தமிழ்க் கடவுள் முருகனுக்கு மிகவும் பிடித்த 5 ராசிக்காரர்கள்... இவர்களுக்கு முருகனின் ஆசி பூரணமாக கிடைக்கும்...

தமிழத்தின் மிகவும் பிரபலமான விழாக்களில் ஒன்றான சூரசம்ஹராம் இன்று கொண்டாடப்படுகிறது. இந்த விழா தமிழ்க் கடவுள் முருகனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட விழாவாகும். தன்னை முழு நம்பிக்கையுடனும், பக்தியுடனும் வழிபடுபவர்களை முருகப்பெருமான் ஒருபோதும் கைவிடுவதில்லை. ஜோதிடத்தின்படி, சில ராசிக்காரர்கள் முருகப்பெருமானுக்கு மிகவும் பிடித்தவர்களாக இருப்பார்கள், மேலும் அவர்களுக்கு சிறப்பு ஆசீர்வாதத்தை வழங்குகிறார்.

முருகப்பெருமான் ஆற்றல் மற்றும் சக்தியின் உருவமாகக் கருதப்படுகிறார். எனவே அவரை வழிபடுவது நம் வாழ்க்கையில் சகல நன்மைகளையும் வழங்கும். ஜோதிடத்தின்படி இந்த குறிப்பிட்ட ராசிக்காரர்களுக்கு முருகப்பெருமானின் ஆசி முழுமையாக இருக்கும். அவர்களை தேடிவரும் துன்பங்கள் அனைத்தையும் முருகப்பெருமான் விரட்டுவார். இந்த பதிவில் எந்தெந்த ராசிக்காரர்கள் முருகப்பெருமானால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களாக இருப்பார்கள் என்று தெரிந்து கொள்ளலாம்.

Kanda Sashti 2025 Lord Murugan s Favourite Zodiac Signs

மேஷம்

முருகப்பெருமான் மேஷ ராசிக்காரர்கள் மீது மிகுந்த அன்பு கொண்டுள்ளார். அவர்களின் அனைத்து பணிகளையும் எந்தத் தடையும் இல்லாமல் முடிப்பதை அவர் உறுதி செய்கிறார். முருகரின் அருளால், அவர்கள் ஒருபோதும் நிதிப் பற்றாக்குறையை எதிர்கொள்ள மாட்டார்கள், அவர்கள் வாழ்நாள் முழுவதும் மகிழ்ச்சி மற்றும் செழிப்பால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களாக இருப்பார்கள். அவர்களின் தொழில் மற்றும் வணிகங்கள் பெரும்பாலும் லாபகரமானதாக இருக்கும். முருகனின் ஆசியால் அவர்களின் காதல் வாழ்க்கையும் சிறப்பாக இருக்கும், மேலும் அவரது ஆசீர்வாதங்களால் அவர்கள் நிதி நன்மைகளையும் பெறுகிறார்கள்.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்கள் கிரகங்களின் இளவரசரான புதனால் ஆளப்படுகிறார்கள், மேலும் இது முருகப்பெருமானுக்கு மிகவும் பிடித்த இரண்டாவது ராசியாகும். மிதுன ராசிக்காரர்களின் அனைத்து விருப்பங்களையும் அவர் நிறைவேற்றுகிறார், அவர்களின் தொழில் வாழ்க்கையில் முன்னேற்றத்தையும் நல்ல பலன்களையும் வழங்குகிறார். முருகர் அவர்களை அனைத்து பிரச்சினைகளிலிருந்தும் பாதுகாக்கிறார், மேலும் அவரது ஆசிர்வாதத்தால், அவர்கள் தொழிலிலும் வெற்றியை அடைகிறார்கள். மேலும் முருகன் ஆசியால் அவர்களின் குடும்ப வாழ்க்கையும் மகிழ்ச்சிகரமானதாக இருக்கும்.

விருச்சிகம்

விருச்சிக ராசியின் அதிபதியாக கிரகங்களின் தளபதியான செவ்வாய் இருக்கிறார், இது தமிழ்க் கடவுள் முருகனுக்கு மூன்றாவது விருப்பமான ராசியாகும். இந்த ராசியில் பிறந்தவர்கள் அதிகம் உணர்ச்சிவசப்படுபவர்கள், எனவே முருகர் அவர்களை எந்த விஷயத்திலும் அவசரப்படாமல் பாதுகாக்கிறார். கடினமான காலங்களில், அவர் எப்போதும் அவர்களைப் பாதுகாக்கிறார், மேலும் எந்த ஆபத்திலும், சிக்காமல் இருக்க அவர்களுக்கு பாதுகாப்பு அரணாக இருக்கிறார். அவரது அருளால், அவர்களின் அனைத்து கெட்ட செயல்களும் விரைவில் முடிவுக்கு வருகின்றன, மேலும் குமரனின் கருணைப் பார்வை எப்போதும் அவர்கள் மீது உள்ளது.

மகரம்

மகர ராசியின் அதிபதியாக கர்மாவின் கிரகமான் சனிபகவான் கருதப்படுகிறார். இந்த ராசிக்காரர்கள் முருகர் மீது மிகுந்த அன்பும், பக்தியும் கொண்டவர்கள். இயற்கையிலேயே நீதிமான்களாகக் கருதப்படும் மகர ராசிக்காரர்கள் எப்போதும் முருகனின் அருளைப் பெறுவார்கள். முருகப்பெருமான் அவர்களின் வாழ்க்கையில் ஏற்படும் நிதி நெருக்கடிகளைத் தடுக்கிறார். மகர ராசிக்காரர்கள் எதை அடைய முயற்சிக்கிறார்களோ, அதையெல்லாம் முருகர் வெற்றிபெறச் செய்து, அவர்களின் அனைத்து முயற்சியிலும் அவர்கள் வெற்றிபெற உதவியாக இருக்கிறார்.

கும்பம்

கும்ப ராசியின் அதிபதியாகவும் சனி பகவான் கருதப்படுகிறார். இந்த ராசிக்காரர்களுக்கு முருகர் வழங்கும் ஆசீர்வாதம் அலாதியானது. அவர் அவர்களை மகிழ்ச்சியாகவும், வளமாகவும் வைத்திருக்கிறார், ஒவ்வொரு நெருக்கடியிலிருந்தும் அவர்களைப் பாதுகாக்கிறார். முருகனின் அருளால், கும்ப ராசிக்காரர்கள் மற்றவர்களின் அன்பை எளிதில் பெறுகிறார்கள், அவர்கள் வாழ்க்கையில் உயர்ந்த அந்தஸ்தை அடைகிறார்கள். தனிப்பட்ட வாழ்க்கையிலும், தொழில் வாழ்க்கையிலும் அவர்கள் பெரிய உயரத்தை அடைவார்கள்.

Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

Story first published: Monday, October 27, 2025, 10:20 [IST]
Desktop Bottom Promotion