Just In
- 7 hrs ago 100 ஆண்டுகளுக்கு பின் உருவாகியுள்ள திரிகிரக யோகம்: அடுத்த 5 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்..
- 8 hrs ago இந்த பட்டனை அழுத்தினால் கார் உடனடியாக கூலிங் ஆகிடும்... இது பலருக்கும் தெரியாத விஷயம்..!
- 10 hrs ago சப்பாத்திக்கு ஏற்ற மணமணக்கும்... ருசியான.. சைவ சிக்கன் கிரேவியை எப்படி செய்யணும் தெரியுமா?
- 11 hrs ago உங்க பற்கள் வலிமையாகவும், கிருமிகள் இல்லாததாகவும் இருக்கணுமா? இதில் ஒன்றை தினமும் சாப்பிடுங்க...!
Don't Miss
- News 88 தொகுதிகள்.. இன்று 13 மாநிலத்தில் 2ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா, கர்நாடகாவிலும் ஓட்டுப்பதிவு
- Technology இனி Signal Weak சிக்கலே இருக்காது.. மொபைல் Settings-ல இதை பண்ணா போதும்.. இன்டர்நெட் ஸ்பீட் சும்மா பிச்சிக்கும்
- Finance வேலைக்கு சேர்ந்த 6 மாசத்திலேயே ரிசைன்.. அனல் பறக்கும் விவாதம்..!
- Automobiles சாதா கிளாஸ் டிக்கெட்டை வாங்கிட்டு முதல் வகுப்பில் பயணிக்கனுமா!! விமான பணி பெண் சொல்லும் மூன்று ரகசிய வழிகள்!
- Sports வாழ்க்கைன்னா ஒரு சில அடிகள் விழத்தான் செய்யும்.. எல்லா போட்டியிலும் வெல்ல முடியாது.. பாட் கம்மின்ஸ்
- Movies Actor Dhanush: ஜூலை மாதத்திற்கு தள்ளிப்போகும் தனுஷின் ராயன் பட ரிலீஸ்.. கமல்தான் காரணமா?
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
நீங்கள் அறிந்திராத பொது மருத்துவனையில் இருக்கும் பிரசவ அறை பற்றிய உண்மைகள்!
பெண்களின் வாழ்வில் மறக்க முடியாத ஓர் தருணம் தான் பிரசவ காலம். ஓர் உயிரைப் வெற்றிகரமாக பெற்றெடுக்கும் அந்த நாள் உண்மையிலேயே பெண்களுக்கு மிகவும் சந்தோஷமான நாளாகும். இருப்பினும் சில பெண்களுக்கு இந்நாள் மிகவும் கொடிய நாளாகவும் இருக்கும். இதற்கு காரணம் சில பொது மருத்துவமனையில் உள்ள பிரசவ அறையில் அவர்களை நடத்திய விதம் தான்.
பலருக்கும் நம் இந்தியாவில் உள்ள சில பொது மருத்துவனையில் இருக்கும் பிரசவ அறையில் நடக்கும் அட்டூழியம் மற்றும் இரக்கமற்ற தன்மையுடன் நடந்து கொள்ளும் விதம் பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை. உண்மையிலேயே அவற்றைக் கேட்டால், நீங்களே அதிர்ச்சியடைவீர்கள். இங்கு அவற்றில் சில உண்மைகளை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறோம். குறிப்பாக இவை வட இந்தியாவில் தான் அதிகம் நடக்கிறது.
அவமானம்
பிரசவ அறையில் உள்ள கர்ப்பிணிகள் நிம்மதியாக மரியாதையுடன் நடத்தப்படுவார்கள் என்று நீங்கள் நினைக்காதீர்கள். சில பொது மருத்துவமனையில், அங்கு வேலை செய்யும் பணியாளர்கள் அவர்களை மிகவும் இழிவாக நடத்துவதோடு, மிகுந்த அவமானத்திற்கும் உள்ளாக்குவார்கள்.
தரையில் பிரசவம் நடக்கும்
இன்னும் சில பொது மருத்துவமனைகளில், அங்குள்ள பணியாளர்கள் பெட்ஷீட்டில் கறை படியும் என்று, கர்ப்பிணிகளுக்கு தரையில் பிரசவம் செய்வார்கள். இப்படியெல்லாம் தான் சில மருத்துவமனைகளில் கர்ப்பிணிகள் மிகவும் கேவலமாக நடத்தப்படுகிறார்கள்.
பணியாளர்களின் கோபம்
பொது மருத்துவமனைகளில் அளவுக்கு அதிகமான நோயாளிகள் வருவதால், அங்கு வேலை செய்பவர்கள் யாரைக் கவனிப்பது என்று தெரியாமல் அதிகப்படியான வேலைப்பளுவினால் சில சமயங்களில் தங்களின் அமைதியை இழந்து, நோயாளிகளுடன் அமைதியாக பேச வேண்டியவர்கள், மிகுந்த கோபத்துடன் நடந்து கொள்கிறார்கள். உண்மை தானே! யார் தான் கோபப்படமாட்டார்கள்?
அடிப்பது
இன்னும் சில பொது மருத்துவமனைகளில் நடக்கும் சகிக்கமுடியாத உண்மை என்னவெனில், கர்ப்பிணிகள் வலியால் துடித்து அழும் போது, கர்ப்பிணிகளை அடிக்கவோ, குத்தவோ செய்வார்களாம்.
பணம் தான் பேசும்
சில மருத்துவமனைகளில் பணம் தான் பேசும். அதிலும் பிரசவத்திற்கு கட்டணம் ரூ.1,000 என்பது மட்டுமல்லாமல், தொப்புள் கொடியை வெட்ட ரூ.500 கட்ட வேண்டியதிருக்கும். இப்படி நம் இந்திய மருத்துவ அமைப்பு இருந்தால் பிரசவத்தினால் இறக்கும் பெண்களின் எண்ணிக்கை எப்படி குறையும்?
ஜெயில் கைதி
சில பொது மருத்துவமனையில் உள்ள பிரசவ அறையில் இருக்கும் கர்ப்பிணிகள் ஜெயில் கைதிகளைப் போல் நடத்தப்படுவார்கள். அதுவும் சொல்ல முடியாத அளவில் கர்ப்பிணிகள் துன்புறுத்தப்படுவார்கள்.
பிரசவம் வேகமாக நடைபெற..
பிரசவம் வேகமாக நடைபெறுவதற்கு சில மருத்துவமனைகளில் தேவையில்லாத மருந்துகளான Buscopan மற்றும் Drotaverine போன்றவற்றைப் பயன்படுத்துவது மற்றும் தேவையில்லாமல் பிறப்புறுப்பை வெட்டிவிடுவது என்று செய்வார்களாம்.
குறிப்பு
நிச்சயம் இவையெல்லாம் உங்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தலாம். ஆனால் இந்த மாதிரியான விஷயங்கள் அனைத்து பொது மருத்துவமனைகளிலும் நடப்பதில்லை. இருப்பினும் இப்படியும் சில மருத்துவமனைகளில் கர்ப்பிணிகளுக்கு கொடுமையான விஷயங்கள் நமக்கும் தெரியாமல் நடக்கின்றன.