For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மகாபாரதத்திற்கு பின்னர் பாண்டவர்களும், ஸ்ரீ கிருஷ்ணரும் என்ன ஆனார்கள்?

By Ashok CR
|

மகாபாரதத்திற்கு பின்னர் பாண்டவர்கள் தங்கள் ராஜ்யத்திற்கு திரும்பினார்கள். பின் சில ஆண்டு காலங்கள் (கிட்டத்தட்ட 35 ஆண்டுகள்) தங்கள் ராஜ்யத்தை ஆண்ட பிறகு, தங்கள் பிறப்பிற்கான நோக்கத்தை பூர்த்தி செய்ததால், இவ்வுலகை விட்டு நிரந்தரமாக பிரிந்து சென்றனர்.

இறப்பில்லாத புராண கதாநாயகன்: மகாபாரதத்தை சேர்ந்த அஸ்வத்தாமா

மகாபாரதத்தின் மாசாலா பர்வாவும், மகாப்ரஸ்தானிக்கா பர்வாவும் இதனை பற்றி விரிவாக கூறுகிறது. அதிலிருந்து சில முக்கிய நிகழ்வுகள் கீழ் வருமாறு:

மகாபாரதம் சொல்லும் பயனுள்ள வாழ்க்கைப் பாடங்கள்!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
 காந்தாரியின் சாபத்தை ஏற்ற கிருஷ்ணர்

காந்தாரியின் சாபத்தை ஏற்ற கிருஷ்ணர்

மகாபாரத போர் முடிந்தவுடன், தன் மகன்கள் இறந்த சோகத்தால், யாதவர்களும் இதேப்போன்ற சாவை சந்திப்பார்கள் என காந்தாரி ஸ்ரீ கிருஷ்ணரை சபித்தாள். இந்த சாபத்தை ஸ்ரீ கிருஷ்ணரும் ஏற்றுக் கொண்டார்.

குறும்பு செய்த கிருஷ்ணரின் மகன்கள்

குறும்பு செய்த கிருஷ்ணரின் மகன்கள்

35 ஆண்டுகளுக்கு பிறகு ஸ்ரீ கிருஷ்ணரின் மகன்கள் சில ரிஷிகளிடம் குறும்பு செய்து விளையாடியதால் சாபத்தை பெற்றனர். கர்ப்பிணி பெண்ணை போல் வேடமணிந்து கொண்ட சம்பா பிற யாதவர்களுடன் சேர்ந்து கொண்டு அங்கிருந்த சில ரிஷிகளிடம் சென்று, தன் கருவில் இருக்கும் குழந்தை ஆணா பெண்ணா என கூறும்படி கேட்டனர். அதில் கோபமடைந்த ஒரு ரிஷி, அவள் ஒரு இரும்பு துண்டை பெற்றெடுப்பாள் என்றும், அது அவனின் வம்சத்தையே அழித்து விடும் என்றும் சாபமளித்தார்.

பிரபாசாவிற்கு புனித பயணம்

பிரபாசாவிற்கு புனித பயணம்

தீய சக்திகளும், பாவ நடவடிக்கைகளும் துவாரகையில் அதிகரித்தது. மற்றவர்களை பிரபாசாவிற்கு புனித பயணம் மேற்கொள்ள ஸ்ரீ கிருஷ்ணர் அறிவுறுத்துகிறார்.

ஒருவருக்கொருவர் கொன்று இறந்த யாதவர்கள்

ஒருவருக்கொருவர் கொன்று இறந்த யாதவர்கள்

பிரபாசாவில் யாதவர்கள் மது அருந்தி போதையில் மதி மயங்கினார்கள். அவர்களுக்குள் மூண்ட சண்டையில் யாதவர்கள் ஒருவருக்கொருவர் கொன்று இறந்தனர். ஸ்ரீ கிருஷ்ணர், தரூகா, வப்ரூ மற்றும் பலராமன் மட்டுமே உயிருடன் இருந்தனர். ஆனால் பின்னர் வப்ரூவும், பலராமனும் கூட இந்த உலகை விட்டு பிரிந்தனர்.

அவதாரத்தை முடித்த அர்ஜுனன்

அவதாரத்தை முடித்த அர்ஜுனன்

அர்ஜுனனிடம் தகவலை கூறி உதவி கேட்க தரூகாவை அனுப்பி வைத்தார் ஸ்ரீ கிருஷ்ணர். இந்த சமயத்தில், ஒரு வேடன் செலுத்திய அம்பு ஸ்ரீ கிருஷ்ணரின் பாதத்தில் தவறுதலாக பாய்ந்தது. இதனால் அவர் காயமடைந்தார். வேடனை தேற்றிய ஸ்ரீ கிருஷ்ணர் விஷ்ணு பகவானின் ஓவியத்தோடு ஒன்றிப்போனார். அதோடு இந்த அவதாரத்தை முடித்துக் கொண்டு உலகத்தை விட்டும் பிரிந்து சென்றார்.

கிருஷ்ணரின் மனைவிகளை காக்க முடியாமல் தோற்ற அர்ஜுனன்

கிருஷ்ணரின் மனைவிகளை காக்க முடியாமல் தோற்ற அர்ஜுனன்

அதன் பின் அங்கே வந்து சேர்ந்தான் அர்ஜுனன். ஸ்ரீ கிருஷ்ணரின் விதவை ராணிகளை காக்க முயற்சி செய்தான். ஆனால் காட்டுமிராண்டிகளை எதிர்த்து போட்ட சண்டையில் தோல்வி அடைந்தான். பாண்டவர்களின் வாழ்க்கைக்கான நோக்கம் முடிந்து விட்டது என வேதவியாசர் அர்ஜுனனுக்கு அறிவுறுத்தினார்.

இமயமலை பயணத்தை மேற்கொண்ட பாண்டவர்கள்

இமயமலை பயணத்தை மேற்கொண்ட பாண்டவர்கள்

பரிக்ஷித்திற்கு யுதிஷ்டர் முடிசூட்டிய பின்பு 5 பாண்டவர்களும் திரௌபதியுடன் இமயமலை நோக்கி தங்கள் பயணத்தை மேற்கொண்டனர். மலையின் மீது செல்லும் போது ஒரு நாய் அவர்களை பின்பற்றி சென்றது.

கீழே விழுந்த பாண்டவர்கள் மற்றும் த்ரௌபதி

கீழே விழுந்த பாண்டவர்கள் மற்றும் த்ரௌபதி

மலையை ஏறும் வழியில் திரௌபதி, சகாதேவன், நகுலன், அர்ஜுனன் மற்றும் பீமன், அதே வரிசையில் ஒருவர் பின் ஒருவராக கீழே விழுந்து இறந்தனர்.

யுதிஷ்டரை வரவேற்ற இந்திரன்

யுதிஷ்டரை வரவேற்ற இந்திரன்

யுதிஷ்டர் மட்டுமே உயிருடன் இருந்தார். அவரை வரவேற்க சொர்க்கத்திற்கு தன் ரதத்தில் வந்து சேர்ந்தான் இந்திரன். அந்த நாயை அப்படியே விட்டு விட்டு, அந்த ரதத்தில் ஏறி சொர்க்கத்திற்கு செல்லுமாறு யுதிஷ்டரிடம் இந்திரன் கூறினார்.

சோதனையில் வென்ற யுதிஷ்டர்

சோதனையில் வென்ற யுதிஷ்டர்

அந்த நாய் தனக்கு நண்பனாகி விட்டதால், தன்னுடன் நாய் வராத வரை தான் சொர்க்கத்திற்குள் நுழைய மாட்டேன் என மறுத்தார் யுதிஷ்டர். உடனே அந்த நாய் எமனாக உரு மாறியது. தன் சோதனையில் தேர்ச்சி பெற்று விட்டதாக யுதிஷ்டரிடம் எமன் கூறினார். அதன் பின் யுதிஷ்டர் சொர்க்கத்திற்குள் நுழைந்தார்.

பாற்கடலுக்குள் மூழ்கிய துவாரகை

பாற்கடலுக்குள் மூழ்கிய துவாரகை

இப்படி பல விதமான நிகழ்வுகளுக்கு பிறகு ஸ்ரீ கிருஷ்ணரும் பாண்டவர்களும் இந்த உலகை விட்டு சென்றனர். துவாரகை நகரம் பாற்கடலுக்குள் மூழ்கியது. மெதுவாக தற்போதுள்ள கலியுகமும் தொடங்கியது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

What Happened To Pandavas And Shri Krishna After Mahabharat?

After Mahabharat they return to their respective kingdoms, rule for few decades (around 35 years) and then leave this world for ever having served their purpose of life. The Mausala Parva and the Mahaprasthanika Parva of Mahabharat has the detailed description about it. The major events in breif are:
Desktop Bottom Promotion