Latest Updates
-
கோடையில் இந்த கஞ்சியை தினமும் 1 கப் குடிங்க.. உடல் எடையும் குறையும், உடல் சூடும் தணியும்.. -
இன்றைய ராசிபலன் 25 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ராஜயோகம் கூடிவரப்போகுதாம் -
செவ்வாய் மேஷ ராசிக்கு செல்வதால் கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
இந்தியாவின் தேசிய காய் என்று அழைக்கப்படும் காய்கறி எது? அதற்கான காரணம் என்ன தெரியுமா? -
ஏப்ரல் இறுதியில் குரு-புதன் சேர்க்கையால் உருவாகும் அரிய ராஜயோகம்: இந்த 3 ராசிகளின் வருமானம் உயரும்! -
வெயில் காலத்தில் திருமணமா? இந்த 5 விஷயங்களைச் செய்யாவிட்டால் விசேஷமே வீணாகிவிடும்! -
மட்டன் சுவையை மிஞ்சும் சோயா உருளைக்கிழங்கு குருமா ரெசிபி - செஞ்சு பாருங்க, செமையா இருக்கும் -
பொருளாதாரச் சுரண்டல் இனி குடும்ப வன்முறை! மனைவியிடம் கையேந்த வைக்கும் கணவர்களுக்கு நீதிமன்றம் கொடுத்த செக்! -
செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டகாத்து வீசும்! உங்க ராசியும் இதுல இருக்கா? -
ஏசி ஓடினாலும் கரண்ட் பில் கம்மியா வரணுமா? ஏசியை இந்த மாதிரி யூஸ் பண்ணுங்க
இந்த 4 ராசிக்காரங்க எப்போதும் சண்டையை உருவாக்கும் கலகக்காரர்களாக இருப்பார்களாம்... உங்க ராசி இதுல இருக்கா?
ஜோதிட சாஸ்திரத்தின் படி ஒவ்வொரு ராசியில் பிறந்தவர்களும் ஒரு விதத்தில் தனித்துவமானவர்கள். ஒருவரின் ஆளுமையை வடிவமைப்பதில் அவர்களின் பிறந்த ராசி மிகவும் முக்கியமானதாகும். ஆளுமை என்று வரும்போது அவர்கள் மோதல்கள் மற்றும் குழப்பங்களை எப்படி அணுகுகிறார்கள் என்பது மிகவும் முக்கியமானதாகும். ஏனெனில் இதுதான் ஒருவர் உறவுகளில் எப்படிப்பட்டவர்களாக இருப்பார்கள் என்பதை நிர்ணயிக்கிறது.
ஜோதிட சாஸ்திரத்தின் படி சில ராசிகளில் பிறந்தவர்கள் எப்போதும் சண்டையைத் தொடங்குபவர்களாகவும், குழப்பங்களை உருவாக்குபவர்களாகவும் இருப்பார்கள். இதை அவர்கள் சில சமயங்களில் தெரிந்தும், சில சமயங்களில் தெரியாமலும் செய்யலாம். இந்த பதிவில் எந்தெந்த ராசிக்காரர்கள் எப்போதும் சண்டையின் ஆரம்பப் புள்ளியாக இருப்பார்கள் என்று தெரிந்து கொள்ளலாம்.

மேஷம்
எரிமலை போல வெடிக்கும் மேஷ ராசிக்காரர்கள் எப்போதும் சண்டை அல்லது குழப்பங்களை உருவாக்குபவர்களாக இருப்பார்கள். போர் மற்றும் தைரியத்தின் கிரகமான செவ்வாய் கிரகத்தால் இந்த ராசிக்காரர்கள் ஆளப்படுவதால், அவர்கள் கோபக்காரர்களாகவும், பொறுமையற்றவர்களாகவும் இருப்பார்கள் மேலும் எளிதில் உணர்ச்சிவசப்படுபவர்களாகவும் இருப்பார்கள். இதனால் அவர்கள் ஆபத்தானவர்களாக இருப்பார்கள்.
அவர்களால் அமைதியான சூழலில் நீண்ட நேரம் இருக்க முடியாது, எனவே அவர்கள் குழப்பங்களை உருவாக்குவார்கள். அவர்களின் வலுவான ஆளுமை மிக விரைவில் மோதல்களை உருவாக்கும், இதில் மிகவும் மோசமானது என்னவெனில் அவர்களால் சண்டைகளை தொடங்க மட்டுமே முடியுமே தவிர நிறுத்த முடியாது. தங்களை சரியாகக் காட்ட வேண்டும் என்ற அவர்களின் ஆர்வம் அவர்களை நச்சுத்தன்மை வாய்ந்தவர்களாக மாற்றுகிறது.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்கள் தகவல் தொடர்பு கிரகமான புதனால் ஆளப்படுகிறார்கள். அவர்கள் பேசுவதையும் கருத்துக்களைப் பரிமாறிக் கொள்வதையும் விரும்புகிறார்கள், ஆனால் பெரும்பாலும் அவர்களின் செய்திகள் தவறாகப் புரிந்து கொள்ளப்படுகின்றன. அவர்கள் பேசுவதற்கு முன் சிந்திக்க மாட்டார்கள், அது மற்றவர்களால் தவறாகப் புரிந்து கொள்ளப்படும், மேலும் வாக்குவாதங்கள் அல்லது சண்டைகளைத் தூண்டும்.
மற்ற ராசிக்காரர்களை விட இவர்கள் மிகவும் வாதாடுபவர்கள் என்பதால், அவர்களின் கேலி செய்யும் தன்மை சில நேரங்களில் மற்றவர்களை புண்படுத்தும், இதனால் அவர்கள் சிக்கலில் மாட்டிக் கொள்கிறார்கள். அவர்கள் சிந்தனையின்றி பேசும் வார்த்தைகள் அவர்களுக்கும், மற்றவர்களுக்கும் சிக்கல்களையே ஏற்படுத்தும்.
சிம்மம்
சூரியனால் ஆளப்படும் சிம்ம ராசிக்காரர்கள் தங்கள் பெருமைக்கும், ஆதிக்கம் செலுத்தும் தன்மைக்கும் மிகவும் பிரபலமானவர்கள். அவர்கள் எப்போதும் பிரபலமாக இருக்க விரும்புகிறார்கள், ஆனால் சில சமயங்களில் அவர்கள் கவனத்தை ஈர்க்கும் குணத்தால் அவர்கள் பல்வேறு பிரச்சினைகளை உருவாக்குவார்கள். அவர்களுக்குரிய மரியாதையும், கவனமும் கிடைக்காவிட்டால் அவர்கள் எளிதில் கோபப்படுவார்கள் மற்றும் சூழலை ஆக்ரோஷமானதாக மாற்றுவார்கள்.
இவர்கள் சண்டையிடும் ராசிக்காரர்களில் ஒருவராக இருப்பதால், அவர்களை யாராவது குறை கூறினாலோ, அவர்களின் தவறை சுட்டிக் கட்டினாலோ அல்லது அவர்களுக்கு மரியாதை கொடுக்கவில்லை என்றாலோ போரை உருவாக்குவார்கள். அடிப்படையில் அவர்கள் நல்லவர்களாக இருந்தாலும், அவர்களின் ஈகோ அவர்களை கலகக்காரர்களாக மாற்றுகிறது.
விருச்சிகம்
போரின் கிரகமான செவ்வாயால் ஆளப்படும் விருச்சிக ராசிக்காரர்கள் தீவிரமானவர்களாகவும், உணர்ச்சிவசப்பட்டவர்களாகவும் இருப்பார்கள். அவர்கள் அனைத்து விஷயங்களுக்கும் ஓவராக உணர்ச்சிவசப்படுவார்கள், மேலும் அவர்களின் உணர்ச்சிகள் சில நேரங்களில் பெரிய வாக்குவாதங்கள் அல்லது சண்டைக்கு வழிவகுக்கும். அவர்கள் அனைத்து விஷயங்களுக்கும் வாதாடுபவர்கள் மற்றும் எப்போதும் தங்கள் நலனில் அக்கறை செலுத்துபவர்கள்.
அவர்கள் ஒருபோதும் சண்டையிட விரும்ப மாட்டார்கள், ஆனால் அவர்களின் உணர்ச்சிகள் எப்போதும் மோதல்களைத் தூண்டுவதாக இருக்கும், இது சூடான வாக்குவாதங்களுக்கு வழிவகுக்கிறது. அர்த்தமற்ற சண்டைகளைத் தவிர்க்க, கோபத்தைக் கட்டுப்படுத்துவதில் அவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும், இல்லையெனில் அவர்கள் இருக்குமிடம் கலவரமாக இருக்கும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
