Latest Updates
-
திருமண உறவில் பாலியல் வன்கொடுமை: சட்டத்தின் பிடியில் சிக்கியுள்ள பெண்கள் தெரிந்துகொள்ள வேண்டிய அதிர்ச்சி உண்மைகள்! -
இந்த தேதியில் பிறந்த பெண்கள் அவங்க கணவரை கோடீஸ்வரராக்கும் அதிர்ஷ்டத்துடன் பிறந்தவர்களாம் -
முட்டையை இந்த மாதிரி பட்டாணியுடன் சேர்த்து குருமா செஞ்சு பாருங்க - டேஸ்ட் தாறுமாறா இருக்கும் -
வாஸ்து செடிகள்: 42°C வெயிலிலும் வீட்டை ஜில்லுனு வச்சுக்கணுமா? இந்த செடிகள் இருந்தா போதும்! -
5 லட்சம் ஆண்டுகளுக்கு ஆதி மனிதர்கள் இந்தியாவில் வாழ்ந்த 5 இடங்கள் - தமிழ்நாட்டின் ஒரு இடமும் இதில் இருக்காம் -
கோடை வெப்பத்தை சமாளிக்க இந்த வாஸ்து ரகசியங்கள் தெரியுமா? வீட்டை குளிர்ச்சியாக வைத்து அதிர்ஷ்டத்தை அள்ளுங்கள்! -
நார்த் இந்தியன் ஸ்டைல் தக்காளி சிக்கன் கிரேவி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, வேற லெவலில் இருக்கும் -
வார ராசிபலன் (26 April 2026 - 02 May 2026) - இந்த வாரம் இந்த 4 ராசிகளுக்கு மனஅழுத்தம் நிறைந்த வாரமாக இருக்கும் -
இன்றைய ராசிபலன் 26 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ஜாலியான நாளாக இருக்குமாம் -
மே மாதத்தில் நடக்கும் கிரக பெயர்ச்சிகளால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா?
12 ஆண்டுகள் கழித்து குரு உருவாக்கும் சக்திவாய்ந்த ராஜயோகம்: அக்டோபரில் இந்த 3 ராசிக்கு ஜாக்பாட் அடிக்கும்..
Kendra Trikon Rajyog 2025: ஜோதிடத்தின் படி கிரகங்கள் ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ராசியை மாற்றி, சுப மற்றும் ராஜயோகங்களை உருவாக்கி மனித வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் நவகிரகங்களில் மிகவும் மங்களகரமான கிரகம் தான் குரு பகவான். இந்த குரு பகவான் தற்போது மிதுன ராசியில் பயணித்து வருகிறார்.
இந்நிலையில் அக்டோபர் 18 ஆம் தேதி குரு பகவான் சந்திரனின் கடக ராசிக்குள் நுழையவுள்ளார். இந்த கடக ராசிக்கு குரு பகவான் சுமார் 12 ஆண்டுகளுக்கு பின் செல்கிறார். கடக ராசிக்கு செல்லும் குரு பகவானால் கேந்திர திரிகோண ராஜயோகம் உருவாகவுள்ளது. இந்த ராஜயோகத்தின் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும்.

முக்கியமாக சில ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசித்து, தொழில் மற்றும் வணிகத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். மேலும் வாழ்க்கையில் மகிழ்ச்சி பெருகும். ஒவ்வொரு வேலையிலும் வெற்றி கிடைக்கும். இப்போது கடக ராசிக்கு செல்லும் குரு பகவானால் உருவாகும் கேந்திர திரிகோண ராஜயோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
கடகம்
கடக ராசியின் முதல் வீட்டிற்கு குரு பகவான் சென்று கேந்திர திரிகோண ராஜயோகத்தை உருவாக்கவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் நிறைய பணத்தை சம்பாதிக்கும் வாய்ப்பைப் பெறுவார்கள். ஆளுமையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் காண்பார்கள். சிலருக்கு பதவி உயவு, சம்பள உயர்வு போன்றவை கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன. நீதிமன்ற வழக்குகளில் நல்ல வெற்றி கிடைக்கும். திருமணமானவர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சி பெருகும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன
மிதுனம்
மிதுன ராசியின் 2 ஆவது வீட்டிற்கு குரு பகவான் சென்று கேந்திர திரிகோண ராஜயோகத்தை உருவாக்கவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் எதிர்பாராத நிதி ஆதாயங்களைப் பெறுவார்கள். சமூகத்தில் நல்ல உயரத்தை அடைவார்கள். புதிய வருமான வழிகள் திறக்கப்படும். குருவின் அருளால் பண பிரச்சனைகள் முடிவுக்கு வரும். பேச்சாற்றல் அதிகரிக்கும். பேச்சால் பல முக்கியமான வேலைகளை வெற்றிகரமாக முடிப்பீர்கள். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். வேலை மற்றும் வணிகத்தில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பீர்கள்.
மீனம்
மீன ராசியின் 5 ஆவது வீட்டிற்கு குரு பகவான் சென்று கேந்திர திரிகோண ராஜயோகத்தை உருவாக்கவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் புதிதாக திருமணம் செய்திருந்தால், அவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். காதல் வாழ்க்கையில் இருந்த பிரச்சனைகள் தீர்ந்து, காதலர்களிடையேயான பிணைப்பு அதிகரிக்கும். பணிபுரிபவர்கள் முன்னேற்றத்திற்கான வாய்ப்புக்களைப் பெறுவார்கள். எதிர்பாராத நிதி ஆதாயங்களைப் பெறக்கூடும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன. திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் கிடைக்கும் வாய்ப்புள்ளது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications