Latest Updates
-
12 மாநிலங்கள் வழியாக செல்லும் இந்தியாவின் உயிர்நாடி என்று அழைக்கப்படும் நெடுஞ்சாலை எது தெரியுமா? -
செவ்வாய்-ராகு உருவாக்கும் நவபஞ்சம யோகத்தால் செப்டம்பர் மாதம் வரை கொடிகட்டி பறக்கப்போகும் 3 ராசிகள் -
ஆடி கிருத்திகை ஸ்பெஷல் கோதுமை நெய் அப்பம் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - டேஸ்ட் பிரமாதமா இருக்கும் -
இன்றைய ராசிபலன் 06 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க குடும்பத்துல பெரிய பிரச்சினை வரப்போகுதாம் -
ஆகஸ்ட் 13-ல் உருவாகும் லாப திருஷ்டி யோகத்தால் இந்த 3 ராசிக்காரர்கள் ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப் போறாங்களாம் -
ஆமை வடை ரெசிபி - இந்த மாதிரி வடை சுட்டு பாருங்க - மொறுமொறுனு சூப்பராக இருக்கும் -
இந்தியாவில் இயற்கையாக வைரம் கிடைக்கும் ஒரே மாநிலம் எது தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
திருநெல்வேலி ஸ்டைல் அரைச்சுவிட்ட சாம்பார் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
அடுத்தவர் மனைவியை திருடுவது இந்த நாட்டில் வேடிக்கையான விளையாட்டாம் - ஆனா இதுல ஒரு விவகாரமான கண்டிஷன் இருக்கு -
சில்லி கார்லிக் ப்ரைடு ரைஸ் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும்
செவ்வாயால் உருவாகும் குல்தீபக் ராஜயோகம்: இன்று முதல் இந்த 3 ராசிக்கு பேரதிர்ஷ்டமா இருக்கும்...
Mars Make Kuldeepak Rajyog On September 2025: ஜோதிடத்தின் படி நவகிரகங்கள் ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ராசியை மாற்றுவதோடு, அவ்வப்போது சுப அல்லது அசுப யோகங்களை உருவாக்கி மனித வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் கிரகங்களின் தளபதியாக கருதப்படுபவர் செவ்வாய்.
இந்த செவ்வாய் தைரியம், வீரம், வலிமை, துணிச்சல் ஆகியவற்றின் காரணியாவார் மற்றும் இவர் ஒரு ராசியில் 45 நாட்கள் வரை இருப்பார். இப்படிப்பட்ட செவ்வாய் தற்போது துலாம் ராசியில் பயணித்து வருகிறார். அதுவும் இதுவரை பலவீனமாக இருந்தார். ஆனால் அக்டோபர் 28 ஆம் தேதி, அதாவது இன்று செவ்வாய் பலம் பெறுகிறார்.

அதோடு இந்த செவ்வாய் குல்தீபக் ராஜயோகத்தையும் உருவாக்குகிறார். இந்த ராஜயோகமானது செவ்வாய் 10 ஆவது வீட்டில் அல்லது அதன் சொந்த ராசியில் உச்சத்தில் இருக்கும் போது உருவாகும். தற்போது செவ்வாய் துலாம் ராசியிலும், அதன் உச்ச ராசியாக கருதப்படும் மகர ராசியின் 10 ஆவது வீட்டிலும் உள்ளார்.
ஆகவே இதன் காரணமாக உருவாகியுள்ள குல்தீபக் ராஜயோகத்தால் சில ராசிக்காரர்கள் அனைத்து துறைகளிலும் நல்ல வெற்றியை பெறுவதோடு, அதிர்ஷ்டத்தின் ஆதரவைப் பெறவுள்ளனர். இப்போது செவ்வாயால் உருவாகியுள்ள குல்தீபக் ராஜயோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு குல்தீபக் ராஜயோகத்தால் தொழிலில் நீண்ட காலமாக இருந்த பிரச்சனைகள் தீரும். வேலைகளில் இருந்த தடைகள் நீங்கும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. சமூகத்தில் உங்களின் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். நிதி நிலையில் கணிசமான உயர்வைக் காணக்கூடும். மேலும் நிறைய பணத்தை சேமிக்க முடியும். வணிகர்களுக்கு எதிர்பாராத அளவில் நல்ல லாபம் கிடைக்கும்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு செவ்வாயால் உருவாகும் குல்தீபக் ராஜயோகத்தால் தொழில் ரீதியாக சிறப்பாக இருக்கும். வேலையில் இருந்த தடைகள் நீங்கும். பணிபுரிபவர்கள் தங்கள் வேலையில் சந்திக்கும் பிரச்சனைகளுக்கு தீர்வு காண முடியும். இதுவரை சந்தித்து வந்த மன அழுத்தம் நீங்கும். முன்னேற்றத்திற்கான பல வாய்ப்புக்கள் கிடைக்கும். வணிகர்களுக்கு இக்காலம் பயனுள்ளதாக இருக்கும். நிதி நிலைமை சிறப்பாக இருக்கும். அதே வேளையில் செலவுகளும் கணிசமாக அதிகரிக்கும். வாழ்க்கைத் துணையுடன் நல்ல நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும்.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு செவ்வாயால் உருவாகும் குல்தீபக் ராஜயோகத்தால் இன்று முதல் அதிர்ஷ்டமாக இருக்கப் போகிறது. முக்கியமாக வேலையில் இதன் தாக்கம் சிறப்பாக இருக்கும். பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் சிறப்பான செயல்திறனால் உயர் அதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள். தனித்துவமான அடையாளத்தை உருவாக்குவீர்கள்.எதிரிகளுக்கு கடுமையான போட்டியைக் கொடுப்பீர்கள். கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். நிதி நிலை சிறப்பாக இருக்கும். நிறைய பணத்தை சேமிக்க முடியும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். மிகவும் சுறுசுறுப்பாக இருப்பீர்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications