Latest Updates
-
30 ஆண்டுக்கு பின் சனியும்-செவ்வாயும் மீனத்தில் இணைவதால் இந்த 3 ராசிக்காரங்க டபுள் ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம் -
No Oil Noi Boil Recipe: அடுப்பே தேவைப்படாத ஆரோக்கியமான, சுவையான இட்லி மற்றும் சட்னி ரெசிபி...ட்ரை பண்ணுங்க...! -
1 வருடத்துக்கு பின் மேஷம் செல்லும் சுக்கிரன்: இந்த 3 ராசிக்காரங்க ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப் போறாங்களாம்...! -
336 ஆண்டுகளுக்கு முன் சத்ரபதி சாம்பாஜி மகாராஜாக்கு 11 மார்ச் 'இதே' நாளில் என்ன நடந்தது தெரியுமா? -
4 பிரெட், 1 கப் தயிர் இருந்தா 10 நிமிஷத்துல இந்த மாதிரி வடை சுடுங்க... மொறுமொறுனு டேஸ்ட் பிரமாதமா இருக்கும்... -
இந்த 4 ராசி ஆண்கள் ரொம்ப பொஸசிவான கணவர்களாக இருப்பார்களாம்...இவங்க மனைவிகள்தான் பாவம்..உங்க ராசி இதுல இருக்கா? -
LPG Gas: தலைவிரித்தாடும் சிலிண்டர் தட்டுப்பாடு... சிலிண்டர் சீக்கிரம் தீராம இருக்க இப்படி சமையல் பண்ணுங்க...! -
கோதுமை ரவா தோசையும்.. புதினா சட்னியும்..- 10 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 11 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மனஉளைச்சலான நாளாக இருக்குமாம்...! -
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது...
18 ஆண்டுக்கு பின் சிம்ம ராசியில் இணையும் கேது-சுக்கிரன்:இந்த 4 ராசிக்காரங்க டபுள் ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம்
ஜோதிடத்தில் கிரகங்கள் தொடர்ந்து நகர்ந்து கொண்டே இருக்கின்றன. கிரகங்கள் இப்படி தொடர்ந்து நகரும் போது அது சில ராசிக்காரர்களுக்கு நேர்மறையான பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு எதிர்மறையான பலன்களையும் அளிக்கப்போகிறது. சில சமயங்களில் ஒரு கிரகம் மற்றொரு கிரகத்துடன் இணைந்து சக்திவாய்ந்த ராஜயோகத்தை உருவாக்குகின்றன. இந்த பாதிப்புகள் அனைத்து ராசிகளிலும் பிரதிபலிக்கும்.
ஜோதிடத்தில் நிழல் கிரகமாகக் கருதப்படும் கேது, இப்போது சிம்ம ராசியில் இருக்கிறார். இந்த தருணத்தில் அசுர குரு என்றும் அழைக்கப்படும் சுக்கிரன் ஜூலை 4 ஆம் தேதி சிம்ம ராசிக்குள் நுழையப் போகிறார். இதன் விளைவாக, கேது-சுக்கிரன் சேர்க்கை 18 ஆண்டுகளுக்குப் பிறகு ஏற்படும். இந்த சக்திவாய்ந்த கிரகங்களின் இணைப்பு அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் பிரதிபலிக்கும். இருப்பினும், சில ராசிக்காரர்கள் இந்த இணைப்பால் சிறப்பான பலன்களை அடையப்போகிறார்கள். அவர்கள் எந்தெந்த ராசிக்காரர்கள் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு, இந்த கேது-சுக்கிரன் இணைப்பு அவர்களின் வாழ்க்கையை தலைகீழாக மாற்றப்போகிறது. இந்த காலகட்டத்தில் அவர்கள் எதிர்பாராத நிதி ஆதாயங்களைப் பெறலாம். கேது மற்றும் சுக்கிரனின் நிலை அவர்களின் தனிப்பட்ட மற்றும் தொழில்முறை வாழ்க்கையில் சிறந்த பலன்களை வழங்குகிறது. பல்வேறு வணிக ஒப்பந்தங்களிலிருந்து லாபம் ஈட்டுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. ஒரு முக்கியமான ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.
திருமண வாழ்க்கையில், மகிழ்ச்சி இருக்கும், திருமணமாகாதவர்கள் பொருத்தமான திருமண வரன்களை எதிர்பார்க்கலாம். இந்த காலகட்டத்தில் புதிய சொத்துக்களை வாங்கலாம். இந்த காலகட்டத்தில் அவர்கள் எந்த உடல்நலப் பிரச்சினைகளையும் எதிர்கொள்ள மாட்டார்கள்.
ரிஷபம்
ரிஷப ராசியின் நான்காம் வீட்டில் கேது-சுக்கிரன் சேர்க்கை நடைபெறப் போகிறது. இது அவர்கள் வாழ்க்கையில் பல நேர்மறையான மாற்றங்களைக் கொண்டுவரும். இந்த காலகட்டத்தில் அவர்களின் லாபம் இரட்டிப்பாக கிடைக்கும். நீண்ட காலமாக அவர்கள் மனதில் இருந்த குழப்பம் இப்போது முடிவுக்கு வரும். கல்வித் துறையில், அவர்கள் நிறைய நன்மைகளை எதிர்பார்க்கலாம்.
வேலையில் இருப்பவர்கள் தங்கள் வாழ்க்கையில் பெரும் முன்னேற்றத்தை எதிர்பார்க்கலாம் மற்றும் மூத்த அதிகாரிகளுடன் சிறப்பான உறவை பராமரிக்கலாம். இது உங்கள் அவர்களின் லட்சியங்களை சிரமமின்றி அடைவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கும். பொருளாதரரீதியாகவும் இந்த காலகட்டம் அவர்களுக்கு சிறப்பானதாக இருக்கும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு, கேது-சுக்கிரன் சேர்க்கை அவர்களின் வியாபாரத்தில் பல நல்ல மாற்றங்களை அளிக்கப்போகிறது. இந்த காலகட்டத்தில் அவர்கள் நிதிரீதியாக பெரும் நன்மைகளை அடையப்போகிறார்கள். இதனால் தனிப்பட்ட வாழ்க்கையிலும், தொழில் வாழ்க்கையிலும் கடின உழைப்புக்கு ஏற்ப அவர்கள் பலன்களைப் பெறுவார்கள்.
வேலையில் இருப்பவர்கள் இந்த காலகட்டத்தில் புதிய வாய்ப்புகளைப் பெறலாம் மற்றும் அவர்களுக்கு அளிக்கப்படும் வேலைகளை சரியாக முடிக்கலாம். உங்கள் மூதாதையர் சொத்திலிருந்து பெரும் லாபத்தை எதிர்பார்க்கலாம். வியாபாரத்தில் இருப்பவர்களின் புதிய முயற்சிகள் அவர்களுக்கு நல்ல பலன்களை அளிக்கும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களின் பத்தாம் வீட்டில் இந்த கேது-சுக்கிரன் இணைவு ஏற்படுகிறது. இதன் விளைவாக, தொழில், புகழ் மற்றும் அதிகாரம் அவர்களைத் தேடி வரும். அவர்களின் தொழில் வாழ்க்கையிலும், தனிப்பட்ட வாழ்க்கையிலும் பல ஆச்சரியங்கள் காத்திருக்கின்றன. புதிய தொழில் தொடங்குபவர்களுக்கு இது சாதகமான மாற்றங்களைக் கொண்டுவரும். அவர்களின் பொருளாதாரநிலையில் எதிர்பாராத முன்னேற்றம் ஏற்படும்.
திருமணமான தம்பதிகள் இந்த காலகட்டத்தில் மகிழ்ச்சியாக இருப்பார்கள். அவர்கள் வாழ்க்கையில் பல்வேறு மகிழ்ச்சியான சம்பவங்கள் நடைபெறும். வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட அதிக லாபத்தை எதிர்பார்க்கலாம். மேலும் புதிய வாகனம் மற்றும் சொத்துக்கள் வாங்குவதற்கான அதிர்ஷ்டம் கூடிவரும். இது அவர்களுக்கு வாழ்க்கையின் அனைத்து துறைகளிலும் அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications












