Latest Updates
-
முட்டை பத்திரியும், தேங்காய் பாலும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 22 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ஆசீர்வதிக்கப்பட்ட நாளாக இருக்குமாம் -
18 மாதங்களுக்கு பின் நடக்கப்போகும் ராகு-கேது பெயர்ச்சியால் ராஜயோகம் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
சரவணபவன் நெய் மணக்கும் வெண் பொங்கல் ரெசிபி - ட்ரை பண்ணுங்க - டேஸ்ட் அசத்தலா இருக்கும் -
இந்த 4 மாதங்களில் பிறந்தவர்களிடம் நல்ல குணங்களை விட கெட்ட குணங்கள்தான் அதிகமாக இருக்குமாம் -
5 முட்டை இருந்தா பள்ளிப்பாளையம் முட்டை வறுவலை செஞ்சு பாருங்க - காரசாரமா வேற லெவலில் இருக்கும் -
மயில்கள் ஏன் மழை வரும்போது நடனமாடுகிறது தெரியுமா? காரணம் தெரிஞ்சா ஷாக் ஆகிருவீங்க -
சிக்கன் வாங்குனா இந்த மாதிரி தெலங்கானா ஸ்டைலில் மசாலா செஞ்சு பாருங்க - சாதம், டிபனுக்கு அட்டகாசமாக இருக்கும் -
குருபகவான்-செவ்வாய் அரிய சேர்க்கையால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
தென்னிந்தியாவின் சுல்தான் என்று அழைக்கப்பட்ட வலிமையான அரசர் யார் தெரியுமா?
எண்ணெய் தடவும்போது நீங்க செய்யும் இந்த தவறுகளால் உங்க முடி முழுசா கொட்டி போயிடுமாம்... ஜாக்கிரதை!
உச்சந்தலையில் எண்ணெய் பசையுள்ளவர்கள் எண்ணெயை பயன்படுத்த வேண்டாம். ஏனெனில், எண்ணெய்ப் பசையுள்ள கூந்தலும் எண்ணெய் பசையுள்ள உச்சந்தலையும் ஒரு நல்ல கலவை அல்ல.
தலைமுடி பராமரிப்பிற்கும் மற்றும் ஆரோக்கியத்திற்கும் எண்ணெய் மிக அவசியம். எண்ணெய் உச்சந்தலைக்கு நன்மை பயக்கும். உங்கள் உச்சந்தலையை மெதுவாக மசாஜ் செய்யும் போது, அது முடி வளர்ச்சிக்கும், முடி உதிர்வைக் குறைக்கவும் உதவும். தேங்காய் எண்ணெய், பாதாம் எண்ணெய், ஆமணக்கு எண்ணெய், வெங்காய எண்ணெய் மற்றும் ஆம்லா எண்ணெய் ஆகியவை உங்கள் தலைமுடி மற்றும் உச்சந்தலைக்கு சிறந்த எண்ணெய்கள். கூந்தலுக்கு எண்ணெய் தடவுவது முடி உதிர்தல் முதல் சேதமடைந்த முனைகள் வரை மன அழுத்த நிவாரணம் வரை எல்லாவற்றுக்கும் ஒரு போர்வை தீர்வாகும் என்பதில் சந்தேகம் இல்லை. நீங்கள் ஆன்லைனில் அதைப் பற்றி படித்திருந்தாலும் அல்லது உங்கள் பாட்டியிடம் அல்லது அம்மாவிடம் கேட்டிருந்தாலும், அது உண்மைதான்.

உங்கள் தலைமுடி மற்றும் உச்சந்தலையின் ஆரோக்கியத்தில் நீங்கள் கவனம் செலுத்திருந்தாலும், நீங்கள் உங்கள் தலைமுடிக்கு சரியான முறையில் எண்ணெய் வைக்கிறீர்களா? என்பது முக்கியம். ஆம், உங்கள் தலைமுடிக்கு எண்ணெய் தடவ சரியான வழி இருக்கிறது. மேலும், முடிக்கு எண்ணெய் தடவும்போது நீங்கள் செய்யும் பொதுவான தவறுகள் மற்றும் அவற்றை நீங்கள் எவ்வாறு தவிர்க்கலாம் என்பதை பற்றி இக்கட்டுரையில் காணலாம்.

பொடுகு தொல்லை உள்ளவர்கள் தவிர்க்க வேண்டும்
இது உங்களுக்கு அதிர்ச்சியாக இருக்கலாம். ஆனால், இதை நீங்கள் நம்ப வேண்டும். பொடுகு இருக்கும் போது தலையில் எண்ணெய் தடவக்கூடாது. அதற்கு பதிலாக, உங்கள் உச்சந்தலையை சுத்தம் செய்ய கற்றாழை ஜெல், வேப்ப இலைகள் அல்லது வேப்ப எண்ணெயை பயன்படுத்த வேண்டும்.

இரவு முழுவதும் எண்ணெயை தலையில் தங்க விடாதீர்கள்
எண்ணெயை தலையில் நான்றாக தேய்த்து வைத்திருப்பது நல்லது என்று கூறப்பட்டாலும், அவ்வாறு செய்ய வேண்டாம். உங்கள் தலைமுடியின் வகை மற்றும் பருவத்திற்கு ஏற்ற வெதுவெதுப்பான எண்ணெயுடன் பகலில் உங்கள் தலைமுடிக்கு எண்ணெய் தடவுவது சிறந்தது. ஒரே இரவில் எண்ணெய் தடவுவதால் தூசி படிந்து உங்கள் தலைமுடி பலவீனமாகிவிடும்.
உணவிற்குப் பிறகு அல்லது சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு நீங்கள் எண்ணெயைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் மயிர்க்கால்கள் இயற்கையாகவே நாளின் முடிவில் மூடப்படும், மேலும் எண்ணெய் வளர்சிதைமாற்றம் செய்யாது அல்லது நன்றாக உறிஞ்சாது. மேலும், நீங்கள் ஒவ்வாமை, சளி, இருமல், ஆஸ்துமா, சைனசிடிஸ், கழுத்து வலி அல்லது கடினமான கழுத்து போன்றவற்றால் பாதிக்கப்படலாம். ஒரு இரவு முழுவதும் உங்கள் முடி/ உச்சந்தலையில் எண்ணெய் தடவுவதைத் தவிப்பது நல்லது.

எண்ணெயை அதிகமாக பயன்படுத்த வேண்டாம்
உங்கள் தலைமுடிக்கு அதிக எண்ணெயை பயன்படுத்துகிறீர்களா? உங்கள் தலைமுடிக்கு எண்ணெய் இன்னும் தேவை என்று நீங்கள் நினைக்கும் இடத்தில் மேலும் சேர்த்து, உள்ளங்கையால் தொடங்கி ஆழமாக மசாஜ் செய்யவும். நீங்கள் எவ்வளவு அதிகமாக எண்ணெயைப் பயன்படுத்துகிறீர்களோ, அவ்வளவு கடினமாக கழுவ வேண்டும். எனவே நீங்கள் அதிக ஷாம்பூவைப் பயன்படுத்துவீர்கள், அது உங்கள் முடிக்கு மோசமாகிவிடும்.

யார் எண்ணெயை பயன்படுத்த வேண்டாம்?
உச்சந்தலையில் எண்ணெய் பசையுள்ளவர்கள் எண்ணெயை பயன்படுத்த வேண்டாம். ஏனெனில், எண்ணெய்ப் பசையுள்ள கூந்தலும் எண்ணெய் பசையுள்ள உச்சந்தலையும் ஒரு நல்ல கலவை அல்ல. இருப்பினும், உங்களுக்கு வறண்ட கூந்தல் மற்றும் எண்ணெய் நிறைந்த உச்சந்தலையில் இருந்தாலும், எண்ணெய் தடவுவது உதவாது, ஏனெனில் அது உங்கள் துளைகளை மேலும் அடைத்துவிடும். அதற்கு பதிலாக, கற்றாழை ஜெல் மூலம் உங்கள் உச்சந்தலையை ஆற்றலாம் மற்றும் உங்கள் தலைமுடியை மென்மையாக்கலாம்

முடி உதிர்தல் பிரச்சனை
உங்களுக்கு முடி உதிர்தல் பிரச்சனை இருந்தால், எண்ணெயில் இருந்து விலகி இருங்கள். நல்ல ஊட்டச்சத்து மற்றும் உணவைப் போலவே, எண்ணெயும் வேர்களை பலப்படுத்துகிறது மற்றும் உங்கள் முடி உதிர்வதைத் தடுக்கிறது. ஏற்கனவே முடி உதிர்ந்திருந்தால், எண்ணெய் தடவ வேண்டிய அவசியமில்லை. அதற்கு பதிலாக, தயிர், ஊறவைத்த வெந்தயம் மற்றும் கலோஞ்சி விதைகளின் ஹேர்பேக்கை பயன்படுத்தவும். அல்லது ஒரு முட்டையை அடித்து வெண்ணெய் அல்லது வாழைப்பழம் சேர்க்கவும். இதனை உச்சந்தலையில் தடவி 20 நிமிடம் கழித்து கழுவவும். நீரிழப்பு, உலர்ந்த உச்சந்தலை முடி காரணமாக உங்கள் தலைமுடி உதிர்ந்தால், உங்கள் தலைமுடிக்கு எண்ணெய் தேவை. ஆனால் எதற்கும் எல்லாவற்றுக்கும் அல்ல.



Click it and Unblock the Notifications