Latest Updates
-
இந்த 5 உணவுகள் உங்கள் உடலில் துர்நாற்றத்தை ஏற்படுத்தி சங்கடமாக உணர வைக்குமாம் - பார்த்து சாப்பிடுங்க -
வாஸ்து செடிகள்: கோடை வெயிலில் வீட்டை குளிர்ச்சியாக வைத்து அதிர்ஷ்டத்தை அள்ளுவது எப்படி? -
சிக்கன் பிரியாணியை விட சூப்பரா இருக்கும் ஆம்பூர் ஸ்டைல் சோயா பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க -
சனிபகவானின் வக்ர பெயர்ச்சியால் 138 நாட்களுக்கு ஜெயிக்கிற குதிரையா மாறப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
சீதா நவமி: உங்கள் வீட்டில் இந்த மாற்றங்களைச் செய்தா பணமழை கொட்டுமா? அதிர்ஷ்டம் தரும் வாஸ்து ரகசியம்! -
கோடையில் இந்த கஞ்சியை தினமும் 1 கப் குடிங்க.. உடல் எடையும் குறையும், உடல் சூடும் தணியும்.. -
இன்றைய ராசிபலன் 25 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ராஜயோகம் கூடிவரப்போகுதாம் -
செவ்வாய் மேஷ ராசிக்கு செல்வதால் கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
இந்தியாவின் தேசிய காய் என்று அழைக்கப்படும் காய்கறி எது? அதற்கான காரணம் என்ன தெரியுமா? -
ஏப்ரல் இறுதியில் குரு-புதன் சேர்க்கையால் உருவாகும் அரிய ராஜயோகம்: இந்த 3 ராசிகளின் வருமானம் உயரும்!
முகம், கை, கால்களில் வளரும் முடியைப் போக்கும் ஓர் எளிய இயற்கை வழி!
இங்கு முகம், கை, கால்களில் வளரும் முடியைப் போக்கும் ஓர் எளிய இயற்கை வழி கொடுக்கப்பட்டுள்ளது.
தற்போது முகம், கை, கால்கள் மட்டுமின்றி, உடலின் இதர பகுதிகளிலும் வளரும் முடியைப் போக்குவது ஃபேஷனாகிவிட்டது. சருமத்தை மென்மையாக பட்டுப் போன்று வைத்துக் கொள்ள, பெண்கள் மட்டுமின்றி, ஆண்களும் வேக்ஸிங் செய்கிறார்கள். ஆனால் இந்த முறையால் கடுமையான வலியை அனுபவிக்கக்கூடும்.

வலி இல்லாமல், பணம் அதிகம் செலவழிக்காமல் மிகவும் எளிய முறையில் உடலில் வளரும் தேவையற்ற முடிகளைப் போக்கும் ஓர் அற்புத இயற்கை வழி குறித்து தமிழ் போல்ட் ஸ்கை கீழே கொடுத்துள்ளது.
அதைப் படித்து பின்பற்றினால், சருமத்தில் உள்ள ரோமங்கள் நீங்குவதோடு, இறந்த செல்களும் நீங்கி, சருமம் பொலிவோடும் மென்மையாகவும் இருக்கும்.

தேவையான பொருட்கள்:
கடலை மாவு - 1 டேபிள் ஸ்பூன்
சர்க்கரை பவுடர் - 2 டேபிள் ஸ்பூன்
கற்றாழை ஜெல் - 1 டேபிள் ஸ்பூன்
எலுமிச்சை சாறு - 2 டேபிள் ஸ்பூன்

செய்முறை #1
முதலில் ஒரு பௌலில் கடலை மாவு, சர்க்கரை பவுடர் மற்றும் கற்றாழை ஜெல் சேர்த்து கட்டி சேராதவாறு கலந்து கொள்ள வேண்டும்.

செய்முறை #2
பின்பு அத்துடன் 2 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாற்றினை சேர்த்து நன்கு பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.

செய்முறை #3
பிறகு தயாரித்து வைத்துள்ள கலவையை முடியுள்ள பகுதியில் தடவி, அதன் மேல் காட்டனை வைக்க வேண்டும். இப்படி ஒரு 2-3 லேயர் போட வேண்டும்.

செய்முறை #4
பின் 30 நிமிடம் கழித்து, நன்கு காய்ந்த பின் உரித்து எடுக்க வேண்டும். இப்படி செய்வதால், முடி நீங்குவதோடு, அப்பகுதியும் பளிச்சென்று இருக்கும்.



Click it and Unblock the Notifications