக்கலை நிபுணர் தாரணி...!
Hair Care Tips: நமக்கு பெரும்பாலும் பால் என்றவுடன் நினைவுக்கு வருவது பாக்கெட் பால். சிலருக்கு மாட்டுப்பால் மற்றும் தாய்ப்பால் நினைவிற்கு வரும், சிலருக்கு ஆரோக்கிய நன்மை காரணமாக கழுதை பால் கூட நினைவிற்கு வரும். ஆனால், நாம் மறந்து போன அதீத ஆரோக்கிய நன்மைகளை கொண்டிருக்கும் பால் தான் ஆட்டு பால்.
ஆட்டு பால் கால்சியம், புரதம் மற்றும் வைட்டமின்கள் போன்ற அத்தியாவசியமான ஊட்டச்சத்துக்களின் வளமான ஆதாரமாக இருக்கிறது. இது நடுத்தரத்தொடர் கொழுப்பு அமிலங்களின் அதிக செறிவைக் கொண்டுள்ளதால், இதய ஆரோக்கியத்திற்கு நன்மையை தருகின்றன.

இதை பசுவின் பாலுடன் ஒப்பிடும்போது, செலினியம் மற்றும் துத்தநாகம் போன்ற சில தாதுக்கள் இதில் அதிக அளவில் நிறைந்திருக்கிறது. இதெல்லாம் தெரிந்ததால்தான் என்னவோ நம் மகாத்மா காந்தி ஆட்டுப்பாலை எப்போது பயன்படுத்தி வந்தார். இதில் மற்ற பாலை காட்டிலும் புரதம் அதிக அளவில் இருக்கிறது.
இந்த காரணங்களால்தான் பெரும்பாலான கூந்தல் ஆரோக்கியப் பொருட்களில் ஆட்டுப்பால் பயன்படுத்தப்படுகிறது. ஆட்டுப்பால் உங்களுக்கு கிடைத்தால் அதை வைத்தே உங்கள் இழந்த கூந்தல் ஆரோக்கியத்தை மீட்கலாம் என்று அழகுக்கலை நிபுணர்களும் கூறுகிறார்கள். இந்த பதிவில் அழகுக்கலை நிபுணர் தாரணி ஆட்டுப்பாலை வைத்து எப்படி கூந்தலை ஆரோக்கியமானதாக என்று நம்முடன் பகிர்ந்துள்ளார்.
ஆட்டு பால் ஷாம்பூ
தேவையான பொருட்கள்:
ஆட்டுப்பால் - 1 கப்
பூந்திக்கொட்டை - 5
வெந்தயம் - ¼ ஸ்பூன்
சீயக்காய் - 5
செய்முறை:
வெந்தயம், சீயக்காய் மற்றும் பூந்தி கொட்டையை முதல் நாள் இரவே ஊறவைத்து விடவும். அடுத்த நாள் காலை நீரை வடித்துவிட்டு, பூந்திக்கொட்டையின் விதைகளை நீக்கி கொள்ளவும். பின் இவற்றை ஆட்டு பால் சேர்த்து நன்றாக அரைத்து, தலைக்கு தேய்த்து குளிக்கவும். இது முடி உதிர்வு, முடி உடைதல் போன்ற பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வாக இருக்கும்.
ஆட்டு பால் ஹேர் மாஸ்க்
தேவையான பொருட்கள்:
ஆட்டுப்பால் - ½ கப்
பாதாம் எண்ணெய் - 1 ஸ்பூன்
ஆமணக்கு எண்ணெய் - 1 ஸ்பூன்
ரோஸ் வாட்டர் - 1 ஸ்பூன்
செய்முறை:
ஆட்டுப்பால், பாதாம் எண்ணெய், ஆமணக்கு எண்ணெய், மற்றும் ரோஸ் வாட்டரை நன்றாக கலந்து கொள்ளவும். இந்த கலவையை முடியின் மீது தேய்த்து 20 முதல் 30 நிமிடங்கள் வைத்திருக்கவும். பின், வெதுவெதுப்பான நீரில் அலசவும். ஆட்டுப்பாலில் இருக்கும் வைட்டமின்கள் மற்றும் தாதுக்களின் கலவையானது மயிர்க்கால்களில் தூண்டுதலை ஏற்படுத்தி, முடியின் வளர்ச்சியை அதிகரிக்கிறது. வைட்டமின் பி6 கெரட்டின் உற்பத்திக்கு முக்கிய பங்களிப்பதால், முடி வளர்ச்சிக்கு அத்தியாவசியமாகிறது.
ஆட்டுப்பால் கண்டிஷ்னர்
தேவையான பொருட்கள்:
ஆட்டுப்பால் - ½ கப்
கற்றாழை ஜெல் - 3 ஸ்பூன்
தேங்காய் பால் - 2 ஸ்பூன்
ஆளிவிதை - 1 ஸ்பூன்
செய்முறை:
ஆளிவிதையை சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்கு கொதித்த உடன் எடுத்து ஆற விடவும். மிதமான சூட்டில் இருக்கும் போது, ஒரு மெல்லிய துணியால் வடித்து எடுத்து கொள்ளவும். பின் அதனுடன், ஆட்டுப்பால், கற்றாழை ஜெல், மற்றும் தேங்காய் பால் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். இதை நன்றாக முடியில் தேய்த்து, 2-3 நிமிடங்களுக்கு பின் குளிர்ந்த நீரால் அலசவும். தலைமுடி பராமரிப்பில் ஆட்டுப்பாலை தொடர்ந்து பயன்படுத்துவது முடியின் தன்மையை மேம்படுத்தும். அதன் ஈரப்பதமூட்டும் பண்புகள், உதிர்வதைக் கட்டுப்படுத்தவும், பளபளப்பாக்கவும், விரும்பிய ஸ்டைலை செய்து கொள்வதை எளிதாக்கவும் உதவுகிறது.



Click it and Unblock the Notifications
