17 ஆண்டுகளுக்கு பின் செவ்வாயால் உருவாகியுள்ள அரிய யோகம்: இன்று முதல் இந்த 3 ராசிகளின் பணப்பிரச்சனை தீரும்..

Mars Pluto make Dwi Dwadash Yog 2025: ஜோதிடத்தில் கிரகங்களின் தளபதியாக கருதப்படுபவர் செவ்வாய். இந்த செவ்வாய் மாதங்களுக்கு ஒருமுறை ராசியை மாற்றுவார். அவ்வாறு ராசியை மாற்றும் போது அதன் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும். தற்போது செவ்வாய் தனுசு ராசியில் உள்ளார். இந்த ராசியில் இருக்கும் போது செவ்வாய் மற்ற கிரகங்களுடன் ஒன்றிணைந்து சுப அல்லது அசுப யோகங்களை உருவாக்குவார்.

இந்நிலையில் செவ்வாய் ப்ளூட்டோவுடன் சேர்ந்து ஒரு அரிய யோகமான த்வித் துவாதஷ் உருவாக்கியுள்ளார். இந்த யோகமானது டிசம்பர் 18 ஆம் தேதி, அதாவது இன்று உருவாகியுள்ளது. முக்கியமாக இந்த யோகம் சுமார் 17 ஆண்டுகளுக்கு பின் உருவாகியுள்ளது. இந்த யோகத்தின் போது செவ்வாயும், ப்ளூட்டோவும் ஒன்றுக்கொன்று 30 டிகிரி கோணத்தில் இருக்கும்.

Mars Pluto make Dwi Dwadash Yog 2025 These Zodiac Signs Get More Profit

இந்த யோகத்தினால் சில ராசிக்காரர்களுக்கு சிறப்பாகவும், சிலருக்கு மோசமாகவும் இருக்கும். இப்போது செவ்வாய் ப்ளூட்டோவால் உருவாகியுள்ள த்வித் துவாதஷ் யோகத்தினால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.

துலாம்

த்வித் துவாதஷ் யோகத்தினால் துலாம் ராசிக்காரர்களின் தன்னம்பிக்கையும், தைரியமும் அதிகரிக்கும். முன்னேற்றத்திற்கான புதிய வழிகள் திறக்கப்படும். பணியிடத்தில் புதிய பொறுப்புக்கள் வழங்கப்படலாம். வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்ளும் வாய்ப்புக்களும் கிடைக்கும். நிதி நிலைமை வலுபெறும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். வாழ்க்கையில் மகிழ்ச்சியும், அமைதியும் அதிகரிக்கும். குடும்பத்தினருடன் நல்ல நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும். மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். வாழ்க்கைத் துணையுடன் நல்ல நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

விருச்சிகம்

த்வித் துவாதஷ் யோகத்தினால் விருச்சிக ராசிக்காரர்களின் நீண்ட கால பிரச்சனைகள் முடிவுக்கு வரும். வாழ்க்கையில் அதிர்ஷ்ட கதவு திறக்கும். நிறைய பணத்தை சம்பாதிக்க முடியும். வேலை தொடர்பான பயணங்களை மேற்கொள்ள நேரிடும். இந்த பயணங்களால் எதிர்காலத்தில் நல்ல பலன் கிடைக்கும். பங்குச் சந்தை, வர்த்தகம் மூலம் நல்ல லாபத்தைப் பெறக்கூடும். நிதி நிலைமை சிறப்பாக இருக்கும். புதிய வருமான வழிகள் திறக்கப்படும். பேச்சால் பல வேலைகளை சிறப்பாக முடிப்பீர்கள்.

மகரம்

த்வித் துவாதஷ் யோகத்தினால் மகர ராசிக்காரர்களுக்கு தொழில் ரீதியாக இடமாற்றம் ஏற்படும் வாய்ப்புள்ளது. வேலையில் முன்னேற்றத்திற்கான பல வாய்ப்புக்கள் கிடைக்கும். வியாபாரிகளுக்கு இரட்டிப்பு லாபம் கிடைக்கும். வேலையை திட்டமிட்டு செய்தால், வெற்றி நிச்சயம் கிடைக்கும். நிதி நிலைமை வலுவடையும். குடும்பத்தினருடன் நல்ல நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும். மொத்தத்தில் செவ்வாயின் ஆசியால் எடுக்கும் ஒவ்வொரு முயற்சிகளுக்கும் ஏற்ற நல்ல பலன் கிடைக்கும்.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

Story first published: Thursday, December 18, 2025, 16:20 [IST]
Desktop Bottom Promotion