Latest Updates
-
தக்காளியும், கொத்தமல்லியும் இருந்தா.. ஒருடைம் இந்த சைடு டிஷ் செய்யுங்க.. இட்லி, தோசைக்கு அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 27 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மோசமான நாள் காத்திருக்காம் -
செவ்வாய் சொந்த ராசிக்கு செல்வதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
அட்டகாசமான ஆந்திரா கத்திரிக்காய் தக்காளி சட்னி ரெசிபி - செஞ்சு பாருங்க, சுருக்குனு சூப்பரா இருக்கும் -
கோடைக்கால திருமணமா? வெயிலின் தாக்கத்தில் இருந்து விருந்தினர்களைக் காக்க இந்த 5 விஷயங்களைச் செய்ய மறக்காதீங்க! -
ஆண்களுக்கு இளம் வயதிலேயே வழுக்கை விழ காரணமாக இருக்கும் முக்கிய உணவுகள் - பார்த்து சாப்பிடுங்க -
திருமண உறவில் பாலியல் வன்கொடுமை: சட்டத்தின் பிடியில் சிக்கியுள்ள பெண்கள் தெரிந்துகொள்ள வேண்டிய அதிர்ச்சி உண்மைகள்! -
இந்த தேதியில் பிறந்த பெண்கள் அவங்க கணவரை கோடீஸ்வரராக்கும் அதிர்ஷ்டத்துடன் பிறந்தவர்களாம் -
முட்டையை இந்த மாதிரி பட்டாணியுடன் சேர்த்து குருமா செஞ்சு பாருங்க - டேஸ்ட் தாறுமாறா இருக்கும் -
வாஸ்து செடிகள்: 42°C வெயிலிலும் வீட்டை ஜில்லுனு வச்சுக்கணுமா? இந்த செடிகள் இருந்தா போதும்!
செவ்வாய்-புதன் உருவாக்கும் சக்திவாய்ந்த திரியேகாதச யோகம்: இந்த 3 ராசிக்காரங்க வெற்றி குதிரையா மாறப்போறாங்க..
Mars Mercury Make Triekadash Yog On 15 August 2025: வேத ஜோதிடத்தில் உள்ள கிரகங்கள் ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ராசியை மாற்றி மனித வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும். அதோடு கிரகங்களினால் உருவாகும் யோகங்களின் தாக்கமும் மேஷம் முதல் மீனம் வரையிலான அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும்.
அந்த வகையில் கிரகங்களின் தளபதியாக கருதப்படும் செவ்வாய், தைரியம், வீரம், வலிமை, துணிச்சல் ஆகியவற்றின் காரணியாவார். இவர் ஒரு ராசியில் 45 நாட்கள் வரை இருப்பார். தற்போது செவ்வாய் கன்னி ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் கிரகங்களின் இளவரசனாகவும், புத்திகாரகனாகவும் கருதப்படும் புதனுடன் சேர்ந்து திரியேகாதச யோகத்தை உருவாக்கவுள்ளார்.

இது ஒரு சக்தி வாய்ந்த யோகமாகும். இந்த யோகமானது ஆகஸ்ட் 15 ஆம் தேதி உருவாகிறது. இந்நாளில் செவ்வாயும் புதனும் ஒருவருக்கொருவர் 60 டிகிரியில் இருப்பார்கள். இந்த யோகத்தின் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும்.
இந்த யோகத்தினால் சில ராசிக்காரர்கள் தொழில் மற்றும் நிதி ரீதியாக நல்ல நன்மைகளைப் பெறவுள்ளனர். குடும்பத்தினருடன் நல்ல நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும். இப்போது புதன் செவ்வாயால் உருவாகும் திரியேகாதச யோகத்தால் நற்பலனைப் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு புதன் செவ்வாயால் உருவாகும் திரியேகாதச யோகத்தால் ஒவ்வொரு துறையிலும் நல்ல வெற்றியைப் பெறக்கூடும். நல்ல நிதி நன்மைகள் கிடைக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். தொழிலதிபர்கள் நல்ல லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்களைப் பெறுவார்கள். வணிகர்களுக்கு தங்கள் வணிகத்தை விரிவாக்கம் செய்யும் வாய்ப்புக்கள் கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. இந்த யோக காலத்தில் உங்களின் எதிர்காலம் குறித்த முக்கிய முடிவை எடுக்கலாம். வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு புதன் செவ்வாயால் உருவாகும் திரியேகாதச யோகத்தால் அதிர்ஷ்டத்தின் ஆதரவு கிடைக்கும். நீதிமன்ற வழக்குகளில் நல்ல வெற்றி கிடைக்கும். சட்ட பிரச்சனைகள் முடிவுக்கு வரும். மாணவர்களுக்கு இக்காலம் சாதகமாக இருக்கும். எந்த ஒரு விஷயத்திற்கும் திறம்பட முடிவெடுப்பீர்கள். காதல் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். வாழ்க்கைத் துணையுடன் நல்ல நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும். வணிகர்கள் கடுமையான போட்டியை சந்தித்தாலும், நல்ல வெற்றியைப் பெறுவீர்கள். ஒவ்வொரு வேலையிலும் வெற்றி கிடைக்கும். முக்கியமாக இந்த யோகத்தால் மன நிம்மதி கிடைக்கும்.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு புதன் செவ்வாயால் உருவாகும் திரியேகாதச யோகத்தால் பண வரவு அதிகரிக்கும். எதிர்பாராத வழிகளில் இருந்து பணம் தேடி வரும். ஒவ்வொரு வேலையிலும் நல்ல வெற்றி கிடைக்கும். நீண்ட காலமாக நிலுவையில் இருந்த வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். குழந்தைகளிடம் இருந்து நல்ல செய்திகளைப் பெறுவீர்கள். பணியிடத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். அலுவலகத்தில் நல்ல செய்திகளைப் பெறுவீர்கள். வாழ்க்கையில் மகிழ்ச்சி பெருகும். இருப்பினும் அஜாக்கிரதையாக இருப்பதைத் தவிர்க்க வேண்டும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications