பெண்கள் ஏன் 'அந்த' விஷயத்தில் நடிக்கிறார்கள்?

By Srinivasan P M

பெண்கள் உறவின் போது ஏற்படும் ஆர்கஸம் அல்லது உறவின் உச்ச நிலையை அடைவதில் பொதுவாக உண்மையாக இல்லாமல் நடிப்பார்கள் என்பது அனைவரும் அறிந்த விஷயம். அவர்கள் சில சமயம் இதுப்போன்ற நாடகங்களை தங்கள் சொந்த விருப்பங்களுக்காக அல்லது அவர்களுடைய துணையின் விருப்பத்திற்காக செய்வதுண்டு. அவர்கள் எல்லா நேரமும் திருப்தி அடைவது இல்லை என்பது உண்மையே.

பெண்மையின் உச்சம் ஆண்களின் உச்சத்தைப் போலல்லாமல், கண்டுபிடிப்பது சற்று ஜாலம் நிறைந்த ஒன்று. பெண்களைப் பொறுத்தவரை காதலிப்பதும் உறவில் ஈடுபடுவதும் ஏறக்குறைய ஒன்று தான். அதனால் தான் அவர்கள் உறவின் போது இன்பம் அடைந்ததாக ஏன் நடிக்கிறார்கள் என்பதைத் தெரிந்து கொள்வது மிகவும் சுவாரஸ்யமான ஒன்றாகிறது.

அடிக்கடி ஆர்கஸம் பெண்களின் ஆரோக்கியத்திற்கு நல்லது!

உறவு முறைகளைப் பலப்படுத்த ஒரு இனிமையான உறவின் முடிவு அவசியமாகிறது. ஆண்கள் இந்த விஷயத்தில் மிகவும் இளகிய மனம் கொண்டவர்களாக இருப்பதோடு, விரைவில் மனமுடைபவர்களாகவும் பாதுகாப்பற்ற உணர்வுடனும் இருப்பதால், பெண் இந்த உணர்வு பூர்வமான விஷயத்தில் பொய் சொல்ல நேரிடுகிறது. ஒரு பெண்ணை திருப்திப்படுத்த இயலாத போது, ஒரு ஆண் தன்னை முழு மனிதனாக உணர்வதில்லை.

பெண்களே... 'அந்த' இடத்தில் துர்நாற்றமா? இதோ 15 சூப்பர் டிப்ஸ்...

ஆனால், பெண்கள் தங்கள் உறவின் உச்சத்தைப் பற்றி பொய்யுரைப்பதற்கு இது மட்டும் காரணமல்ல. அவர்கள் பல காரணங்களுக்காக உச்ச நிலை அடைவதில் நடிக்கிறார்கள். சில சமயம் அவர்கள் காதல் லீலைகளைத் தொடரவும், சில சமயங்களில் அந்தத் தருணங்களை விரைவுப்படுத்தவும் அவர்கள் அவ்வாறு செய்வதுண்டு. ஆனால் உண்மையான ரகசியங்கள் இப்போது வெளிவந்துவிட்டன. இப்போது ஏன் அந்த விஷயத்தில் அவர்கள் பொய் சொல்கிறார்கள் என்று பார்ப்போமா?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அவளின் ஆணை குஷிப்படுத்த

அவளின் ஆணை குஷிப்படுத்த

சில சமயங்களில் பெண்கள் தங்கள் துணையைத் திருப்திப்படுத்த மட்டுமே உடலுறவு வைத்துக் கொள்வதுண்டு. ஏனென்றால் அவனுடைய உணர்வுகளை சிதைக்காமல் இருப்பதற்காக அவள் அந்த பொய்யான திருப்தியை அடைந்ததாகக் காட்டலாம்.

சீக்கிரம் முடிக்க

சீக்கிரம் முடிக்க

உறவின் போது அவள் சோர்வாகவும், உறங்க வேண்டும் என்ற எண்ணத்திலும் இருந்தால், கட்டில் விளையாட்டில் ஆர்வம் குறையும். இதுப்போன்ற வேளைகளில் அவள் சீக்கிரம் உறங்கச் செல்வதற்காக, தான் திருப்தியடைந்ததைப் போல காட்டிக் கொண்டு நடிப்பாள்.

ஆண்களின் இளகிய உணர்வுகள் (ஈகோ)

ஆண்களின் இளகிய உணர்வுகள் (ஈகோ)

ஒரு மனிதனுக்கு தன் பெண் துணையை திருப்தி செய்வது தன் பலத்தை விளக்கும் ஒரு செயலாகும். அவள் உச்சத்தை எட்டாவிட்டால், தான் சரியாக செயல்படவில்லை என நினைத்துக் கொண்டு மனமுடைந்து போவான். அதனால் தான் பெண்கள் தங்களுக்கு உச்சம் வரவில்லை என்பதை ஒப்புக்கொள்வதில்லை

இவள் அதுக்குச் சரிப்பட்டு வரமாட்டானு நெனச்சிட்டா?

இவள் அதுக்குச் சரிப்பட்டு வரமாட்டானு நெனச்சிட்டா?

ஒரு பெண்ணை முத்திரை குத்த ஆண்கள் நீண்ட நேரம் எடுத்துக் கொள்வதில்லை. ஒரு பெண் கட்டிலில் சில முறை தொடர்ந்து உச்ச நிலையை அடையாவிட்டால், அவளின் துணை அவள் இதற்குச் சரிப்படமாட்டாள் என்றோ அல்லது கட்டிலில் அவள் அவ்வளவாக சுகம் தரமாட்டாள் என்றோ முடிவுகட்டி விடுவான்.

காதல் லீலைகளைக் கெடுக்க மனமில்லாமல்

காதல் லீலைகளைக் கெடுக்க மனமில்லாமல்

உறவு என்பது உச்சத்தை அடைவது மட்டுமல்ல. இந்த மொத்த விளையாட்டிலும் உள்ள லீலைகளையும் அடக்கியது. உச்சம் எட்டாத போது லீலைகளை ரசிக்க இயலாமல் போய்விடும் என்பதால், உச்சம் வந்ததைப் போல் நடித்து லீலைகளைத் தொடர முயல்வார்கள்.

அவனை இழந்துவிடுவொமோ என்ற பயம்

அவனை இழந்துவிடுவொமோ என்ற பயம்

பெண்கள் தங்களுக்குப் பிடித்த அல்லது வேண்டியவற்றை கேட்டுப் பெறத் தயக்கம் காட்டுவார்கள். அவர்கள் தங்கள் ஆண்மகன் தன்னுடைய வழியிலேயே இருக்கவும், தடம் மாறாமல் இருக்கவும் விரும்பி, இதுப்போன்று சில சமயங்களில் நடிப்பதுண்டு.

அவன் பிற அனைத்தையும் சரியாகச் செய்கிறான்

அவன் பிற அனைத்தையும் சரியாகச் செய்கிறான்

அவளுடனான அவன் உறவு முதல் முறையாக இருந்து, அவன் "அதைத்" தவிர அனைத்தையும் சரியாகச் செய்திருந்தால், அவள் உச்சத்தை எட்டியதாகக் காட்டி அவனை மகிழச்செய்வாள்.

பெண்களுக்கு அந்த விஷயத்தில் நடிப்பது பிடிக்கும்

பெண்களுக்கு அந்த விஷயத்தில் நடிப்பது பிடிக்கும்

பெண்கள் ஆண்களை விட அந்த விஷயத்தில் இயல்முறையானவர்கள். உறவின் முடிவு இனிதாக இருக்க விரும்புவார்கள். இதற்காகவே அவர்கள் "அதை" அடைந்து விட்டதாக நடிப்பை வெளிப்படுத்துவார்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Desktop Bottom Promotion