Latest Updates
-
Heatwave Alert: கோடையில் உடல் வறண்டு போகாம இருக்கணுமா? அப்ப இதெல்லாம் தினமும் சாப்பிடுங்க.. -
மணி பிளாண்ட் வளர்க்கும் ரகசியம் தெரியுமா? கோடையில் வீட்டை ஜிலுஜிலுவென மாற்றும் இந்த வாஸ்து டிப்ஸ்! -
பாபா வங்கா கணிப்பு படி 2125-ல் ஏலியன்களை சந்திக்கப்போகும் முதல் நாடு எது தெரியுமா? -
மே மாத சூரிய பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு தொழில் மற்றும் நிதி நிலையில் நல்ல வளர்ச்சி ஏற்படப்போகுது! -
செட்டிநாடு வெங்காய கோசு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. இட்லி, தோசைக்கு தாறுமாறா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 28 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் கதவைத் தட்டுமாம் -
May 2026 Career Horoscope: மே மாதத்தில் தொழிலில் கொடிகட்டி பறக்கப் போவது இந்த 4 ராசிக்காரங்க தான்! -
1 கப் சுண்டல் இருந்தா.. ஒருடைம் இப்படி சட்னி செய்யுங்க.. இட்லி, தோசைக்கு பிரமாதமா இருக்கும்.. -
இந்த தேதிகளில் பிறந்தவர்கள் 35 வயசுக்கு மேல் தான் வெற்றியை காண்பார்களாம்.. உங்க பிறந்த தேதி இதுல இருக்கா? -
லிவ்-இன் உறவு முறிவு கிரிமினல் குற்றமா? உச்ச நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு என்ன சொல்கிறது?
2030-க்குள் கோடீஸ்வரராகும் அதிர்ஷ்டம் உள்ள 4 ராசிக்காரங்க இவங்கதான்... உங்க ராசி இதுல இருக்கா?
ஜோதிட சாஸ்திரத்தின் படி ஒவ்வொரு ராசியில் பிறந்தவர்களிடமும் ஒரு தனித்துவம் இருக்கும். ஒவ்வொருவரிடமும் சில தனித்துவமான பண்புகளும், வாழ்க்கைக்கான அணுகுமுறை மற்றும் உலகத்தின் மீதான பார்வை இருக்கும். ஆடம்பர வாழ்க்கையோ, அடிப்படை வாழ்க்கையோ எப்படிப்பட்ட வாழ்க்கையாக இருந்தாலும் அதை வாழ்வதற்கு பணம் அவசியம்.
கோடிகளை சம்பாதிக்க வேண்டுமென்பதுதான் வாழ்க்கையின் அனைவரின் கனவாக இருக்கும். ஆனால் அந்த கனவு அனைவருக்கும் பலிக்கிறதா என்றால் நிச்சயம் இல்லை என்று கூற வேண்டும். ஒருவருக்கு வாழ்க்கையில் எப்போது அதிர்ஷ்டம் வரும் என்று யாராலும் கூற முடியாது. ஜோதிட கணிப்புகளின் படி 2030-க்குள் சில ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் வரப்போகிறதாம். இந்த பதிவில் 2030-க்குள் கோடீஸ்வரராகப் போகிற ராசிக்காரங்க யாரென்று தெரிந்து கொள்ளலாம்.

ரிஷபம்
மன உறுதிக்கு பெயர் பெற்ற ரிஷப ராசிக்காரர்கள், நம்பகமானவர்கள் மற்றும் இலக்கை நோக்கி தொடர்ந்து பயணிக்கக் கூடியவர்கள். கடின உழைப்பு மற்றும் விடாமுயற்சி கொண்ட ரிஷப ராசிக்காரர்கள், ஒரு கோடீஸ்வரராகும் வரை தொடர்ந்து தங்கள் இலக்குகளை நோக்கி ஓடிக்கொண்டே இருப்பார்கள்.
இந்த ராசிக்காரர்கள் செல்வத்தின் அதிபதியான சுக்கிரனால் ஆளப்படுகிறார்கள். ரிஷப ராசிக்காரர்கள் ஆடம்பரமாக செலவு செய்ய மட்டும் கோடீஸ்வரராக விரும்புவதில்லை, மாறாக பணத்தின் மூலம் அடையக்கூடிய ஆறுதலையும், மரியாதையும் விரும்புகிறார்கள். கிரகங்கள் அவர்களின் ஆசைக்கு ஏற்ப 2030-க்குள் அவர்கள் கோடீஸ்வரராகப் போகிறார்கள்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களும் செல்வம் மற்றும் ஆடம்பரத்தின் அதிபதியான சுக்கிரனால் ஆளப்படுகிறார்கள். அவர்கள் காந்தம் போல பணத்தை ஈர்க்க விரும்புகிறார்கள். இந்த ராசிக்காரர்கள் நேசமானவர்கள், வெளிப்படையாக தொடர்பு கொள்ளக்கூடியவர்கள் மற்றும் நட்பானவர்கள். சரியான தொடர்புகளை உருவாக்குவதன் மூலம் அவர்கள் தங்கள் இலக்குகளை அடைய வாய்ப்புள்ளது.
துலாம் ராசிக்காரர்களின் வசீகரமான ஆளுமை மற்றவர்களை ஈர்க்கிறது, இதனால் வேலை தொடர்பான விஷயங்களை அவர்கள் எளிதாகக் கையாள முடியும். துலாம் ராசிக்காரர்கள் ஆடம்பரத்தையும், மதிப்புமிக்க தோற்றத்தையும் விரும்புகிறார்கள், மேலும் அதைப் பெற கடினமாக உழைக்கத் தயாராக இருக்கிறார்கள். அவர்களின் முயற்சிகள் அவர்களை 2030-க்குள் கோடீஸ்வரராக மாற்றப்போகிறது.
தனுசு
தனுசு ராசிக்காரர்கள் கடின உழைப்பாளிகளாக இல்லாவிட்டாலும், இந்தப் பட்டியலில் இடம் பெறுகிறார்கள். அவர்கள் நிதி குறித்து அதிகம் கவலைப்படுவதில்லை, ஆனால் குருபகவானின் செல்வாக்கால், அவர்கள் எதிர்காலத்தில் கோடீஸ்வரராக வாய்ப்புள்ளது. அவர்களுக்கு லாட்டரி மூலமோ, பெரிய பரம்பரைச் சொத்தைப் பெற அல்லது எதிர்பாராத வழிகளில் திடீரென கோடீஸ்வரராக அதிக வாய்ப்பு உள்ளது.
தனுசு ராசிக்காரர்கள் அதிக சம்பளம் வாங்கும் வேலை அல்லது வியாபாரம் மூலம் கோடீஸ்வரராக வாய்ப்புள்ளது. அவர்கள் வெளிநாடு பயணம் செய்வது, புதிய இடங்களை ஆராய்வது மற்றும் புதிய நபர்களைச் சந்திப்பதை விரும்புகிறார்கள், எனவே தனுசு ராசிக்காரர்கள் 2030-க்குள் அதிர்ஷ்டத்தின் மூலம் செல்வத்தை அடைகிறார்கள்.
மகரம்
இந்த பட்டியலில் கடின உழைப்பாளியான மற்றும் லட்சிய வெறி கொண்ட மகர ராசிக்காரர்கள் கடைசி இடத்தில் உள்ளார்கள். அவர்கள் தொழில் வெற்றியை அடையும்போது மகிழ்ச்சியாக உணர்கிறார்கள், மேலும் அவர்கள் விரும்புவதைப் பெறும் வரை ஓயமாட்டார்கள்.
மகர ராசிக்காரர்கள் இரண்டு விஷயங்களை மிகவும் விரும்புகிறீர்கள். அவர்கள் பணம் வழங்கும் ஆறுதல் மற்றும் பாதுகாப்பைத் தேடுகிறார்கள், மேலும் மற்றவர்கள் தங்களைப் பாராட்ட வேண்டும் என்று விரும்புகிறார்கள். இந்த இரண்டு விஷயங்களுக்குமே பணம் அவசியம் என்பதை அவர்கள் அறிவார்கள். எனவே 2030-க்குள் அவர்கள் கோடீஸ்வரராக முயற்சித்து அதை சாதிப்பார்கள்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
