Latest Updates
-
இன்றைய ராசிபலன் 13 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க சொந்த காசுல சூனியம் வைச்சுக்கப் போறாங்களாம்...! -
செவ்வாய்-சந்திர சேர்க்கையால் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: மார்ச் 16 முதல் இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டும்.. -
18 மாதங்களுக்கு பின் உருவாகும் மங்களாதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிகளின் நீண்டகால ஆசைகள் நிறைவேறப்போகுதாம்...! -
1500 கிலோ தங்கத்தால் கட்டப்பட்ட தங்க கோயில் தமிழ்நாட்டில் எங்கு உள்ளது தெரியுமா? நீங்க இங்க போயிருக்கீங்களா? -
வெயிலால் உங்க முகம் கருமையாகாமல் இருக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க... -
1 முறுக்கு பாக்கெட் இருந்தா இந்த மாதிரி காரைக்குடி ஸ்டைலில் குழம்பு வையுங்க... வித்தியாசமா சூப்பரா இருக்கும்.. -
வெயில் காலத்தில் மாலை வேளையில் இத செஞ்சு சாப்பிடுங்க.. உடம்பு குளுகுளு-ன்னு இருக்கும்.. -
அழகான பெண்கள் இந்த 4 ராசி ஆண்களை தேடிப்போய் காதலிப்பார்களாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
மார்ச் இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டப்போகுது... -
கேஸ் அதிகம் தேவைப்படாத அட்டகாசமான சாம்பார் சாதம் ரெசிபி..இந்த மாறி செஞ்சு பாருங்க... டேஸ்ட் செமயா இருக்கும்...
இந்த 4 ராசிக்காரங்க எப்போதும் சண்டையை உருவாக்கும் கலகக்காரர்களாக இருப்பார்களாம்... உங்க ராசி இதுல இருக்கா?
ஜோதிட சாஸ்திரத்தின் படி ஒவ்வொரு ராசியில் பிறந்தவர்களும் ஒரு விதத்தில் தனித்துவமானவர்கள். ஒருவரின் ஆளுமையை வடிவமைப்பதில் அவர்களின் பிறந்த ராசி மிகவும் முக்கியமானதாகும். ஆளுமை என்று வரும்போது அவர்கள் மோதல்கள் மற்றும் குழப்பங்களை எப்படி அணுகுகிறார்கள் என்பது மிகவும் முக்கியமானதாகும். ஏனெனில் இதுதான் ஒருவர் உறவுகளில் எப்படிப்பட்டவர்களாக இருப்பார்கள் என்பதை நிர்ணயிக்கிறது.
ஜோதிட சாஸ்திரத்தின் படி சில ராசிகளில் பிறந்தவர்கள் எப்போதும் சண்டையைத் தொடங்குபவர்களாகவும், குழப்பங்களை உருவாக்குபவர்களாகவும் இருப்பார்கள். இதை அவர்கள் சில சமயங்களில் தெரிந்தும், சில சமயங்களில் தெரியாமலும் செய்யலாம். இந்த பதிவில் எந்தெந்த ராசிக்காரர்கள் எப்போதும் சண்டையின் ஆரம்பப் புள்ளியாக இருப்பார்கள் என்று தெரிந்து கொள்ளலாம்.

மேஷம்
எரிமலை போல வெடிக்கும் மேஷ ராசிக்காரர்கள் எப்போதும் சண்டை அல்லது குழப்பங்களை உருவாக்குபவர்களாக இருப்பார்கள். போர் மற்றும் தைரியத்தின் கிரகமான செவ்வாய் கிரகத்தால் இந்த ராசிக்காரர்கள் ஆளப்படுவதால், அவர்கள் கோபக்காரர்களாகவும், பொறுமையற்றவர்களாகவும் இருப்பார்கள் மேலும் எளிதில் உணர்ச்சிவசப்படுபவர்களாகவும் இருப்பார்கள். இதனால் அவர்கள் ஆபத்தானவர்களாக இருப்பார்கள்.
அவர்களால் அமைதியான சூழலில் நீண்ட நேரம் இருக்க முடியாது, எனவே அவர்கள் குழப்பங்களை உருவாக்குவார்கள். அவர்களின் வலுவான ஆளுமை மிக விரைவில் மோதல்களை உருவாக்கும், இதில் மிகவும் மோசமானது என்னவெனில் அவர்களால் சண்டைகளை தொடங்க மட்டுமே முடியுமே தவிர நிறுத்த முடியாது. தங்களை சரியாகக் காட்ட வேண்டும் என்ற அவர்களின் ஆர்வம் அவர்களை நச்சுத்தன்மை வாய்ந்தவர்களாக மாற்றுகிறது.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்கள் தகவல் தொடர்பு கிரகமான புதனால் ஆளப்படுகிறார்கள். அவர்கள் பேசுவதையும் கருத்துக்களைப் பரிமாறிக் கொள்வதையும் விரும்புகிறார்கள், ஆனால் பெரும்பாலும் அவர்களின் செய்திகள் தவறாகப் புரிந்து கொள்ளப்படுகின்றன. அவர்கள் பேசுவதற்கு முன் சிந்திக்க மாட்டார்கள், அது மற்றவர்களால் தவறாகப் புரிந்து கொள்ளப்படும், மேலும் வாக்குவாதங்கள் அல்லது சண்டைகளைத் தூண்டும்.
மற்ற ராசிக்காரர்களை விட இவர்கள் மிகவும் வாதாடுபவர்கள் என்பதால், அவர்களின் கேலி செய்யும் தன்மை சில நேரங்களில் மற்றவர்களை புண்படுத்தும், இதனால் அவர்கள் சிக்கலில் மாட்டிக் கொள்கிறார்கள். அவர்கள் சிந்தனையின்றி பேசும் வார்த்தைகள் அவர்களுக்கும், மற்றவர்களுக்கும் சிக்கல்களையே ஏற்படுத்தும்.
சிம்மம்
சூரியனால் ஆளப்படும் சிம்ம ராசிக்காரர்கள் தங்கள் பெருமைக்கும், ஆதிக்கம் செலுத்தும் தன்மைக்கும் மிகவும் பிரபலமானவர்கள். அவர்கள் எப்போதும் பிரபலமாக இருக்க விரும்புகிறார்கள், ஆனால் சில சமயங்களில் அவர்கள் கவனத்தை ஈர்க்கும் குணத்தால் அவர்கள் பல்வேறு பிரச்சினைகளை உருவாக்குவார்கள். அவர்களுக்குரிய மரியாதையும், கவனமும் கிடைக்காவிட்டால் அவர்கள் எளிதில் கோபப்படுவார்கள் மற்றும் சூழலை ஆக்ரோஷமானதாக மாற்றுவார்கள்.
இவர்கள் சண்டையிடும் ராசிக்காரர்களில் ஒருவராக இருப்பதால், அவர்களை யாராவது குறை கூறினாலோ, அவர்களின் தவறை சுட்டிக் கட்டினாலோ அல்லது அவர்களுக்கு மரியாதை கொடுக்கவில்லை என்றாலோ போரை உருவாக்குவார்கள். அடிப்படையில் அவர்கள் நல்லவர்களாக இருந்தாலும், அவர்களின் ஈகோ அவர்களை கலகக்காரர்களாக மாற்றுகிறது.
விருச்சிகம்
போரின் கிரகமான செவ்வாயால் ஆளப்படும் விருச்சிக ராசிக்காரர்கள் தீவிரமானவர்களாகவும், உணர்ச்சிவசப்பட்டவர்களாகவும் இருப்பார்கள். அவர்கள் அனைத்து விஷயங்களுக்கும் ஓவராக உணர்ச்சிவசப்படுவார்கள், மேலும் அவர்களின் உணர்ச்சிகள் சில நேரங்களில் பெரிய வாக்குவாதங்கள் அல்லது சண்டைக்கு வழிவகுக்கும். அவர்கள் அனைத்து விஷயங்களுக்கும் வாதாடுபவர்கள் மற்றும் எப்போதும் தங்கள் நலனில் அக்கறை செலுத்துபவர்கள்.
அவர்கள் ஒருபோதும் சண்டையிட விரும்ப மாட்டார்கள், ஆனால் அவர்களின் உணர்ச்சிகள் எப்போதும் மோதல்களைத் தூண்டுவதாக இருக்கும், இது சூடான வாக்குவாதங்களுக்கு வழிவகுக்கிறது. அர்த்தமற்ற சண்டைகளைத் தவிர்க்க, கோபத்தைக் கட்டுப்படுத்துவதில் அவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும், இல்லையெனில் அவர்கள் இருக்குமிடம் கலவரமாக இருக்கும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications












